ETV Bharat / state

கீழ்பவானி கான்கிரீட் கால்வாய் திட்டத்திற்கு எதிர்ப்பு.. விவசாயிகள் காலவரையின்றி உண்ணாவிரத போராட்டம்!

ஈரோடு மாவட்டம், கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் திட்டம் தொடர்பான அரசாணை எண் 276ல் மாற்றம் செய்ய வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட பாசன விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

author img

By

Published : Jun 8, 2023, 1:24 PM IST

கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்
கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்
கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானி சாகர் அணை ஈஸ்வரன் என்ற சட்டமன்ற உறுப்பினர் விடுத்த கோரிக்கையை அடுத்து காமராஜர் காலத்தில் கட்டப்பட்டது. இந்த அணை கீழ்பவானி கால்வாய் 200 கி.மீ தூரத்திற்கு மண் கால்வாயாக வெட்டப்பட்டது.

இந்த அணையிலிருந்து வெளியேறும் நீரின் மூலம் கீழ்பவானி, தடப்பள்ளி அரக்கன் கோட்டை, காலிங்கராயன் கால்வாய் மூலமாக விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. இந்த பவானிசாகர் அணை தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணையாகவும் ரஷ்யாவில் உள்ள மண் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாகவும் திகழ்ந்து வருகிறது. தற்போது இந்த அணையிலிருந்து முக்கியமான வாசகப் பகுதியாக இருந்து வருவது கீழ்பவானி பாசனம்.

இந்த கீழ்பவானி பாசனம் மூலமாக ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் வரையில் விவசாய நிலங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாசனம் பெற்று வருகிறது. கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ரூபாய் 750 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கான்கிரீட் திட்டப் பணிகள் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கீழ்பவானி மூலம் பாசன வசதி பெறும் விவசாயிகள் இரு தரப்பாகப் பிரிந்து, கான்கிரீட் திட்டத்திற்கு எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்தப் பிரச்சனைத் தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், கான்கிரீட் திட்டப் பணிகளைத் துவங்குவதற்கு எந்த தடையும் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில், கான்கிரீட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: "விஷமாகும் பவானி சாகர் நீர்" ஆர்ப்பாட்டத்தில் குதித்த ஈரோடு மக்கள்.. நடந்தது என்ன?

கீழ்பவானி பாசனப் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட விவசாயிகள், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் திட்டம் தொடர்பான அரசாணை எண் 276ல் மாற்றம் செய்ய வேண்டும் என்றும், கீழ்பவானி வாய்க்காலில் பழைய கட்டுமானப் பணிகளை மட்டுமே துவங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாசன விவசாய பெருந்துறை அருகே உள்ள கீழ் பவானி கால்வாய் பகுதி அருகே காலவரையற்ற தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். மேலும் இன்று முதல் தொடங்கி உள்ள இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் இரவிலும் ஏராளமான விவசாயிகள் பங்கேற்று உள்ளனர்.

இதையும் படிங்க: ’ரெண்டு நாளா கரண்ட் இல்ல’.. கிராமத்தினர் சாலை மறியலால் பரபரப்பு

கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானி சாகர் அணை ஈஸ்வரன் என்ற சட்டமன்ற உறுப்பினர் விடுத்த கோரிக்கையை அடுத்து காமராஜர் காலத்தில் கட்டப்பட்டது. இந்த அணை கீழ்பவானி கால்வாய் 200 கி.மீ தூரத்திற்கு மண் கால்வாயாக வெட்டப்பட்டது.

இந்த அணையிலிருந்து வெளியேறும் நீரின் மூலம் கீழ்பவானி, தடப்பள்ளி அரக்கன் கோட்டை, காலிங்கராயன் கால்வாய் மூலமாக விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. இந்த பவானிசாகர் அணை தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணையாகவும் ரஷ்யாவில் உள்ள மண் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாகவும் திகழ்ந்து வருகிறது. தற்போது இந்த அணையிலிருந்து முக்கியமான வாசகப் பகுதியாக இருந்து வருவது கீழ்பவானி பாசனம்.

இந்த கீழ்பவானி பாசனம் மூலமாக ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் வரையில் விவசாய நிலங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாசனம் பெற்று வருகிறது. கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ரூபாய் 750 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கான்கிரீட் திட்டப் பணிகள் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கீழ்பவானி மூலம் பாசன வசதி பெறும் விவசாயிகள் இரு தரப்பாகப் பிரிந்து, கான்கிரீட் திட்டத்திற்கு எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்தப் பிரச்சனைத் தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், கான்கிரீட் திட்டப் பணிகளைத் துவங்குவதற்கு எந்த தடையும் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில், கான்கிரீட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: "விஷமாகும் பவானி சாகர் நீர்" ஆர்ப்பாட்டத்தில் குதித்த ஈரோடு மக்கள்.. நடந்தது என்ன?

கீழ்பவானி பாசனப் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட விவசாயிகள், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் திட்டம் தொடர்பான அரசாணை எண் 276ல் மாற்றம் செய்ய வேண்டும் என்றும், கீழ்பவானி வாய்க்காலில் பழைய கட்டுமானப் பணிகளை மட்டுமே துவங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாசன விவசாய பெருந்துறை அருகே உள்ள கீழ் பவானி கால்வாய் பகுதி அருகே காலவரையற்ற தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். மேலும் இன்று முதல் தொடங்கி உள்ள இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் இரவிலும் ஏராளமான விவசாயிகள் பங்கேற்று உள்ளனர்.

இதையும் படிங்க: ’ரெண்டு நாளா கரண்ட் இல்ல’.. கிராமத்தினர் சாலை மறியலால் பரபரப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.