ETV Bharat / state

ஆபத்தான ஆழ்துளைக் கிணறுகள் குறித்த தகவலுக்கு ரூ.1,000 பரிசு!

author img

By

Published : Oct 30, 2019, 7:12 PM IST

Updated : Oct 30, 2019, 8:16 PM IST

ஈரோடு: தமிழ்நாட்டில் பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும் ஆபத்தான ஆழ்துளைக் கிணறுகள் குறித்து தகவல் தருபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.

rajesh

இதுகுறித்து நாமக்கல் மாவட்டம் தலைமலை சேவா டிரஸ்ட்டின் நிர்வாக அறங்காவலர் ராஜேஷ் கூறியதாவது;

சமீபத்தில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து சுஜித் என்ற இரண்டு வயது சிறுவன் உயிரிழந்தது அனைவரது மனதிலும் ஆறாத வடுவாக உள்ளது. இதுபோன்ற நிகழ்வு தமிழ்நாட்டில் எதிர்காலத்தில் நிகழக்கூடாது என்ற நோக்கத்தோடு நாமக்கல் மாவட்டத்தின் தலைமலை சேவா டிரஸ்ட்டின் சார்பில் சமூக வலைத்தளங்களில் ஒரு பதிவு செய்யப்பட்டது.

அதில் தமிழ்நாட்டில் பாதுகாப்பற்ற முறையில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறு எங்கு இருந்தாலும் அதன் தகவலை ஆதாரத்துடன் தலைமலை சேவா டிரஸ்டுக்கு தகவல் தரும் நபருக்கு ஆயிரம் ரூபாய் சன்மானமும் அவருக்கு சமூக நலனிலே அக்கறை உள்ளவர் என்ற சான்றும் வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தோம். அதனை பார்த்த அரியலூர் மாவட்டம் வலங்கைமானைச் சேர்ந்த ஆசிரியர் செந்தில்குமார் என்பவர் அங்கு இருக்கக் கூடிய ஆழ்துளைக் கிணறு ஒன்றின் புகைப்படத்தை எங்களுக்கு அனுப்பிவைத்து, 500 அடி ஆழம் உள்ள ஆழ்துளைக் கிணறு பாதுகாப்பற்ற முறையில் சிறார் பள்ளிக்கு அருகிலேயே இருப்பதாக அதுகுறித்த தகவலையும் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து நாங்கள் அம்மாவட்ட ஆட்சியரை தொடர்புகொண்டு கூறியதை தொடர்ந்து அது உடனடியாக மூடப்பட்டது. இந்த செய்தியை எங்களின் அறக்கட்டளைக்கு தெரியப்படுத்திய ஆசிரியர் செந்தில்குமாரை நேரில் அழைத்து பாராட்ட உள்ளோம்.

தலைமலை சேவா டிரஸ்ட்டின் நிர்வாக அறங்காவலர் ராஜேஷ் பேட்டி

இதேபோன்று நல்ல உள்ளம் படைத்தோர் தங்கள் பகுதிகளில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகள் ஆபத்தான நிலையில் இருப்பதை அறிந்தால் அதன் புகைப்படத்தை எங்களது வாட்ஸ்அப் எண்ணான 98430 59346 எண்ணுக்கு அனுப்பி அது குறித்த தகவலை தெரியப்படுத்தினால் உடனடியாக அதனை மூடுவதற்கு உதவி செய்வோம் என்றார்.


மேலும் படிக்க: ஓடி விளையாடு பாப்பா! - ஆழ்துளைக் கிணறு பற்றி இமான் ட்வீட்

இதுகுறித்து நாமக்கல் மாவட்டம் தலைமலை சேவா டிரஸ்ட்டின் நிர்வாக அறங்காவலர் ராஜேஷ் கூறியதாவது;

சமீபத்தில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து சுஜித் என்ற இரண்டு வயது சிறுவன் உயிரிழந்தது அனைவரது மனதிலும் ஆறாத வடுவாக உள்ளது. இதுபோன்ற நிகழ்வு தமிழ்நாட்டில் எதிர்காலத்தில் நிகழக்கூடாது என்ற நோக்கத்தோடு நாமக்கல் மாவட்டத்தின் தலைமலை சேவா டிரஸ்ட்டின் சார்பில் சமூக வலைத்தளங்களில் ஒரு பதிவு செய்யப்பட்டது.

அதில் தமிழ்நாட்டில் பாதுகாப்பற்ற முறையில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறு எங்கு இருந்தாலும் அதன் தகவலை ஆதாரத்துடன் தலைமலை சேவா டிரஸ்டுக்கு தகவல் தரும் நபருக்கு ஆயிரம் ரூபாய் சன்மானமும் அவருக்கு சமூக நலனிலே அக்கறை உள்ளவர் என்ற சான்றும் வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தோம். அதனை பார்த்த அரியலூர் மாவட்டம் வலங்கைமானைச் சேர்ந்த ஆசிரியர் செந்தில்குமார் என்பவர் அங்கு இருக்கக் கூடிய ஆழ்துளைக் கிணறு ஒன்றின் புகைப்படத்தை எங்களுக்கு அனுப்பிவைத்து, 500 அடி ஆழம் உள்ள ஆழ்துளைக் கிணறு பாதுகாப்பற்ற முறையில் சிறார் பள்ளிக்கு அருகிலேயே இருப்பதாக அதுகுறித்த தகவலையும் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து நாங்கள் அம்மாவட்ட ஆட்சியரை தொடர்புகொண்டு கூறியதை தொடர்ந்து அது உடனடியாக மூடப்பட்டது. இந்த செய்தியை எங்களின் அறக்கட்டளைக்கு தெரியப்படுத்திய ஆசிரியர் செந்தில்குமாரை நேரில் அழைத்து பாராட்ட உள்ளோம்.

தலைமலை சேவா டிரஸ்ட்டின் நிர்வாக அறங்காவலர் ராஜேஷ் பேட்டி

இதேபோன்று நல்ல உள்ளம் படைத்தோர் தங்கள் பகுதிகளில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகள் ஆபத்தான நிலையில் இருப்பதை அறிந்தால் அதன் புகைப்படத்தை எங்களது வாட்ஸ்அப் எண்ணான 98430 59346 எண்ணுக்கு அனுப்பி அது குறித்த தகவலை தெரியப்படுத்தினால் உடனடியாக அதனை மூடுவதற்கு உதவி செய்வோம் என்றார்.


மேலும் படிக்க: ஓடி விளையாடு பாப்பா! - ஆழ்துளைக் கிணறு பற்றி இமான் ட்வீட்

Intro:ஈரோடு ஆனந்த்
அக்.30

ஆழ்துளை கிணறுகள் குறித்து கூறினால் ரூ.1000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ்!

தமிழகத்தில் பயன்பாடற்று மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணறுகள் குறித்து தகவல் தருபவர்களுக்கு ரூ. 1000 மற்றும் சமூக அக்கறை கொண்டவர் என்று சான்றிதழ் வழங்கப்படும் என்று தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் மாவட்டம் தலைமலை சேவா டிரஸ்ட்டின் நிர்வாக அறங்காவலர் ராஜேஷ் கூறியதாவது;

Body:சமீபத்தில் மணப்பாறை மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து சுஜித் என்ற இரண்டு வயது சிறுவன் உயிரிழந்தது அனைவரது மனதிலும் ஆறாத வடுவாக உள்ளது. இதுபோன்ற நிகழ்வு தமிழகத்தில் எங்குமே நிகழக்கூடாது என்ற நோக்கத்தோடு நாமக்கல் மாவட்டம் தலைமலை சேவா டிரஸ்ட்டின் சார்பில் சமூக வலைத்தளங்களில் ஒரு பதிவு பதியப்பட்டது.

அதில் தமிழகத்தில் எங்கு ஆழ்துளை கிணறுகள் இருந்தாலும் அதன் தகவலை ஆதாரத்துடன் தலைமலை சேவா டிரஸ்டுக்கு கொண்டுவரும் நபர்களுக்கு ஆயிரம் ரூபாய் சன்மானமும் அவருக்கு சமூக நலனிலே அக்கறை உள்ளவர் என்ற சான்றும் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தோம். அதனை பார்த்த அரியலூர் மாவட்டம் வலங்கைமானைச் சேர்ந்த ஆசிரியர் செந்தில்குமார் என்பவர் அங்கு இருக்கக் கூடிய ஆழ்துளை கிணறு ஒன்றின் புகைப்படத்தை எங்களுக்கு அனுப்பிவைத்தார். மேலும் 500 அடி ஆழம் உள்ள ஆழ்துளை கிணறு சிறார் பள்ளிக்கு அருகிலேயே இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து நாங்கள் அம்மாவட்ட ஆட்சியரை தொடர்புகொண்டு பேசி அது உடனடியாக மூடப்பட்டது. இந்த செய்தியை எங்களின் அறக்கட்டளைக்கு தெரியப்படுத்திய ஆசிரியர் செந்தில்குமாரை நேரில் அழைத்து பாராட்ட உள்ளோம். Conclusion:இதேபோன்று நல்ல உள்ளம் படைத்தோர் உங்கள் பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் ஆபத்தான நிலையில் இருப்பதை பார்த்தால் அதன் புகைப்படத்தை எங்களது வாட்ஸ்அப் எண்ணான 98430 59346 எண்ணுக்கு அனுப்பி வைத்தால் உடனடியாக அதனை மூடி சுஜீத் போன்ற நிகழ்வை வேறு எங்குமே நடைபெறாமல் இருக்கும் அடித்தளத்தை ஏற்படுத்தி தருவோம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.






Last Updated : Oct 30, 2019, 8:16 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.