ஈரோடு: சத்தியமங்கலம் பகுதியில் உள்ள பள்ளி வாகனங்களில் முன்புறம் மற்றும் பின்புறமாக கேமரா பொருத்தி புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் வாகனங்கள் இயக்கப்படுகிறதா என மாவட்ட அளவிலான பாதுகாப்பு கமிட்டியினர் இன்று 126 பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர். தமிழகத்தில் இயக்கப்படும் பள்ளி வாகனங்கள் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கட் ரமணி தலைவராகவும் துணை காவல் கண்காணிப்பாளர் அஜ்மல் ஜமால், வட்டார கல்வி அலுவலர் தேவகி, மோட்டார் வாகன ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் கமிட்டி உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட புதிய கமிட்டியினரால் பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
இக்குழுவினர் இன்று சத்தியமங்கலம் பகுதியில் உள்ள 29 பள்ளிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 166 பள்ளி வேன், பேருந்துகளை ஆய்வு செய்தனர். இந்தாண்டு புதியதாக பள்ளி வாகனங்களில் முகப்பு மற்றும் பின்புறமாக ஜிபிஆர்எஸ் சென்சார் கருவியுடன் தனித்தனி கேமராவும் வாகனத்தின் உள்ளேயும் கேமரா பொருத்தப்பட்டு ஓட்டுநர் அருகே டிஜிட்டர் திரையில் ஓட்டுநரை கண்காணிக்கும் படி வைக்கப்பட்டுள்ளது. பள்ளி வாகனம் பின்பறம் இயக்கும்போது பின்புறமாக குழந்தைகள் நின்றிருந்தால் பீப் ஒலியுடன் அலர்ட் ஒலி எழுப்படும் வசதிகளையும் முன்னிறுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனால் குழந்தைகள் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறதுஎன உறுதியளிக்கப்பட்டுள்ளது. மேலும் வாகனத்தின் உள்புறம் ஓட்டை ஏதும் உள்ளதா என்றும் அவசர கால கதவுகள் துருப்பிடிக்காமல் நல்ல நிலையில் உள்ளதையும் உறுதி செய்யப்பட்டது. மேலும் வேகக் கட்டுபாட்டு கருவி, பள்ளி குழந்தைகள் புத்தகபை வைக்க இடம், தீயணைப்பு கருவி போன்ற அடிப்படை வசதிகளையும் கமிட்டியினர் ஆய்வு செய்தனர். இந்த கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையில் வாகனங்கள் இயக்க அனுமதிக்கப்படும்.
இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கட்ரமணி கூறுகையில், “சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி இந்தாண்டு குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதியாக வாகனத்தின் முன்புறம், பின்புறம், வாகனத்தின் உள்ளே கேமரா வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும். இதனால் வாகனம் எங்கு சென்று கொண்டிருக்கிறது என்பதை கூட உறுதி செய்யமுடியும். சத்தியமங்கலத்தில் இன்று நடைபெற்ற பள்ளி வாகனங்கள் ஆய்வில் 126 வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் உறுதி செய்யப்பட்டன.
மேலும் ஓட்டுநர்களுக்கு இலவசமாக கண்பரிசோதனையும் செய்யப்பட்டது” என்றார். கடந்த 2012ம் ஆண்டு பள்ளி வாகனம் சென்று கொண்டிருந்த போது பேருந்து தளத்திலிருந்த துளையில் விழுந்து ஒரு குழந்தை உயிரிழந்தது. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மாநில அளவில் கமிட்டி அமைத்து இனி இதுபோன்று நடக்கக்கூடாது என உத்தரவிட்டது.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி திறக்கப்படுவதற்கு முன்பாக இது போன்ற சோதனை நடத்தப்பட்டு முறையாக பொது சாலையில் இயக்க தகுதி உள்ளதா என பரிசோதனைகள் நடைபெறும், அந்த வகையில் இம்முறை கூடுதல் கவணத்துடனும், விதிமுறைகளுடனும் நீதிமன்றம் உத்தரிவிட்டதையடுத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆய்வின்போது குறை ஏதும் இருந்தால் அது சரி செய்யும் வரை வாகனத்தை இயக்கக்கூடாது எனவும் வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதையும் படிஙக: தென்காசி விபத்தில் 5 பேர் உயிரிழப்பு எதிரொலி; பள்ளியில் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டதா? என அதிகாரிகள் விசாரணை