ETV Bharat / state

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: சட்டப்பேரவை உறுப்பினர்கள் அலுவலகங்களுக்கு சீல்!

author img

By

Published : Feb 27, 2021, 8:20 PM IST

ஈரோடு: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து பவானிசாகர் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலங்கள், ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

seal
seal

தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைப்பெறும் என இந்திய தேர்தல் ஆணையம் நேற்று (பிப்.26) அறிவித்தது. தேர்தல் அட்டவணை வெளியானதைத் தொடர்ந்து, தேர்தல் விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இதையடுத்து பவானிசாகர் சட்டப்பேரவை தொகுதியில் தேர்தல் பிரிவு அலுவலர்கள் இன்று (பிப்.27) சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி ஆகிய இரு இடங்களில் உள்ள இரண்டு சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்களை பூட்டி சீல் வைத்தனர்.

இதேபோன்று சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி ஆகிய 3 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் உள்ள ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர்களின் அறைகளை தேர்தல் பிரிவு அலுவலர்கள் பூட்டி சீல் வைத்தனர்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைப்பெறும் என இந்திய தேர்தல் ஆணையம் நேற்று (பிப்.26) அறிவித்தது. தேர்தல் அட்டவணை வெளியானதைத் தொடர்ந்து, தேர்தல் விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இதையடுத்து பவானிசாகர் சட்டப்பேரவை தொகுதியில் தேர்தல் பிரிவு அலுவலர்கள் இன்று (பிப்.27) சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி ஆகிய இரு இடங்களில் உள்ள இரண்டு சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்களை பூட்டி சீல் வைத்தனர்.

இதேபோன்று சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி ஆகிய 3 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் உள்ள ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர்களின் அறைகளை தேர்தல் பிரிவு அலுவலர்கள் பூட்டி சீல் வைத்தனர்.

இதையும் படிங்க: 'தேர்தல் தேதி அறிவிப்பு' - உடனடியாக அமலுக்கு வந்த விதிமுறைகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.