ETV Bharat / state

திருமண நிகழ்வுக்கு சென்று திரும்பிய பேருந்து விபத்து! - Returning to the wedding, the bus crashed

ஈரோடு: திருமண நிகழ்விற்கு சென்று திரும்பிகொண்டிருந்த பேருந்து விபத்தில் சிக்கியதில் ஐந்து பேர் காயமடைந்தனர்.

பாறையில் மோதியதில் விபத்து
author img

By

Published : Sep 8, 2019, 6:40 PM IST

ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதி அருகே உள்ள பசுவனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மக்கள், கர்நாடக மாநிலம் ஹனூரில் நடைபெற்ற திருமண நிகழ்வுக்கு வாடகை பேருந்தில் சென்றனர். இந்நிலையில் திருமணம் முடிந்து ஊர் திரும்பியபோது பசுவனாபுரம் சாலையில் பேருந்து வந்துகொண்டிருந்தது. அப்போது பேருந்து வளைவில் திரும்புகையில் எதிர்பாராவிதமாக பாறை மீது மோதியது.

விபத்தில் சிக்கிய பேருந்து

இந்த விபத்தில் பேருந்தின் முன்பக்கத்தில் அமர்ந்திருந்த சந்திரா, ரோஜா, ரீதா, பைரி, மாதேஸ்வரி உள்ளிட்ட 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து காயமடைந்த 5 பேரும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதி அருகே உள்ள பசுவனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மக்கள், கர்நாடக மாநிலம் ஹனூரில் நடைபெற்ற திருமண நிகழ்வுக்கு வாடகை பேருந்தில் சென்றனர். இந்நிலையில் திருமணம் முடிந்து ஊர் திரும்பியபோது பசுவனாபுரம் சாலையில் பேருந்து வந்துகொண்டிருந்தது. அப்போது பேருந்து வளைவில் திரும்புகையில் எதிர்பாராவிதமாக பாறை மீது மோதியது.

விபத்தில் சிக்கிய பேருந்து

இந்த விபத்தில் பேருந்தின் முன்பக்கத்தில் அமர்ந்திருந்த சந்திரா, ரோஜா, ரீதா, பைரி, மாதேஸ்வரி உள்ளிட்ட 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து காயமடைந்த 5 பேரும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Intro:Body:tn_erd_04_sathy_bus_accident_vis_tn10009
tn_erd_04_sathy_bus_accident_photo_tn10009

கேர்மாளம் அருகே பஸ் பாறையில் மோதி விபத்து. 5 பேர் காயம்.

கடம்பூர் மலைப்பகுதி பசுவனாபுரம் கிராமத்தை சேர்ந்த மலைகிராம மக்கள் 50 க்கும் மேற்பட்டோர் கர்நாடக மாநிலம் ஹனூரில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிக்காக தனியார் பஸ்சை வாடகைக்கு எடுத்து திருமணத்திற்கு சென்றுவிட்டு இன்று கேர்மாளம் பசுவனாபுரம் சாலையில் பஸ் சென்றுகொண்டிருந்தது. பஸ்சை பசுவனாபுரம் கிராமத்தை டிரைவர் சிக்கராஜ் ஓட்டினார். பஸ் சாலை வளைவில் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த பாறை மீது மோதியதில் பஸ்சின் முன்ப்க்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதியில் அமர்ந்திருந்த சந்திரா(48), ரோஜா(29), ரீதா(34), பைரி(48), மாதேஸ்வரி(12) ஆகிய 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து காயம்பட்டவர்கள் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்சில் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். விபத்து குறித்து ஆசனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.