ETV Bharat / state

சமையல் எரிவாயு  கசிவு -  வீடு தீ பிடித்து எரிந்து சேதம்! - Damage to house fires due to gas leak

ஈரோடு: வீட்டில் சமையல் எரிவாயு கசிவு காரணமாக வீடு தீ பிடித்து எரிந்து இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், 30 ஆயிரம் ரூபாய் பணம் சேதமடைந்தது.

house fires due to gas leak
house fires due to gas leak
author img

By

Published : Dec 14, 2019, 10:06 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அளுக்குளி கொள்ளுமேட்டு காலனியைச் சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. (40) இவர் ஒரு கூலித் தொழிலாளி. இன்று காலை வெள்ளியங்கிரி, மனைவி அய்யம்மாள் ஆகியோர் வேலைக்கு சென்றனர்.

சிறிது நேரத்தில் பூட்டியிருந்த வீட்டிற்குள் இருந்த சமையல் எரிவாயு கசிவு ஏற்பட்டு தீ பற்றி எறிந்தது. அதை பார்த்து அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கோபிசெட்டிபாளையம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் தீ மளமளவென பரவியது.

வீடு தீப்பிடித்து எரிந்து சேதம்

மேலும், வீட்டில் வைக்கப்பட்டிருந்த பீரோவில் இருந்த ஒரு சவரன் தங்க நகை, 30 ஆயிரம் ரூபாய் பணம், வீட்டு உபயோகப் பொருட்கள், ஆவணங்கள் என வீட்டிற்குள் இருந்த அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து சேதமானது. இதுகுறித்து நம்பியூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பவானி ஆற்று படித்துறையில் விநாயகர் கோயிலில் மணி மண்டபம் கட்ட தடை

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அளுக்குளி கொள்ளுமேட்டு காலனியைச் சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. (40) இவர் ஒரு கூலித் தொழிலாளி. இன்று காலை வெள்ளியங்கிரி, மனைவி அய்யம்மாள் ஆகியோர் வேலைக்கு சென்றனர்.

சிறிது நேரத்தில் பூட்டியிருந்த வீட்டிற்குள் இருந்த சமையல் எரிவாயு கசிவு ஏற்பட்டு தீ பற்றி எறிந்தது. அதை பார்த்து அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கோபிசெட்டிபாளையம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் தீ மளமளவென பரவியது.

வீடு தீப்பிடித்து எரிந்து சேதம்

மேலும், வீட்டில் வைக்கப்பட்டிருந்த பீரோவில் இருந்த ஒரு சவரன் தங்க நகை, 30 ஆயிரம் ரூபாய் பணம், வீட்டு உபயோகப் பொருட்கள், ஆவணங்கள் என வீட்டிற்குள் இருந்த அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து சேதமானது. இதுகுறித்து நம்பியூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பவானி ஆற்று படித்துறையில் விநாயகர் கோயிலில் மணி மண்டபம் கட்ட தடை

Intro:Body:tn_erd_05_sathy_fire_accident_vis_tn10009

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொள்ளுமேட்டுக்காலனியில் வெள்ளியங்கிரி என்பவரது வீட்டில் சமையல் எரிவாயு உருளை கசிவு காரணமாக வீடு தீப்பிடித்து எரிந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பணம் ரூ.30 ஆயிரம் சேதமடைந்துள்ளது. நம்பியூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்..

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அளுக்குளி கொள்ளுமேட்டு காலணியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (40) கூலித்தொழிலாளி. இன்று காலை வெள்ளியங்கிரியும் மனைவி அய்யம்மாளுடன் வேலைக்கு செல்லும் போது வீட்டை பூட்டிச்சென்று விட்டனர் சிறிது நேரத்தில் பூட்டியிருந்த வீட்டிற்குள் இருந்த சமையல் எரிவாயு உருளையில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதை பார்த்த அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சித்தனர். இது குறித்து தகவல் அறிந்த கோபிசெட்டிபாளையம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் தீ மளமளவென பரவியது. வீட்டில் வைக்கப்பட்டு இருந்த பீரோவில் இருந்த ஒரு சரவன் தங்க நகை ரூ.30 ஆயிரம் பணம் வீட்டு உபயோகப்பொருட்கள் துணி மற்றும் ஆவணங்கள் உட்பட வீட்டிற்குள் இருந்த அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து சேதமானது. இதுகுறித்து நம்பியூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.