ETV Bharat / state

ஜம்மு-கன்னியாகுமரி ரயிலில் டிவி, பிரிட்ஜ் திருட்டு!

author img

By

Published : Sep 19, 2019, 4:54 PM IST

ஈரோடு: ஜம்முவில் இருந்து கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

himsagar-express

ஜம்முவில் இருந்து கன்னியாகுமரிக்கு கடந்த 17ஆம் தேதி ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. அந்த ரயில் இன்று காலை 8.30 மணியளவில் ஈரோடு ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலான இந்த ரயிலில் ஈரோட்டில் இறக்கவேண்டிய பார்சல்களை எடுப்பதற்காக பார்சல்கள் உடைக்கப்பட்டபோது அதில் இருந்த பொருட்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

himsagar-express
ஓடும் ரயிலில் அடையாளம் தெரியாத நபர்கள் கைவரிசை

இதையடுத்து ஊழியர்கள் ரயில்வே காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் அங்கு வந்த காவல் துறையினர் காலி அட்டைப்பெட்டிகளை கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்த ரயிலில் கொண்டுவரப்பட்ட திருடுபோன பார்சலில் 10 எல்இடி டிவிக்கள், பிரிட்ஜ், மடிக்கணினி உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இவற்றுக்கான கொள்முதல் ரசீது சீட்டு கோவை ரயில் நிலைய கட்டுப்பாட்டில் பதிவு செய்யப்பட்டிருப்பதால், எங்கிருந்து யாருக்கு இந்த பொருட்கள் அனுப்பப்பட்டன போன்ற விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.

டிவி, பிரிட்ஜ் உள்ளிட்டபொருட்கள் திருட்டு

ஏற்கனவே ஓடும் ரயில்களில் திருட்டு சம்பவங்கள் அரங்கேறுவதை தடுக்கும் வகையில் ரயில்வே துறை சிசிடிவி கேமராக்களை பொருத்தி பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்து வரும் நிலையில், அதனை விரைவுப்படுத்தி ரயில்களில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை பலப்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க...

லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம்! வெறிச்சோடிய நெடுஞ்சாலைகள்!

ஜம்முவில் இருந்து கன்னியாகுமரிக்கு கடந்த 17ஆம் தேதி ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. அந்த ரயில் இன்று காலை 8.30 மணியளவில் ஈரோடு ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலான இந்த ரயிலில் ஈரோட்டில் இறக்கவேண்டிய பார்சல்களை எடுப்பதற்காக பார்சல்கள் உடைக்கப்பட்டபோது அதில் இருந்த பொருட்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

himsagar-express
ஓடும் ரயிலில் அடையாளம் தெரியாத நபர்கள் கைவரிசை

இதையடுத்து ஊழியர்கள் ரயில்வே காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் அங்கு வந்த காவல் துறையினர் காலி அட்டைப்பெட்டிகளை கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்த ரயிலில் கொண்டுவரப்பட்ட திருடுபோன பார்சலில் 10 எல்இடி டிவிக்கள், பிரிட்ஜ், மடிக்கணினி உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இவற்றுக்கான கொள்முதல் ரசீது சீட்டு கோவை ரயில் நிலைய கட்டுப்பாட்டில் பதிவு செய்யப்பட்டிருப்பதால், எங்கிருந்து யாருக்கு இந்த பொருட்கள் அனுப்பப்பட்டன போன்ற விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.

டிவி, பிரிட்ஜ் உள்ளிட்டபொருட்கள் திருட்டு

ஏற்கனவே ஓடும் ரயில்களில் திருட்டு சம்பவங்கள் அரங்கேறுவதை தடுக்கும் வகையில் ரயில்வே துறை சிசிடிவி கேமராக்களை பொருத்தி பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்து வரும் நிலையில், அதனை விரைவுப்படுத்தி ரயில்களில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை பலப்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க...

லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம்! வெறிச்சோடிய நெடுஞ்சாலைகள்!

Intro:ஈரோடு ஆனந்த்
செப்.19

ரயிலில் கொண்டு வரப்பட்ட டிவி, பிரிட்ஜ் திருட்டு!

கடந்த 17ஆம் தேதி ஜம்முவில் இருந்து கன்னியாகுமரி செல்வதற்காக புறப்பட்ட ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்16318) ரயில் ஈரோடு ரயில் நிலையத்திற்கு இன்று காலை 8.30 மணிக்கு வந்தது.

வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலான இந்த ரயிலில் ஈரோட்டில் இறக்க வேண்டிய பார்சல்களை எடுப்பதற்காக பார்சல் பெட்டியில் திறந்து ஊழியர்கள் உள்ளே சென்றனர். அப்போது ஈரோட்டில் இருக்கவேண்டிய பார்சல்கள் உடைக்கப்பட்டு இருப்பதும் அதில் இருந்த பொருட்கள் திருடப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது.

வெறும் எஞ்சிய காலி அட்டைப் பெட்டிகள் மட்டுமே கிடந்தன. வண்டியில் இருந்த 10 எல்இடி டிவி, பிரிட்ஜ், மடிக்கணினி உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இவற்றின் இன்வாய்ஸ் கோவையில் இருப்பதால் எங்கிருந்து பொருட்கள் அனுப்பப்பட்டன எவ்வளவு பொருட்கள் அனுப்பப்பட்டன யாருக்கு அனுப்பப்பட்டன போன்ற விபரங்கள் உடனடியாக தெரியவில்லை.

காலி அட்டைப் பெட்டிகளை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Body:ஜம்முவில் இருந்து ஈரோடு வழியாக கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Conclusion:ரயில்களில் பாதுகாப்பு அம்சங்களை பலப்படுத்த வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.