ETV Bharat / state

மலைப்பகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

author img

By

Published : Apr 5, 2021, 11:21 AM IST

ஈரோடு: பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.

வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்
வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, நாம் தமிழர் கட்சி, தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட ஆறு கட்சிகள் போட்டியிடுகின்றன.

நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி வாக்குப்பதிவுக்குத் தேவையான பொருள்கள் அனுப்பும் பணி சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து அனுப்பப்படுகிறது.

தேர்தல் நடத்தும் அலுவலர் உமாசங்கர் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குப்பதிவுக்குத் தேவையான கன்ட்ரோல் யூனிட், விவிபேட், மாற்று இயந்திரங்கள், வாக்காளர் பதிவுப் படிவம், தாள், ரப்பர் ஸ்டாம்பு, எழுதுபொருள்கள் உள்ளிட்ட 36 பொருள்கள், நோய்த்தடுப்புப் பாதுகாப்புப் பொருள்கள் அனுப்பப்பட்டன.

சத்தியமங்கலத்திலிருந்து மலைப்பகுதிகளுக்கு முதலில் அனுப்பப்பட்டது. தாளவாடி, கடம்பூர், கேர்மாளம் போன்ற பகுதிகளுக்கு அனுப்பும் பணி தொடங்கியது.

பொருள்களுடன் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் அனுப்பப்பட்டுள்ளனர். பொருள்கள் எடுத்துச் செல்லும் லாரியில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. லாரி போகுமிடம், சென்றடையும் நேரம் ஆகியவை உடனடியாகத் தெரியவரும். செல்போன் சேவை இல்லாத கிராமங்களில் வயர்லெஸ் சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாடு அரசியலில் சினிமாவின் பங்கு


பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, நாம் தமிழர் கட்சி, தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட ஆறு கட்சிகள் போட்டியிடுகின்றன.

நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி வாக்குப்பதிவுக்குத் தேவையான பொருள்கள் அனுப்பும் பணி சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து அனுப்பப்படுகிறது.

தேர்தல் நடத்தும் அலுவலர் உமாசங்கர் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குப்பதிவுக்குத் தேவையான கன்ட்ரோல் யூனிட், விவிபேட், மாற்று இயந்திரங்கள், வாக்காளர் பதிவுப் படிவம், தாள், ரப்பர் ஸ்டாம்பு, எழுதுபொருள்கள் உள்ளிட்ட 36 பொருள்கள், நோய்த்தடுப்புப் பாதுகாப்புப் பொருள்கள் அனுப்பப்பட்டன.

சத்தியமங்கலத்திலிருந்து மலைப்பகுதிகளுக்கு முதலில் அனுப்பப்பட்டது. தாளவாடி, கடம்பூர், கேர்மாளம் போன்ற பகுதிகளுக்கு அனுப்பும் பணி தொடங்கியது.

பொருள்களுடன் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் அனுப்பப்பட்டுள்ளனர். பொருள்கள் எடுத்துச் செல்லும் லாரியில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. லாரி போகுமிடம், சென்றடையும் நேரம் ஆகியவை உடனடியாகத் தெரியவரும். செல்போன் சேவை இல்லாத கிராமங்களில் வயர்லெஸ் சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாடு அரசியலில் சினிமாவின் பங்கு


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.