ETV Bharat / state

18ஆவது முறையாக நிரம்பிய பவானிசாகர் அணை!

ஈரோடு : 18ஆவது முறையாக பவானிசாகர் அணை  நிரம்பியதையடுத்து அணையில் இருந்து 8 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.

author img

By

Published : Oct 22, 2019, 8:34 AM IST

pavani sagar dam issue

நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் பவானிசாகர் அணைக்கு, அதிகபட்சமாக 22 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து வந்தது. இந்நிலையில் 105 அடி உயரம் கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை நள்ளிரவில் எட்டியது.

பொதுப்பணித்துறை விதிகளின்படி அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டும் போது, நீரைத் தேக்கி வைக்க இயலாது. எனவே அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் உபரி நீரை அப்படியே பவானிஆற்றில் திறந்துவிட வேண்டும்.

அதன்படி தற்போது அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியுள்ளதால் அணையின் மேல் பகுதியில் உள்ள ஒன்பது மதகுகளின் வழியாக, ஐந்து கனஅடி உபரிநீர் திறந்து விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து எட்டு ஆயிரம் கன அடி வரை நீர் திறந்து விடப்பட்டது.

18ஆவது முறையாக நிரம்பிய பவானிசாகர் அணை

முன்னதாக அணையில் சிறப்புப் பூஜைகள் செய்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணைக்கு வரும் நீர்வரத்துக்கேற்ப, நீர் வெளியேற்றம் இருக்கும் எனப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து உள்ளாட்சி,வருவாய்த்துறை சார்பில் பவானிசாகர் கரையோரத்தில் தாழ்வான இடங்களில் வசிக்கும், அனைவரும் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறு தண்டோரா மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அணையில் இருந்து வெள்ளநீர் திறந்துவிடப்பட்டதால் பவானிஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது

இதையும் படிங்க:

100 நாள் வேலைத்திட்டம்: ஊதியம் வழங்காததைக் கண்டித்து பணியாளர்கள் போராட்டம்

நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் பவானிசாகர் அணைக்கு, அதிகபட்சமாக 22 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து வந்தது. இந்நிலையில் 105 அடி உயரம் கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை நள்ளிரவில் எட்டியது.

பொதுப்பணித்துறை விதிகளின்படி அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டும் போது, நீரைத் தேக்கி வைக்க இயலாது. எனவே அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் உபரி நீரை அப்படியே பவானிஆற்றில் திறந்துவிட வேண்டும்.

அதன்படி தற்போது அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியுள்ளதால் அணையின் மேல் பகுதியில் உள்ள ஒன்பது மதகுகளின் வழியாக, ஐந்து கனஅடி உபரிநீர் திறந்து விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து எட்டு ஆயிரம் கன அடி வரை நீர் திறந்து விடப்பட்டது.

18ஆவது முறையாக நிரம்பிய பவானிசாகர் அணை

முன்னதாக அணையில் சிறப்புப் பூஜைகள் செய்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணைக்கு வரும் நீர்வரத்துக்கேற்ப, நீர் வெளியேற்றம் இருக்கும் எனப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து உள்ளாட்சி,வருவாய்த்துறை சார்பில் பவானிசாகர் கரையோரத்தில் தாழ்வான இடங்களில் வசிக்கும், அனைவரும் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறு தண்டோரா மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அணையில் இருந்து வெள்ளநீர் திறந்துவிடப்பட்டதால் பவானிஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது

இதையும் படிங்க:

100 நாள் வேலைத்திட்டம்: ஊதியம் வழங்காததைக் கண்டித்து பணியாளர்கள் போராட்டம்

Intro:Body:n_erd_01_sathy_dam_full_vis_tn10009

18ஆவது முறையாக நிரம்பியது பவானிசாகர் அணை

அணையில் இருந்து 8 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றம்


105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி செவ்வாய்க்கிழமை அதிகாலை அணைக்கு வரும் 5 அடி கனஅடி உபரிநீர் அப்படியே பவானிஆற்றில் திறந்துவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 8 ஆயிரம் வரை திறந்துவிடப்ட்டது

நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் பவானிசாகர் அணைக்கு அதிகபட்சமாக 22 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து வந்தது. கடந்த அக்.14ம் தேதி 96 அடியாக இருந்து அணையின் நீர்மட்டம் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில் 105 அடி நீர்மட்டம் உயரம் கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று 102 அடியை எட்டியது. பொதுப்பணித்துறை விதிகளிடம்படி அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டும் போது நீரை தேக்கவைக்க இயலாது என்றும் அணை பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீரை அப்படியே பவானிஆற்றில் திறந்துவிடு வேண்டும். இதன்படி தற்போது அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியுள்ளதால் அணையில் மேல்மதகில் உள்ள உபரிநீர் போக்கி 9 மதகுகள் வழியாக 5 கனஅடி உபரிநீர் திறந்துவிடப்பட்டது. அணையில் இருந்து வெண்நிற நுரையுடன் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. முன்னதாக அணையில் சிறப்பு பூஜைகள் செய்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அணைக்கு வரும் நீர்வரத்துக்கேற்ப நீர் வெளியேற்றம் இருக்கும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அணையில் இருந்து வெள்ளநீர் திறந்துவிடப்பட்டதால் பவானிஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதையடுத்து உள்ளாட்சி மற்றும் வருவாய்துறை சார்பில் பவானிசாகர் கரையோரத்தில் தாழ்வான இடத்தில் வசிக்கும் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு தண்டோரா மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆக்ஸட் 15ம் தேதி அணை முழுகொள்ளளவை எட்டியதால் பவானிஆற்றில் 80 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறந்துவிடப்பட்டது. தொடர்ந்து 30 நாள்கள் 26 டிஎம்சி நீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 1948 ஆண்டு துவங்கிய பவானிசாகர் அணை கட்டுமான பணி 1955 ம் நிறைவடைந்தது. 105 அடியான முழுகொள்ளளவை எட்டியது தற்போது அணை 18 வது முறையாக நிரம்பியது குறிப்பிடத்தக்கது.

22ம் தேதி நிலவரப்படி 5.00 PM
அணையின் நீர்மட்டம் 102 அடி, நீர் இருப்பு 30.3 டிஎம்சி, நீர்வரத்து 9428 கனஅடி, நீர்வெளியேற்றம் 8000 கனஅடி யாக உள்ளது.



Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.