ETV Bharat / state

அரசுப்பேருந்தை துரத்திய காட்டு யானை: பயணிகள் அலறல்! - sathy elephant cross the road

ஈரோடு: சத்தியமங்கலம் தாளவாடியிலிருந்து தலமலை செல்லும் சாலையில் சென்ற அரசுப்பேருந்தை காட்டு யானை ஒன்று துரத்தியதால் பயணிகள் பீதியடைந்தனர்.

தாளவாடி அருகே பேருந்தை துரத்திய யானை  காட்டுயானை தாளவாடி  sathy elephant cross the road  சத்தியமங்கலம் செய்திகள்
அரசுப்பேருந்தை துரத்திய காட்டு யானை
author img

By

Published : Jan 17, 2020, 11:32 AM IST

யானைகளின் முக்கிய வழித்தடங்களில், சத்தியமங்கலம் அடுத்துள்ள தலமலை வனப்பகுதியும் ஒன்று. இதனால், யானைகள் அடிக்கடி இப்பகுதியிலுள்ள வனச்சாலையைக் கடந்து செல்லும். அடர்ந்த காட்டுப்பகுதிக்கு நடுவே வனச்சாலை அமைந்துள்ளதால் சாலையோரம் யானைகள் முகாமிட்டு தீவனம் சாப்பிடுவது வழக்கம்.

இந்நிலையில் தாளவாடியிலிருந்து தலமலை செல்லும் சாலையில் அரசுப் பேருந்து 30 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. மகாராஜபுரம் சாலையோரம் காட்டு யானை ஒன்று நின்று கொண்டிருந்தது. யானையைக் கடந்து பேருந்து சென்றபோது திடீரென யானைப் பேருந்தை வேகமாக துரத்தியது.

இதனால் பேருந்தில் இருந்தப் பயணிகள் அலறினர். ஓட்டுநர் வேகமாக பேருந்தை ஓட்டியதையடுத்து சிறிது தூரம் துரத்திவந்த யானை அங்கேயே நின்றுவிட்டது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் யானை இருப்பது குறித்து எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தினர்.

அரசுப்பேருந்தை துரத்திய காட்டு யானை

இதையும் படிங்க: வேலூரில் எருது விடும் விழாவில் 200 எருதுகள் பங்கேற்பு

யானைகளின் முக்கிய வழித்தடங்களில், சத்தியமங்கலம் அடுத்துள்ள தலமலை வனப்பகுதியும் ஒன்று. இதனால், யானைகள் அடிக்கடி இப்பகுதியிலுள்ள வனச்சாலையைக் கடந்து செல்லும். அடர்ந்த காட்டுப்பகுதிக்கு நடுவே வனச்சாலை அமைந்துள்ளதால் சாலையோரம் யானைகள் முகாமிட்டு தீவனம் சாப்பிடுவது வழக்கம்.

இந்நிலையில் தாளவாடியிலிருந்து தலமலை செல்லும் சாலையில் அரசுப் பேருந்து 30 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. மகாராஜபுரம் சாலையோரம் காட்டு யானை ஒன்று நின்று கொண்டிருந்தது. யானையைக் கடந்து பேருந்து சென்றபோது திடீரென யானைப் பேருந்தை வேகமாக துரத்தியது.

இதனால் பேருந்தில் இருந்தப் பயணிகள் அலறினர். ஓட்டுநர் வேகமாக பேருந்தை ஓட்டியதையடுத்து சிறிது தூரம் துரத்திவந்த யானை அங்கேயே நின்றுவிட்டது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் யானை இருப்பது குறித்து எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தினர்.

அரசுப்பேருந்தை துரத்திய காட்டு யானை

இதையும் படிங்க: வேலூரில் எருது விடும் விழாவில் 200 எருதுகள் பங்கேற்பு

Intro:Body:tn_erd_02_sathy_elephant_bus_vis_tn10009

தாளவாடி அருகே பேருந்தை துரத்திய யானை

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. யானைகளின் முக்கிய வழித்தடமாக தலமலை வனப்பகுதி உள்ளது. இதனால் யானைகள் அடிக்கடி வனச்சாலையை கடந்து மற்றொரு பகுதிக்கு செல்கின்றன. தாளவாடியில் இருந்து தலமலை வழியாக தினந்தோறும் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கின்றன. அடர்ந்த காட்டுப்பகுதிக்கு நடுவே இந்த சாலை உள்ளதால் சாலையோரம் யானைகள் முகாமிட்டு தீவனம் சாப்பிடுவது வழக்கம். இந்நிலையில் தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் சாலையில் அரசு பேருந்து சென்றுகொணடிருந்தது.இதில் 30 பயணிகள் இருந்தனர். மகாராஜபுரம் சாலையோரம் காட்டுயானை நின்றுகொண்டிருந்தது. யானையை கடந்து பேருந்து சென்றபோது திடீரென யானை பேருந்தை வேகமாக துரத்தியது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அலறினர். ஓட்டுநர் வேகமாக பேருந்தை ஓட்டியதையடுத்து யானை சிறிது தூரம் வந்துவிட்டு அங்கேயே நின்றுவிட்டது. இச்சம்பவத்தையடுத்து அவ்வழியாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் யானை இருப்பது குறித்து எச்சரிக்கை யுடன் செல்லுமாறு அறிவுறுத்தினர். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.