ETV Bharat / state

பவானிசாகர் அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றம்! - Surface water discharge from Bhawanisagar Dam

ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்மட்டம் 102 அடியை எட்டியதையடுத்து மேல்மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.

The Bhawanisagar Dam reached 102 feet, பவானிசாகர் அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றம்
author img

By

Published : Oct 29, 2019, 11:56 AM IST

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

கடந்த ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையின் காரணமாக, அணையின் நீர்மட்டம் 94 அடியை எட்டியதால் அணையிலிருந்து பாசனத்திற்காக தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காளிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கும், கீழ்பவானி பிரதான வாய்க்கால் பாசனத்திற்கும் தண்ணீர் திறக்கப்பட்டது.

The Bhawanisagar Dam reached 102 feet, பவானிசாகர் அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றம்

இந்நிலையில், கடந்த 13ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால், அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. இதன்காரணமாக 94 அடியாக இருந்த நீர்மட்டம் கடந்த 22ஆம் தேதி 102 அடியை எட்டியது. 105 அடி உயரம் உள்ள பவானிசாகர் அணையில் 102 அடி வரை மட்டுமே நீர் தேக்கமுடியும் என்ற விதிமுறை உள்ளதால் அணைக்கு வரும் உபரிநீர் விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் திறக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விவசாய பாசனத்திற்கு அணை திறப்பு...!

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

கடந்த ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையின் காரணமாக, அணையின் நீர்மட்டம் 94 அடியை எட்டியதால் அணையிலிருந்து பாசனத்திற்காக தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காளிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கும், கீழ்பவானி பிரதான வாய்க்கால் பாசனத்திற்கும் தண்ணீர் திறக்கப்பட்டது.

The Bhawanisagar Dam reached 102 feet, பவானிசாகர் அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றம்

இந்நிலையில், கடந்த 13ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால், அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. இதன்காரணமாக 94 அடியாக இருந்த நீர்மட்டம் கடந்த 22ஆம் தேதி 102 அடியை எட்டியது. 105 அடி உயரம் உள்ள பவானிசாகர் அணையில் 102 அடி வரை மட்டுமே நீர் தேக்கமுடியும் என்ற விதிமுறை உள்ளதால் அணைக்கு வரும் உபரிநீர் விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் திறக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விவசாய பாசனத்திற்கு அணை திறப்பு...!

Intro:Body:tn_erd_01_sathy_bs_dam_vis_tn10009

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 3900 கனஅடியாக உள்ளதால் மேல்மதகுகள் வழியாக பவானி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றம்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 3900 கனஅடியாக உள்ளதால் பவானி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 இலட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையின் காரணமாக அணை நீர்மட்டம் 94 அடியை எட்டியதால் அணையிலிருந்து பாசனத்திற்காக தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காளிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கும், கீழ்பவானி பிரதான வாய்க்கால் பாசனத்திற்கும் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 13 ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. இதன்காரணமாக 96 அடியாக இருந்த நீர்மட்டம் கடந்த 22 ம் தேதி 102 அடியை எட்டியது. 105 அடி உயரம் உள்ள பவானிசாகர் அணையில் 102 அடி வரை மட்டுமே நீர் தேக்கமுடியும் என்ற விதிமுறை உள்ளதால் அணைக்கு வரும் உபரிநீர் விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் திறக்கப்பட்டது. நீர்வரத்து குறைந்ததால் படிப்படியாக உபரிநீர் வெளியேற்றம் குறைக்கப்பட்டு கடந்த 25 ம் தேதி உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களாக அணைக்கு நீர்வரத்து 3900 கனஅடியாக உள்ளதால் மீண்டும் பவானி ஆற்றில் விநாடிக்கு 1800 கனஅடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 2100 கனஅடி நீரும் என மொத்தம் 3900 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 101.99 அடி£கவும், நீர் இருப்பு 30.3 டிஎம்சி யாகவும் உள்ளது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.