ETV Bharat / state

பழங்குடியின மக்களின் குடியிருப்பு மாதிரிகள் அமைக்கும் பணி தீவிரம்

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் வனப்பகுதியில் அமைக்கப்பட்டு வரும் பழங்குடியினர் கலாசார அருங்காட்சியகத்தில் தற்போது 70 விழுக்காடு பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக புலிகள் காப்பக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

author img

By

Published : Apr 25, 2019, 12:51 PM IST

sathiyamanagalam

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள பவானிசாகர் வனப்பகுதியில் பழங்குடியினர் கலாசார அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. பவானிசாகர் வனச்சரகத்தில், காராச்சிக்கொரை பகுதியில் 20 ஹெக்டேர் பரப்பளவில் நிலம் தேர்வு செய்யப்பட்டு ரூ.7 கோடி செலவில் கட்டுமானப்பணி தொடங்கியது.

இந்த அருங்காட்சியகத்தில் பழங்குடியின மக்கள் வனம், வன உயிரினங்களுடன் ஒன்றிணைந்து வாழும் முறை, வாழ்விடங்கள், வாழ்க்கை முறைகள், பாரம்பரிய முறைகள், பழங்குயின் மக்கள் பயன்படுத்தியப் பொருட்கள், விவசாய முறைகள், அவர்களின் உணவுப் பழக்க வழக்கங்கள், பயன்பாட்டு இசைக் கருவிகள் உள்ளிட்டவை பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்
பழங்குடியின மக்களின் குடியிருப்பு மாதிரிகள்

மேலும், இங்கு சங்க இலக்கியம் ஸ்டுடியோ அமைக்கப்பட உள்ளது. பார்வையாளர்களுக்கு இயற்கை முறையில் நடைபாதை அமைத்தல், பழங்குடியின கலாசார உள் மற்றும் வெளியரங்கம் - மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், இயற்கை ஆர்வலர்கள் தங்குவதற்கான கட்டடங்கள் அமைப்பதற்கான பணிகளும் நடந்துவருகின்றன.

ஆழ்குழாய் கிணறு மற்றும் மேல்நிலைத்தொட்டி அமைத்து குடிநீர் வசதி, உள்ளிட்டத் தேவையான கட்டமைப்பு வசதிகள் நடைபெற்று வருவதாகவும், தற்போது 70 விழுக்காடு பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும் புலிகள் காப்பக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

பழங்குடியின மக்களின் குடியிருப்பு மாதிரிகள்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள பவானிசாகர் வனப்பகுதியில் பழங்குடியினர் கலாசார அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. பவானிசாகர் வனச்சரகத்தில், காராச்சிக்கொரை பகுதியில் 20 ஹெக்டேர் பரப்பளவில் நிலம் தேர்வு செய்யப்பட்டு ரூ.7 கோடி செலவில் கட்டுமானப்பணி தொடங்கியது.

இந்த அருங்காட்சியகத்தில் பழங்குடியின மக்கள் வனம், வன உயிரினங்களுடன் ஒன்றிணைந்து வாழும் முறை, வாழ்விடங்கள், வாழ்க்கை முறைகள், பாரம்பரிய முறைகள், பழங்குயின் மக்கள் பயன்படுத்தியப் பொருட்கள், விவசாய முறைகள், அவர்களின் உணவுப் பழக்க வழக்கங்கள், பயன்பாட்டு இசைக் கருவிகள் உள்ளிட்டவை பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்
பழங்குடியின மக்களின் குடியிருப்பு மாதிரிகள்

மேலும், இங்கு சங்க இலக்கியம் ஸ்டுடியோ அமைக்கப்பட உள்ளது. பார்வையாளர்களுக்கு இயற்கை முறையில் நடைபாதை அமைத்தல், பழங்குடியின கலாசார உள் மற்றும் வெளியரங்கம் - மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், இயற்கை ஆர்வலர்கள் தங்குவதற்கான கட்டடங்கள் அமைப்பதற்கான பணிகளும் நடந்துவருகின்றன.

ஆழ்குழாய் கிணறு மற்றும் மேல்நிலைத்தொட்டி அமைத்து குடிநீர் வசதி, உள்ளிட்டத் தேவையான கட்டமைப்பு வசதிகள் நடைபெற்று வருவதாகவும், தற்போது 70 விழுக்காடு பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும் புலிகள் காப்பக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

பழங்குடியின மக்களின் குடியிருப்பு மாதிரிகள்


பழங்குடி மக்களின் குடியிருப்பு மாதிரிகள் அமைக்கும் பணி தீவிரம்.


டி.சாம்ராஜ்

சத்தியமங்கலம்

94438 96939, 88257 02216

25.04.2019

 

சத்தியமங்கலம் புலிகள் வனப்பகுதியில் அமைக்கப்பட்டு வரும் பழங்குடியினர் கலாச்சார அருங்காட்சியகத்தில் 

 

TN_ERD_SATHY_01_25_TRIBAL_CULTURE_VIILAGE_VIS_TN10009 (Visual  FTP இல் உள்ளது)



ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள பவானிசாகர் வனப்பகுதியில் பழங்குடியினர் கலாச்சார அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் 110-விதியின் கீழ் ரூ.7 கோடி செலவில் பழங்குடியினர் அருங்காட்சியகம் மற்றும் சூழல் கலாச்சார கிராமம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகம் அமைப்பதற்காக பவானிசாகர் வனச்சரகம், காராச்சிக்கொரை பகுதியில்  20 ஹெக்டேர் பரப்பளவில் நிலம் தேர்வு செய்யப்பட்டு கடந்த 2018 டிசம்பர் மாதம் கட்டுமானப்பணி தொடங்கியது. இந்த பழங்குடியின அருங்காட்சியகம் மற்றும் சூழல் கலாச்சார கிராமத்தில் பழங்குடியின மக்கள் வனம் மற்றும் வன உயிரினங்களுடன் ஒன்றிணைந்து வாழும் முறை, வாழ்விடங்கள், வாழ்க்கை முறைகள், கலாச்சார பராம்பரிய முறைகள், பயன்பாட்டு பொருட்கள், விவசாய முறைகள், உணவு பழக்க வழக்கங்கள், மருத்துவ வழிமுறைகள், பயன்படுத்தும் இசை கருவிகள் மற்றும் பழங்குடியின கிராம மக்களின் உற்பத்திப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. பழங்குடியினர் கலாச்சார கிராமத்தில் சங்க இலக்கியம் ஸ்டுடியோ அமைக்கப்பட உள்ளது. இதற்கான கட்டுமானப்பணிகள் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது.   பழங்குடியின மக்கள் உபயோகப்படுத்திய இசை கருவிகள், உடைகள், வாழ்வியல் பொருட்கள், கல் மற்றும் மர பொருட்கள் மாதிரிகள், பழங்குடியினர் குடியிருப்புகள்,  மூலிகை தோட்டம், பழங்குடியினர் உணவகம் ஆகிய மாதிரிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.  பழங்குடியினர் பராம்பரிய பொருட்கள் விற்பனை மையம், பொருள்விளக்க மையம்,  நீர்த்தேக்க குட்டை , பார்வையாளர்களுக்கு இயற்கை முறையில் நடைபாதை அமைத்தல்கலாச்சார உள் மற்றும் வெளியரங்கம், பார்வையாளர்கள், மாணவர்கள், ஆராய்சியாளர்கள், இயற்கை ஆர்வலர்கள் தங்குவதற்கான கட்டிடங்கள் ஆகிய பணிகளும் நடந்து வருகின்றன.

 ஆழ்குழாய் கிணறு மற்றும் மேல்நிலைத்தொட்டி அமைத்து குடிநீர் வசதி, பழங்குடியின மக்கள் பயன்படுத்தும் தாவரங்களைக் கொண்டு இயற்கை சார்ந்த நில அமைப்பு மற்றும் அருங்காட்சியகம் மற்றும் கலாச்சார கிராமத்தின் சிறந்த மேலாண்மைக்குத் தேவையான கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகள் நடைபெற்று வருவதாகவும் தற்போது 70 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக  புலிகள் காப்பக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.