ETV Bharat / state

மதுயில்லா தீபாவளி கொண்டாட அரசு ஒத்துழைக்க வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன்!

author img

By

Published : Oct 24, 2019, 3:49 AM IST

ஈரோடு: தமிழ்நாடு அரசு அக். 26, 27, 28 ஆகிய நாட்களுக்கு மதுக்கடைகளை மூடி மதுவற்ற தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

பொன்.ராதாகிருஷ்ணன்

ஈரோடு மாவட்டம் பவானியில் பாஜக நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தீபாவளியின் போது சீன பட்டாசுகளை விற்பனை செய்யவோ, வெடிக்கவோ கூடாது என்கிற மத்திய அரசின் அறிவிப்பின் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டாசுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைக்காக அரசு மேற்கொள்ளும் அனைத்து வகை நடவடிக்கைகளும் வரவேற்கத்தக்கது. நரேந்திர மோடி தமிழின் பெருமையை உலகமே தெரிந்து கொள்ளும் வகையில் முதன்மைப்படுத்தி பேசி வருவது தமிழ் மொழிக்கும், தமிழ் மண்ணுக்கும், தமிழர்களுக்கும் பெருமையளிக்கக் கூடியது என்பதால் தமிழ்நாடு அரசு, சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சி சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி பிரதமருக்கு நன்றி செலுத்திடும் வகையில் சிறப்புத் தீர்மானத்தையும் நிறைவேற்ற வேண்டும்.

பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு

தமிழ்நாடு அரசு தீபாவளிப் பண்டிகைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக வந்திருக்கும் தகவல் செய்தித்தாள்களில் படித்தேன். மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளை கொண்டாடப்படும் ஆண்டில், மதுவற்ற தீபாவளியாக மக்கள் கொண்டாடுவதற்கு தமிழ்நாடு அரசு அக்.26, 27, 28 ஆகிய நாட்களுக்கு மதுக்கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: கை ஓங்குமா? இலை துளிர்க்குமா? பெரும் எதிர்பார்ப்பில் நாங்குநேரி!

ஈரோடு மாவட்டம் பவானியில் பாஜக நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தீபாவளியின் போது சீன பட்டாசுகளை விற்பனை செய்யவோ, வெடிக்கவோ கூடாது என்கிற மத்திய அரசின் அறிவிப்பின் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டாசுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைக்காக அரசு மேற்கொள்ளும் அனைத்து வகை நடவடிக்கைகளும் வரவேற்கத்தக்கது. நரேந்திர மோடி தமிழின் பெருமையை உலகமே தெரிந்து கொள்ளும் வகையில் முதன்மைப்படுத்தி பேசி வருவது தமிழ் மொழிக்கும், தமிழ் மண்ணுக்கும், தமிழர்களுக்கும் பெருமையளிக்கக் கூடியது என்பதால் தமிழ்நாடு அரசு, சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சி சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி பிரதமருக்கு நன்றி செலுத்திடும் வகையில் சிறப்புத் தீர்மானத்தையும் நிறைவேற்ற வேண்டும்.

பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு

தமிழ்நாடு அரசு தீபாவளிப் பண்டிகைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக வந்திருக்கும் தகவல் செய்தித்தாள்களில் படித்தேன். மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளை கொண்டாடப்படும் ஆண்டில், மதுவற்ற தீபாவளியாக மக்கள் கொண்டாடுவதற்கு தமிழ்நாடு அரசு அக்.26, 27, 28 ஆகிய நாட்களுக்கு மதுக்கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: கை ஓங்குமா? இலை துளிர்க்குமா? பெரும் எதிர்பார்ப்பில் நாங்குநேரி!

Intro:ஈரோடு ஆனந்த்
அக்.23

3 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூடி மதுவில்லா தீபாவளி கொண்டாட தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன்!

தமிழக அரசு 26, 27 மற்றும் 28 ஆகிய நாட்களுக்கு மதுபானக்கடைகளை மூடி மக்கள் மதுவற்ற தீபாவளியைக் கொண்டாட ஒத்துழைத்திட வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் பவானியில் கட்சியின் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஈரோட்டில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், தீபாவளியின் போது சீனா நாட்டுப் பட்டாசுகளை விற்பனை செய்யவோ, வெடிக்கவோ கூடாது என்கிற மத்திய அரசின் அறிவிப்பின் மூலம் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டாசுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்றார்.

Body:மேலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைக்காக தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து வகை நடவடிக்கைகளும் வரவேற்கத்தக்கது என்றாலும் கிராம பஞ்சாயத்து முதல் மாநகராட்சி வரை டெங்கு காய்ச்சலுக்கு காரணமான ஏடிஸ் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாவதற்கும், சுகாதாரமற்ற நிலையில் அரசு அலுவலகங்களை பராமரித்து வரும் அரசு அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுத்திட அரசு முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மேலும் நரேந்திரமோடி தமிழின் பெருமையை உலகமே தெரிந்து கொள்ளும் வகையில் தமிழ் மொழியை முதன்மைப்படுத்தி பேசி வருவது தமிழ் மொழிக்கும், தமிழ் மண்ணுக்கும், தமிழர்களுக்கும் பெருமையளிக்கக் கூடியது என்பதால் தமிழக அரசு சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிக் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி பிரதமருக்கு நன்றி செலுத்திடும் வகையில் சிறப்புத் தீர்மானத்தையும் நிறைவேற்றிட வேண்டும் என்றார்.

ரஜினி பாஜகவுக்கு வந்தாலும், தனிக்கட்சி துவங்கினாலும் ஏனைய கட்சிகளுக்குதான் அழிவு என்பதால் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கட்சிகள் பயந்த நிலையிலுள்ளதாகவும், ரஜினிகாந்த் அரசியலில் கால் வைத்திடும் போது அது புதிய அரசியலின் சரித்திரம் எழுதப்படுவதற்கான துவக்கமாக இருக்கும் என்றும் தான் நம்புவதாகவும் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Conclusion:தமிழக அரசு தீபாவளிப் பண்டிகைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக வந்திருக்கும் தகவல் செய்தித்தாள்களில் படித்ததாகவும், மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் ஆண்டில் கொண்டாடப்படும் தீபாவளியை மதுவற்ற தீபாவளியாக மக்கள் கொண்டாடுவதற்கு தமிழக அரசு 26,27 மற்றும் 28 ஆகிய நாட்களுக்கு அரசு மதுபானக்கடைகளை மூடி மக்கள் மதுவற்ற தீபாவளியைக் கொண்டாட ஒத்துழைத்திட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

பேட்டி : பொன்.ராதாகிருஷ்ணன் – முன்னாள் மத்திய அமைச்சர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.