ETV Bharat / state

பள்ளியில் குடிநீர் தொட்டி இடிந்து விழும் அபாயம்: மாணவர்கள் அச்சம்

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே மாரனூரில் அரசுப் பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளதால் மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

water tang damaged
author img

By

Published : Aug 15, 2019, 10:04 AM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள மாரனூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படித்துவருகின்றனர். இப்பள்ளி வளாகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உத்தண்டியூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் நீர் தேக்கத் தொட்டி கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டது.

இடியும் நிலையில் உள்ள நீர்த்தொட்டி

இந்நிலையில் நீர் தேக்கத் தொட்டியின் மேல் உள்ள கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிவதோடு மட்டுமல்லாமல், இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள மாரனூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படித்துவருகின்றனர். இப்பள்ளி வளாகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உத்தண்டியூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் நீர் தேக்கத் தொட்டி கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டது.

இடியும் நிலையில் உள்ள நீர்த்தொட்டி

இந்நிலையில் நீர் தேக்கத் தொட்டியின் மேல் உள்ள கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிவதோடு மட்டுமல்லாமல், இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Intro:Body:tn_erd_01_sathy_school_tank_damages_vis_tn10009

சத்தியமங்கலம் அருகே அரசுப்பள்ளி வளாகத்தில் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி: அச்சத்துடன் பள்ளி செல்லும் மாணவ மாணவியர்.


சத்தியமங்கலம் அருகே உள்ள மாரனூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளி வளாகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உத்தண்டியூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டப்பட்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இந்த மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியின் மேல் பகுதியில் உள்ள கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிவதோடு இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. மேலும் குடிநீர்த்தொட்டியை தாங்கும் தூண்களிலும் கான்கிரீட் காரைகள் பெய்ர்ந்து கிடக்கிறது. இதனால் இந்த மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இடிந்து விழும் என்ற அச்சத்தில் பள்ளி வளாகத்தில் மாணவ மாணவியர் குடிநீர்த்தொட்டி உள்ள பகுதிக்கு செல்ல அச்சப்படுகின்றனர். இதுகுறித்து கிராம மக்கள் மற்றும் மாணவ மாணவியரின் பெற்றோர் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை என வேதனை தெரிவிக்கின்றனர். எனவே இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது



Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.