ETV Bharat / state

பொறியியல் மாணவர்களுக்கு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அறிவுரை - முன்னாள் கேரளா ஆளுநரும்

ஈரோடு: வேறு மாநிலத்தில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும் இல்லையெனில் மாடுதான் மேய்க்க வேண்டும் என இளைஞர்களுக்கு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சதாசிவம் அறிவுரை வழங்கியுள்ளார்.

advice-from-former-supreme-court-judge-students
advice-from-former-supreme-court-judge-students
author img

By

Published : Feb 8, 2020, 8:28 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தக்குதிரையில் செயல்படும் தனியார் பொறியியல் கல்லூரியில் 2018 –19ஆம் ஆண்டின் மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் கேரளா ஆளுநரும், முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியுமான சதாசிவம் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், ”மும்பை குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை நடைபெற்றபோது மும்பை நீதிமன்றத்திலிருந்து தொலைபேசி வழியாக நேரடியாக பாகிஸ்தான் ஒட்டுக்கேட்ட விஷயத்தை கண்டுப்பிடித்த பிறகே உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றங்களில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. தற்போது உள்ள நீதிபதிகள் மேகாலயா போன்ற மாநிலங்களுக்கு நீதிபதிகளாக நியமனம் செய்தால் அங்கு சென்று பணியாற்ற விரும்புவதில்லை.

இதே போல் நானும் வேறு மாநிலங்களில் பணியாற்ற முடியாது என்று சொல்லியிருந்தால், கிராமத்தில் விவசாயம் செய்து, மாடு மேய்த்துக்கொண்டுதான் இருந்திருப்பேன். நீதிபதிகள் இந்தியாவின் எந்த பகுதிக்கும் சென்று நீதிபதிகளாக பணியாற்ற தயாராகவும் கடமை உணர்வு மிக்கவராகவும் இருக்க வேண்டும்.

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மாணவர்களுகு அறிவுரை

மாணவ, மாணவிகள் கடமை உணர்வுமிக்கவராகவும், அறிவாற்றலுடனும் திகழ வேண்டும். பட்டம் பெற்று பணிக்கு செல்பவர்கள் எந்த ஊராக இருந்தாலும் தனக்கு கொடுக்கப்பட்ட பணிகளை திறம்பட செய்யவேண்டும். அதனால் நீங்கள் எதிர்பார்க்காத பயன்கள் வந்து சேரும்” என்றார்.

இதையும் படிங்க:தேர்வில் முறைகேடென மனு பதிலளிக்குமா? டி.என்.யூ.எஸ்.ஆர்.பி

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தக்குதிரையில் செயல்படும் தனியார் பொறியியல் கல்லூரியில் 2018 –19ஆம் ஆண்டின் மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் கேரளா ஆளுநரும், முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியுமான சதாசிவம் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், ”மும்பை குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை நடைபெற்றபோது மும்பை நீதிமன்றத்திலிருந்து தொலைபேசி வழியாக நேரடியாக பாகிஸ்தான் ஒட்டுக்கேட்ட விஷயத்தை கண்டுப்பிடித்த பிறகே உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றங்களில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. தற்போது உள்ள நீதிபதிகள் மேகாலயா போன்ற மாநிலங்களுக்கு நீதிபதிகளாக நியமனம் செய்தால் அங்கு சென்று பணியாற்ற விரும்புவதில்லை.

இதே போல் நானும் வேறு மாநிலங்களில் பணியாற்ற முடியாது என்று சொல்லியிருந்தால், கிராமத்தில் விவசாயம் செய்து, மாடு மேய்த்துக்கொண்டுதான் இருந்திருப்பேன். நீதிபதிகள் இந்தியாவின் எந்த பகுதிக்கும் சென்று நீதிபதிகளாக பணியாற்ற தயாராகவும் கடமை உணர்வு மிக்கவராகவும் இருக்க வேண்டும்.

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மாணவர்களுகு அறிவுரை

மாணவ, மாணவிகள் கடமை உணர்வுமிக்கவராகவும், அறிவாற்றலுடனும் திகழ வேண்டும். பட்டம் பெற்று பணிக்கு செல்பவர்கள் எந்த ஊராக இருந்தாலும் தனக்கு கொடுக்கப்பட்ட பணிகளை திறம்பட செய்யவேண்டும். அதனால் நீங்கள் எதிர்பார்க்காத பயன்கள் வந்து சேரும்” என்றார்.

இதையும் படிங்க:தேர்வில் முறைகேடென மனு பதிலளிக்குமா? டி.என்.யூ.எஸ்.ஆர்.பி

Intro:Body:வேறு மாநிலத்தில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும் இல்லையெனில் மாடு தான் மேய்க்கவேண்டும்: முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சதாசிவம் அறிவுரை

tn_erd_03_sathy_supremecpurt_judge_vis_tn10009

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தக்குதிரையில் செயல்படும் தனியார் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற கேரள முன்னாள் ஆளுநர் சதாசிவம் நான் வேறு மாநிலங்களில் பணியாற்ற முடியாது என்று கூறியிருந்தால் விவசாயம் தான் செய்து கொண்டிருக்க முடியும் என்றும் மும்பை குண்டு வெடிப்பு வழக்கிற்கு பிறகு தான் உயர் நீதிமன்றங்களில் செல்போனுக்கு தடை விதிக்கப்பட்டதாகவும் நீதிபதிகள் எந்த மாநிலத்திற்கும் சென்று கடமையாற்ற வேண்டும் என்றும் பேசினார்

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தக்குதிரையில் செயல்படும் தனியார் பொறியியல் கல்லூரியில் 2018 – 19ஆம் ஆண்டு இறுதி மாணவ மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற முன்னாள் கேரளா ஆளுநரும் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியுமான சதாசிவம் பங்கேற்று கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது விழாவில் பேசுகையில் மும்பை குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை நடைபெற்ற போது மும்பை நீதிமன்றத்திலிருந்து தொலைபேசி வழியாக நேரடியாக பாகிஸ்தான் ஒட்டு கேட்ட விசயத்தை கண்டு பிடித்த பிறகே உயர்நீதி மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. தற்போது உள்ள நீதிபதிகள் மேகலயா போன்ற மாநிலங்களுக்கு நீதிபதிகளாக நியமனம் செய்தால் அங்கு சென்று பணியாற்ற விரும்புவதில்லை. இதே போல் நானும் வேறு மாநிலங்களில் பணியாற்ற முடியாது என்று சொல்லியிருந்தால் கிராமத்தில் விவசாயம் செய்து மாடு மேய்த்துக்கொண்டு தான் இருந்திருப்பேன் என்றும் நீதிபதிகள் இந்தியாவின் எந்த பகுதிக்கும் சென்று நீதிபதிகளாக பணியாற்ற தயாராகவும் கடமை உணர்வு மிக்கவராகவும் இருக்க வேண்டும் என்றும் பேசினார். மேலும் மாணவ மாணவிகள் கடமை உணர்வு மிக்கவராகவும் அறிவாற்றலுடனும் திகழவேண்டும் என்றும் பட்டம் பெற்று பணிக்கு செல்பவர்கள் எந்த ஊராக இருந்தாலும் தனக்கு கொடுக்கப்பட்ட பணிகளை திறம்பட செய்யவேண்டும் என்றும் அதனால் நீங்கள் எதிர்பார்க்காத பயன்கள் வந்து சேரும் எனவும் தெரிவித்தார். இவ்விழாவில் கல்லூரி முதல்வர் நிர்வாகிகள் மாணவ மாணவிகள் மற்றும் பொற்றோர்கள் என ஏராளமானோர்கள் கலந்துகொண்டனர்…

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.