ETV Bharat / state

சாலையை சீரமைக்கக் கோரி வாகன ஓட்டிகள் மறியல்!

ஈரோடு: தமிழ்நாடு-கர்நாடக எல்லைப்பகுதியில் அமைந்துள்ள கார்பள்ளம் சோதனைச்சாவடி முதல் சுவர்ணாவதி அணைவரை உள்ள சாலையை சீரமைக்கக் கோரி 50க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் கர்நாடக எல்லையில் சாலை மறியிலில் ஈடுபட்டனர்.

author img

By

Published : Sep 25, 2019, 5:08 PM IST

public-protest-for-not-maintaining-the-sathy-mysur-road-properly

தமிழ்நாடு-கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சாலையாக சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. சரக்கு லாரி உட்பட பல்வேறு வாகனங்கள் இச்சாலையை 24 மணி நேரமும் பயன்படுத்திவருகின்றன. இதில் தமிழ்நாடு எல்லைக்குட்பட்ட சாலைகள் முறையாக பராமரிக்கப்படுகின்றன.

இரண்டு மாநில எல்லைகளில் உள்ள கார்பள்ளம் சோதனைச்சாவடி முதல் சுவர்ணாவதி அணைவரை உள்ள இருபது கிலோமீட்டர் தூரத்திற்கு உள்ள சாலை கர்நாடக மாநில நெடுஞ்சாலைத்துறை சரிவர பராமரிக்காததால் குண்டும் குழியுமாக உள்ளது.

சாலை மறியலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகள்

இதனால் வாகனங்களை இயக்குவதில் பெரும் சிரமத்தை வாகன ஓட்டிகள் சந்தித்து வந்தனர்.

இதுகுறித்து சாம்ராஜ் நகர் மாவட்ட நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களிடம் வாகன ஓட்டிகள் பல முறை முறையிட்டுள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததையடுத்து தாளவாடி மலைப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தேசிய நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களிடம் பேசி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது. சாலை மறியல் காரணமாக அப்பகுதியல் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க:லாரி மீது அரசுப் பேருந்து மோதி விபத்து - நடத்துநர் உள்பட இருவர் உயிரிழப்பு!

தமிழ்நாடு-கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சாலையாக சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. சரக்கு லாரி உட்பட பல்வேறு வாகனங்கள் இச்சாலையை 24 மணி நேரமும் பயன்படுத்திவருகின்றன. இதில் தமிழ்நாடு எல்லைக்குட்பட்ட சாலைகள் முறையாக பராமரிக்கப்படுகின்றன.

இரண்டு மாநில எல்லைகளில் உள்ள கார்பள்ளம் சோதனைச்சாவடி முதல் சுவர்ணாவதி அணைவரை உள்ள இருபது கிலோமீட்டர் தூரத்திற்கு உள்ள சாலை கர்நாடக மாநில நெடுஞ்சாலைத்துறை சரிவர பராமரிக்காததால் குண்டும் குழியுமாக உள்ளது.

சாலை மறியலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகள்

இதனால் வாகனங்களை இயக்குவதில் பெரும் சிரமத்தை வாகன ஓட்டிகள் சந்தித்து வந்தனர்.

இதுகுறித்து சாம்ராஜ் நகர் மாவட்ட நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களிடம் வாகன ஓட்டிகள் பல முறை முறையிட்டுள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததையடுத்து தாளவாடி மலைப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தேசிய நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களிடம் பேசி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது. சாலை மறியல் காரணமாக அப்பகுதியல் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க:லாரி மீது அரசுப் பேருந்து மோதி விபத்து - நடத்துநர் உள்பட இருவர் உயிரிழப்பு!

Intro:Body:tn_erd_03_sathy_state_border_drivers_strike_vis_tn10009

சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் கர்நாடக மாநில எல்லையில் குண்டும் குழியுமாக படுமோசமாக உள்ள சாலையை சீரமைக்க கோரி வாகன ஓட்டுநர்கள் புளிஞ்சூர் சோதனைச்சாவடியில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

தமிழகம் - கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் 24 மணி நேரமும் பேருந்து மற்றும் சரக்கு லாரி போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இச்சாலையில் தமிழக எல்லை வரை உள்ள சாலை நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறது. இருமாநில எல்லையில் உள்ள காரப்பள்ளம் சோதனைச்சாவடி முதல் சுவர்ணாவதி அணை வரை உள்ள 20 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையை கர்நாடக மாநில நெடுஞ்சாலைத்துறையினர் சரிவர பராமரிக்காமல் உள்ளதால் குண்டும் குழியுமாக மாறிவிட்டதால் வாகன ஓட்டிகள் தேசிய நெடுஞ்சாலையில் வாகனத்தை இயக்குவதில் மிகுந்த சிரமம் ஏற்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சாம்ராஜ்நகர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் வாகன ஓட்டிகள் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காதால் இன்று தாளவாடி மலைப்பகுதியை சேர்ந்த வாகன ஓட்டிகள் 100 க்கும் மேற்பட்டோர் கர்நாடா மாநில சோதனைச்சாவடியான புளிஞ்சூர் சோதனைச்சாவடியில் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இருமரிநல போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த சாம்ராஜ்நகர் மாவட்ட போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பேசி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் போராட்டம் காரணமாக ஒரு மணி நேரம் பேக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.