ETV Bharat / state

கஸ்தூரி அரங்கநாதர் கோயில் தேரோட்டம்! - ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயில்

ஈரோடு : கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் நடைபெற்ற தேரோட்ட நிகழ்வில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

விமர்சையாக நடைபெற்ற அருள்மிகு கஸ்தூரி அரங்கநாதர் கோயில் தேரோட்டம்
author img

By

Published : Oct 8, 2019, 3:16 PM IST

ஈரோடு மாவட்டம் கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் தேர்த் திருவிழா புரட்டாசி மாதம் தொடங்கியது. தினமும் காலை ஆறு மணிக்கு கோ பூஜை, திருமஞ்சனம், மகா தீபாராதனை காட்டப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுவருகின்றன.

தினமும் இரவு சாமி புறப்பட்டு கருட வாகனம், குதிரை, யானை, அன்னபட்சி வாகனம், ஹனுமன், சிம்ம வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் திருவீதி உலா வருகின்றது. இதனைத் தொடர்ந்து நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது.

அருள்மிகு கஸ்தூரி அரங்கநாதர் கோயில் தேர்
அருள்மிகு கஸ்தூரி அரங்கநாதர் கோயில் தேர்

இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் இழுத்தல், இன்று காலை எட்டு மணியளவில் தொடங்கியது. அரங்கநாதருக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் தேரானது ஈஸ்வரன் கோயில், மணிக்கூண்டு, பார்க் உள்ளிட்ட பாதைகளின் வழியாக மாரியம்மன் கோயிலுக்கு வந்தடைந்தது. பின்னர், மாலை நான்கு மணிக்கு காமராஜர் வீதி வழியாக கோயில் வளாகத்தை வந்தடையும் எனக் கூறப்படுகிறது.

விமர்சையாக நடைபெற்ற அருள்மிகு கஸ்தூரி அரங்கநாதர் கோயில் தேரோட்டம்

இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து வந்து கலந்துகொண்ட பக்தர்கள் கோலாட்டம் ஆடியும், செண்டை மேளம் முழங்க அரோகரா கோஷத்துடனும் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

இதையும் படிங்க : ஆஞ்சநேயர் கோயிலில் ஆயுதபூஜை கொண்டாட்டம்!

ஈரோடு மாவட்டம் கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் தேர்த் திருவிழா புரட்டாசி மாதம் தொடங்கியது. தினமும் காலை ஆறு மணிக்கு கோ பூஜை, திருமஞ்சனம், மகா தீபாராதனை காட்டப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுவருகின்றன.

தினமும் இரவு சாமி புறப்பட்டு கருட வாகனம், குதிரை, யானை, அன்னபட்சி வாகனம், ஹனுமன், சிம்ம வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் திருவீதி உலா வருகின்றது. இதனைத் தொடர்ந்து நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது.

அருள்மிகு கஸ்தூரி அரங்கநாதர் கோயில் தேர்
அருள்மிகு கஸ்தூரி அரங்கநாதர் கோயில் தேர்

இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் இழுத்தல், இன்று காலை எட்டு மணியளவில் தொடங்கியது. அரங்கநாதருக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் தேரானது ஈஸ்வரன் கோயில், மணிக்கூண்டு, பார்க் உள்ளிட்ட பாதைகளின் வழியாக மாரியம்மன் கோயிலுக்கு வந்தடைந்தது. பின்னர், மாலை நான்கு மணிக்கு காமராஜர் வீதி வழியாக கோயில் வளாகத்தை வந்தடையும் எனக் கூறப்படுகிறது.

விமர்சையாக நடைபெற்ற அருள்மிகு கஸ்தூரி அரங்கநாதர் கோயில் தேரோட்டம்

இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து வந்து கலந்துகொண்ட பக்தர்கள் கோலாட்டம் ஆடியும், செண்டை மேளம் முழங்க அரோகரா கோஷத்துடனும் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

இதையும் படிங்க : ஆஞ்சநேயர் கோயிலில் ஆயுதபூஜை கொண்டாட்டம்!

Intro:ஈரோடு ஆனந்த்
அக்.08

அருள்மிகு கஸ்தூரி அரங்கநாதர் கோயில் தேரோட்டம்!

ஈரோடு அருள்மிகு கஸ்தூரி அரங்கநாதர் கோயில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

Body:ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவில் புரட்டாசி தேர் திருவிழா கடந்த 1ம் தேதி தொடங்கியது. தினமும் காலை 6 மணிக்கு கோ பூஜை, திருமஞ்சனம், மகா தீபாராதனை காட்டப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது.

தினமும் இரவு சாமி புறப்பட்டு கருட வாகனம், குதிரை, யானை, அன்னபட்சி வாகனம், ஹனுமன், சிம்ம வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் திருவீதி உலா வந்து அதனை தொடர்ந்து நேற்று திருக்கல்யாணம் நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்சியான தேர் இழுத்தல் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அரங்கநாதருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தேரானது ஈஸ்வரன் கோயில், மணிக்கூண்டு, பார்க் வழியாக மாரியம்மன் கோயில் நிலையை அடைந்தது. பின்னர் மீண்டும் மாலை நான்கு மணிக்கு காமராஜர் வீதி வழியாக கோயில் வளாகத்தை சென்றடையும்.

இந்நிகழ்வில் ஈரோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் கோலாட்டம் ஆடியும் செண்டை மேளம் முழங்கவும் அரோகரா கோஷத்துடனும் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Conclusion:தேரோடும் வீதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டும் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டு இருந்தது.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.