ETV Bharat / state

பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரி மக்கள் சாலை மறியல்! - மணிமலை கிராம மக்கள் போராட்டம்

ஈரோடு: சென்னிமலை அருகே பழுதடைந்த சாலையினை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

manimalai-pepole-road-roco-for-demanding-good-road-service
author img

By

Published : Oct 3, 2019, 5:49 AM IST

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகேயுள்ள மணிமலை கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இந்தப் பகுதியில் உள்ள சாலை மிகவும் மோசமடைந்து உள்ளது.

இந்தச் சாலையினை சீரமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது. இது தொடர்பாக அரசு அலுவலர்களிடம் இப்பகுதிமக்கள் பலமுறை புகாரளித்தும் அவர்கள் எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. மேலும், சீரற்ற சாலையினால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகிவருகின்றனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

இந்நிலையில், உடனடியாக சாலை வசதி செய்து தரக்கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சென்னிமலை அரச்சலூர் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த காவலர்கள், சென்னிமலை பேரூராட்சி அலுவலர்கள் ஆகியோர் பொதுமக்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையினைத் தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்தப் போராட்டத்தின் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: கூண்டில் சிக்கிய சிறுத்தை... பொதுமக்கள் மகிழ்ச்சி!

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகேயுள்ள மணிமலை கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இந்தப் பகுதியில் உள்ள சாலை மிகவும் மோசமடைந்து உள்ளது.

இந்தச் சாலையினை சீரமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது. இது தொடர்பாக அரசு அலுவலர்களிடம் இப்பகுதிமக்கள் பலமுறை புகாரளித்தும் அவர்கள் எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. மேலும், சீரற்ற சாலையினால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகிவருகின்றனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

இந்நிலையில், உடனடியாக சாலை வசதி செய்து தரக்கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சென்னிமலை அரச்சலூர் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த காவலர்கள், சென்னிமலை பேரூராட்சி அலுவலர்கள் ஆகியோர் பொதுமக்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையினைத் தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்தப் போராட்டத்தின் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: கூண்டில் சிக்கிய சிறுத்தை... பொதுமக்கள் மகிழ்ச்சி!

Intro:பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரி மக்கள் சாலை மறியல்!

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே பழுதடைந்த சாலையினை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Body:ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகேயுள்ள மணிமலை கிராமத்தில் 500 க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சாலையினை சீரமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை. இதுதொடர்பாக அரசு அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு. சிதிலமடைந்த சாலையினால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.இந்த நிலையில் உடனடியாக சாலை வசதி செய்து தரகோரி நூற்றுக்கும் மேற்பட்டோர் சென்னிமலை அரச்சலூர் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் சம்பவ பகுதிக்கு வந்த போலீசார் மற்றும் சென்னிமலை பேரூராட்சி அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையினை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். Conclusion:பொதுமக்களின் போராட்டம் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு பரபரப்பும் ஏற்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.