ETV Bharat / state

ஜீவனாம்சம் கேட்டு மகன் கடத்தல்: காவல் கண்காணிப்பாளரிடம் தாய் புகார்!

author img

By

Published : Aug 10, 2021, 4:14 PM IST

ஜீவனாம்சம் கேட்டு தனது மகனை அவரது மனைவி வீட்டார் கடத்திச்சென்றதாக ஈரோடு காவல் கண்காணிப்பாளரிடம் பெண் புகார் அளித்துள்ளார்.

the-mother-complained-in-erode-that-her-son-was-abducted-by-his-wife-relatives-for-asking-compensation
ஜீவனாம்சம் கேட்டு மகனை கடத்தியதாக காவல் கண்காணிப்பாளரிடம் தாய் புகார்!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர் இந்திராணி. கல்லூரி பேராசிரியராகப் பணியாற்றிவரும் இவர், இன்று (ஆகஸ்ட் 10) ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் ஒன்றை அளித்தார்.

அதில், பொறியாளராக உள்ள தனது மகன் கிருஷ்ணாவுக்கும்(32), வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவியா என்பவருக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றதாகவும், கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கேட்டு தனது மகன் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜீவனாம்சம் கேட்டு மகனை கடத்தியதாக காவல் கண்காணிப்பாளரிடம் தாய் புகார்!

வழக்கு விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், கடந்த 8ஆம் தேதி தனது மகனை மனைவியின் உறவினர்கள் கூலிப்படை ஆட்களை வைத்து தாக்கி கடத்திச் சென்றுள்ளதாகவும், இதுதொடர்பாக கோபி காவல் நிலையத்தில் புகார் அளித்து எவ்வித நடவடிக்கையும் இல்லாததால், தற்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

புகார் மனு அளித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய இந்திராணி, தனது மகன் கிருஷ்ணாவை உயிருடன் மீட்டுத்தர காவல் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இதையும் படிங்க: நகை திருடிய பெண்கள்: சிசிடிவி உதவியுடன் பிடித்த காவல் துறை

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர் இந்திராணி. கல்லூரி பேராசிரியராகப் பணியாற்றிவரும் இவர், இன்று (ஆகஸ்ட் 10) ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் ஒன்றை அளித்தார்.

அதில், பொறியாளராக உள்ள தனது மகன் கிருஷ்ணாவுக்கும்(32), வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவியா என்பவருக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றதாகவும், கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கேட்டு தனது மகன் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜீவனாம்சம் கேட்டு மகனை கடத்தியதாக காவல் கண்காணிப்பாளரிடம் தாய் புகார்!

வழக்கு விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், கடந்த 8ஆம் தேதி தனது மகனை மனைவியின் உறவினர்கள் கூலிப்படை ஆட்களை வைத்து தாக்கி கடத்திச் சென்றுள்ளதாகவும், இதுதொடர்பாக கோபி காவல் நிலையத்தில் புகார் அளித்து எவ்வித நடவடிக்கையும் இல்லாததால், தற்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

புகார் மனு அளித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய இந்திராணி, தனது மகன் கிருஷ்ணாவை உயிருடன் மீட்டுத்தர காவல் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இதையும் படிங்க: நகை திருடிய பெண்கள்: சிசிடிவி உதவியுடன் பிடித்த காவல் துறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.