ETV Bharat / state

குடிநீர் பிரச்னையை சரி செய்யக் கோரி சாலை மறியல்

ஈரோடு: குடிநீர் பிரச்னையை சரி செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சாலை மறியல்
author img

By

Published : May 18, 2019, 4:26 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலுள்ள கொண்டையம்பாளையத்தில் 300க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் கடந்த எட்டு நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் பெண்களும், குழந்தைகளும், வேலைக்குச் செல்வோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குடிநீர் பிரச்னையை சரி செய்யக் கோரி சாலை மறியல்

தமிழ்நாடு முழுவதும் கத்திரி வெயில் தாக்கிவரும் வேளையில் கொண்டையம்பாளையத்தில் குடிநீர் விநியோகிக்கப்படாததால் கிராம மக்கள் மட்டுமின்றி கால்நடைகளும் குடிநீரின்றி தவித்து வருகின்றன.

மேலும், இது குறித்து கொண்டையம்பாளைய மக்கள் கிராம நிர்வாகத்தினரிடம் புகார் அளித்தும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை.

இதனால் ஆவேசமடைந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் நம்பியூர் புன்செய் புளியம்பட்டி இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கொண்டையம்பாளைய மக்கள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் பிரச்னையை சரி செய்வதாக வாக்குறுதியளித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலுள்ள கொண்டையம்பாளையத்தில் 300க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் கடந்த எட்டு நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் பெண்களும், குழந்தைகளும், வேலைக்குச் செல்வோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குடிநீர் பிரச்னையை சரி செய்யக் கோரி சாலை மறியல்

தமிழ்நாடு முழுவதும் கத்திரி வெயில் தாக்கிவரும் வேளையில் கொண்டையம்பாளையத்தில் குடிநீர் விநியோகிக்கப்படாததால் கிராம மக்கள் மட்டுமின்றி கால்நடைகளும் குடிநீரின்றி தவித்து வருகின்றன.

மேலும், இது குறித்து கொண்டையம்பாளைய மக்கள் கிராம நிர்வாகத்தினரிடம் புகார் அளித்தும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை.

இதனால் ஆவேசமடைந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் நம்பியூர் புன்செய் புளியம்பட்டி இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கொண்டையம்பாளைய மக்கள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் பிரச்னையை சரி செய்வதாக வாக்குறுதியளித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.


சத்தியமங்கலம் அருகே குடிநீர் கேட்டு சாலைமறியல்

 


சத்தியமங்கலம் அடுத்த கொண்டையம்பாளையத்தில் கடந்த நாள்களாக குடிநீர் விநியோகிக்கப்படாததை கண்டித்து அக்கிராமமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

--

TN_ERD_SATHY_02_17_SALAI_MARIAL_VIS_TN10009
(Visual  FTP இல் உள்ளது)


டி.சாம்ராஜ்

சத்தியமங்கலம்

94438 96939, 88257 02216

17.05.2019

 

 

சத்தியமங்கலம் அருகே குடிநீர் கேட்டு சாலைமறியல்

 


சத்தியமங்கலம் அடுத்த கொண்டையம்பாளையத்தில் கடந்த 4 நாள்களாக குடிநீர் விநியோகிக்கப்படாததை கண்டித்து அக்கிராமமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் ஊராட்சி  ஒன்றியத்துக்குட்பட்ட  வேமாண்டபாளையம் ஊராட்சி கொண்டையம்பாளையம் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இவ்வூராட்சியில் நம்பியூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. கடந்த 8  நாள்களாக குடிநீர் சீரான குடிநீர் விநியோகிக்கப்படாமல் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் கிராமமக்கள் சிரமத்துக்குள்ளானார்கள். வெயில் பாதிப்பு காரணமாக கால்நடைகளும் குடிநீரின்றி தவித்து வந்தன. இது குறித்து கொண்டையம்பாளையம் ஊராட்சி நிர்வாகத்திடம் குடிநீர் வசதி கேட்டு கோரிக்கை விடுத்தனர். குடிநீர் விநியோகிக்க அதிகாரிகள் எந்தவித ஏற்பாடு எடுக்காததால் ஆத்திரமடைந்த அக்கிராமமக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நம்பியூர் புன்செய் புளியம்பட்டி இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.அங்கு வந்த போலீசார் கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் வழங்க நடவடிக்கைக எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து சுமார் 1 நேரத்துக்கு பிறகு சாலை மறியல் கைவிடப்பட்டது.

 

 


 

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.