ETV Bharat / state

செல்போனால் நேர்ந்த சோகம்: பெற்றோர் திட்டியதால் சிறுமி தற்கொலை

author img

By

Published : Sep 21, 2020, 1:16 AM IST

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே செல்போனில் விளையாடியது குறித்து பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த சிறுமி உடலில் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலை செய்துகொண்டார்.

பெற்றோர் திட்டியதால் சிறுமி தற்கொலை
பெற்றோர் திட்டியதால் சிறுமி தற்கொலை

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகேவுள்ள நஞ்சைபுளியம்பட்டியைச் சேர்ந்தவர் கட்டட தொழிலாளி வேலுமணி. இவரது 13 வயதுடைய மகள், பங்களாபுதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார்.

கரோனா அச்சம் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் வீட்டிலிருந்தபடியே செல்போன் மூலம் இணைய வழி கல்வியை சிறுமி கற்றுவந்தார்.

இந்நிலையில், செல்போனில் அடிக்கடி சிறுமி விளையாடியபடி இருந்துள்ளார். இதனை கண்ட அவரது பெற்றோர் சிறுமியை கண்டித்துள்ளனர். இதனால், மனவேதனையிலிருந்த சிறுமி, அவரது பெற்றோர் வேலைக்குச் சென்ற பிறகு தன் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

பின்னர் வீட்டிலிருந்து புகை வெளியேவருவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சிறுமி உடல் முழுதும் எரிந்து உயிரிழந்து கிடந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த பங்களாபுதூர் காவல் துறையினர் சிறுமியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிறுமியின் தற்கொலை குறித்து அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல..

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ கீழே உள்ள 24 மணி நேர தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு மையம் - 044- 2464 0050, மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104

இதையும் படிங்க: காதலித்த இளைஞரைக் கைதுசெய்யக் கோரிய கர்ப்பமான சிறுமி; பூச்சி மருந்து உண்டு உயிரிழப்பு!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகேவுள்ள நஞ்சைபுளியம்பட்டியைச் சேர்ந்தவர் கட்டட தொழிலாளி வேலுமணி. இவரது 13 வயதுடைய மகள், பங்களாபுதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார்.

கரோனா அச்சம் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் வீட்டிலிருந்தபடியே செல்போன் மூலம் இணைய வழி கல்வியை சிறுமி கற்றுவந்தார்.

இந்நிலையில், செல்போனில் அடிக்கடி சிறுமி விளையாடியபடி இருந்துள்ளார். இதனை கண்ட அவரது பெற்றோர் சிறுமியை கண்டித்துள்ளனர். இதனால், மனவேதனையிலிருந்த சிறுமி, அவரது பெற்றோர் வேலைக்குச் சென்ற பிறகு தன் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

பின்னர் வீட்டிலிருந்து புகை வெளியேவருவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சிறுமி உடல் முழுதும் எரிந்து உயிரிழந்து கிடந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த பங்களாபுதூர் காவல் துறையினர் சிறுமியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிறுமியின் தற்கொலை குறித்து அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல..

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ கீழே உள்ள 24 மணி நேர தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு மையம் - 044- 2464 0050, மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104

இதையும் படிங்க: காதலித்த இளைஞரைக் கைதுசெய்யக் கோரிய கர்ப்பமான சிறுமி; பூச்சி மருந்து உண்டு உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.