ETV Bharat / state

'திம்பம் மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம்' - வாகன ஓட்டிகள் பீதி! - Leopard walking on the Thimbam Mountains

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதை ஒன்றாவது கொண்டை ஊசி வளைவில் நேற்றிரவு சிறுத்தை ஒன்று மரத்தடியில் நின்றபடி சாலையை கடக்க முயன்ற காட்சியை வாகன ஓட்டிகள் படம் பிடித்துச் சென்றனர்.

திம்பம் மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம்
திம்பம் மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம்
author img

By

Published : Dec 21, 2019, 6:52 PM IST


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை உள்ளிட்ட 50 வகையான வனவிலங்குகள் உள்ளன. இங்கு வனத் துறையினரால் ஆண்டுதோறும் நடைபெறும் கணக்கெடுப்பில் சிறுத்தைகளின் எண்ணிக்கை மட்டும் அதிகளவில் உயர்ந்து கொண்டே இருக்கும்.

திம்பம் மலைப்பாதையில் குரங்குகள், மான்கள் அதிகளவில் நடமாடுவதால் அதனை வேட்டையாடுவதற்கு சிறுத்தைகள் முகாமிட்டுள்ளன. சிறுத்தைகள் நடமாட்டம் காரணமாக பண்ணாரியிலிருந்து திம்பம் வரையிலான 15 கிலோமீட்டர் தூரத்திற்கு இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு வனத் துறையினர் தடைவிதித்துள்ளனர்.

நேற்றிரவு திம்பம் மலைப்பாதை ஒன்றாவது கொண்டை ஊசி வளைவிலிருந்த மரத்தடியில் நான்கு வயதுள்ள ஆண் சிறுத்தை ஒன்று பதுங்கியபடி சாலையை கடக்க முயன்றது. இந்தக் காட்சியை அவ்வழியாக வாகனங்களில் சென்றவர்கள் படம் பிடித்துச் சென்றனர். இதனால் மலைப்பாதையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திம்பம் மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம்

இது குறித்து வனத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சிறுத்தை காட்டுக்குள் சென்றுவிட்டதை வனத் துறையினர் உறுதி செய்தபிறகு வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: சத்தியமங்கலத்தில் பயணிகளை மிரட்டிய சிறுத்தை!


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை உள்ளிட்ட 50 வகையான வனவிலங்குகள் உள்ளன. இங்கு வனத் துறையினரால் ஆண்டுதோறும் நடைபெறும் கணக்கெடுப்பில் சிறுத்தைகளின் எண்ணிக்கை மட்டும் அதிகளவில் உயர்ந்து கொண்டே இருக்கும்.

திம்பம் மலைப்பாதையில் குரங்குகள், மான்கள் அதிகளவில் நடமாடுவதால் அதனை வேட்டையாடுவதற்கு சிறுத்தைகள் முகாமிட்டுள்ளன. சிறுத்தைகள் நடமாட்டம் காரணமாக பண்ணாரியிலிருந்து திம்பம் வரையிலான 15 கிலோமீட்டர் தூரத்திற்கு இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு வனத் துறையினர் தடைவிதித்துள்ளனர்.

நேற்றிரவு திம்பம் மலைப்பாதை ஒன்றாவது கொண்டை ஊசி வளைவிலிருந்த மரத்தடியில் நான்கு வயதுள்ள ஆண் சிறுத்தை ஒன்று பதுங்கியபடி சாலையை கடக்க முயன்றது. இந்தக் காட்சியை அவ்வழியாக வாகனங்களில் சென்றவர்கள் படம் பிடித்துச் சென்றனர். இதனால் மலைப்பாதையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திம்பம் மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம்

இது குறித்து வனத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சிறுத்தை காட்டுக்குள் சென்றுவிட்டதை வனத் துறையினர் உறுதி செய்தபிறகு வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: சத்தியமங்கலத்தில் பயணிகளை மிரட்டிய சிறுத்தை!

Intro:Body:tn_erd_01_sathy_leopard_timbam_vis_tn10009

திம்பம் மலைப்பாதையோரம் நடமாடிய சிறுத்தை. வாகன ஓட்டிகள் பீதி


சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதை 1 ஆவது வளைவில் இன்று சிறுத்தை மரத்தடியில் நின்றபடி சாலையை கடக்க முயன்ற காட்சியை வாகன ஓட்டிகள் படம் பிடித்துள்ளனர்.


சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை உட்பட 50 வகையான வனவிலங்குகள் நடமாடுகின்றன. அதில் ஆண்டுதோறும் சிறுத்தைகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தற்போது திம்பம் மலைப்பாதையில் குரங்குகள் மற்றும் மான்கள் அதிகளவில் நடமாடுவதால் அதனை வேட்டுயாடுவதற்கு சிறுத்தைகள் முகாமிட்டுள்ளன. சிறுத்தை நடமாட்டம் காரணமா பண்ணாரியில் இருந்து திம்பம் வரையிலாயன 15 கிமீ தூரத்தில் இரவு நேரத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இன்று திம்பம் மலைப்பாதை 1 வது கொண்டைஊசி வளைவில் சாலையின் மரத்தடியில் 4 வயதுள்ள் ஆண் சிறுத்தை பதுங்கியபடி சாலையை கடக்க முயன்றது. அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் செல்போனில் வீடியோ எடுத்தனர். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறுத்தை காட்டுக்குள் சென்றவிட்டதை உறுதி செய்தபிறகு வாகனங்கள அனுமதிக்கப்பட்டன.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.