ETV Bharat / state

இயல்புநிலைக்கு திரும்பும் மாயாறு: மக்கள் பரிசல் பயணம்

ஈரோடு: மாயாற்றில் வெள்ளம் வடிந்ததையடுத்து அங்கு இயல்புநிலை திரும்புவதால் தெங்குமரஹாடா மக்கள் வழக்கம்போல் பரிசலில் ஆற்றைக் கடந்து பவானிசாகர் செல்கின்றனர்.

author img

By

Published : Aug 10, 2019, 12:18 PM IST

தெங்குமரஹடா

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒருவார காலமாக கனமழை பெய்ததால் மாயாற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது. மாயாற்றில் தண்ணீர் வெள்ளம்போல் கரைபுரண்டோடிய நிலையில் ஆபத்தை உணராத தெங்குமரஹாடா மக்கள் பரிசலில் ஆற்றைக் கடந்து பவானிசாகர் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு, நீலகிரி மாவட்ட ஆட்சியர்கள் பரிசலில் ஆற்றைக் கடக்கக் கூடாது என அறிவுறுத்தியிருந்தனர். மேலும், இரண்டு தினங்களாக தெங்குமரஹாடாவில் பரிசல் பயணம் தடைபட்டது.

பவானிசாகரிலிருந்து பேருந்தில் பயணித்த மக்கள் இரு தினங்களாக வனத் துறை காட்சி கோபுரம் வளாகத்தில் தங்கவைக்கப்பட்டனர். தற்போது, மாயாற்றில் வெள்ளம் வடிந்து இயல்பு நிலை திரும்பிவருவதால், மக்கள் தற்போது பரிசலில் மீண்டும் மாயாற்றை கடந்து ஊருக்குள் சென்றுகொண்டிருக்கின்றனர்.

கரைபுரண்டோடும் வெள்ளத்தில் பரிசலில் செல்லும் மக்கள்

இருப்பினும் மாயாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவது கணிக்கமுடியாத சூழல் என்பதால் பரிசலை கவனமாக இயக்குமாறு வனத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒருவார காலமாக கனமழை பெய்ததால் மாயாற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது. மாயாற்றில் தண்ணீர் வெள்ளம்போல் கரைபுரண்டோடிய நிலையில் ஆபத்தை உணராத தெங்குமரஹாடா மக்கள் பரிசலில் ஆற்றைக் கடந்து பவானிசாகர் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு, நீலகிரி மாவட்ட ஆட்சியர்கள் பரிசலில் ஆற்றைக் கடக்கக் கூடாது என அறிவுறுத்தியிருந்தனர். மேலும், இரண்டு தினங்களாக தெங்குமரஹாடாவில் பரிசல் பயணம் தடைபட்டது.

பவானிசாகரிலிருந்து பேருந்தில் பயணித்த மக்கள் இரு தினங்களாக வனத் துறை காட்சி கோபுரம் வளாகத்தில் தங்கவைக்கப்பட்டனர். தற்போது, மாயாற்றில் வெள்ளம் வடிந்து இயல்பு நிலை திரும்பிவருவதால், மக்கள் தற்போது பரிசலில் மீண்டும் மாயாற்றை கடந்து ஊருக்குள் சென்றுகொண்டிருக்கின்றனர்.

கரைபுரண்டோடும் வெள்ளத்தில் பரிசலில் செல்லும் மக்கள்

இருப்பினும் மாயாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவது கணிக்கமுடியாத சூழல் என்பதால் பரிசலை கவனமாக இயக்குமாறு வனத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Intro:nullBody:tn_erd_03_sathy_mayaru_normal_boat_ vis_tn10009

இயல்புநிலை திரும்பியது:
மாயாற்றில் வெள்ளம் வடிந்ததால் பரிசலில் ஆற்றை கடந்த தெங்குமரஹாடா மக்கள்

சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணைக்கு முக்கிய நீர்வரத்தாக மாயாறு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் மழைநீர் மாயாற்றில் கலந்து காட்டாற்று வெள்ளமாக உருவெடுத்து பவானிசாகர் அணையில் கலக்கிறது. மாயாற்று வெள்ளம் கரைபுண்யோடியதால் ஆபத்தை உணராமல் தெங்குமரஹாடா மக்கள் பரிசலில் ஆற்றை கடந்து பவானிசாகர் சென்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு மற்றும் நீலகரி மாவட்ட ஆட்சியர்கள் பரிசலில் ஆற்றைக் கடக்க கூடாது என உத்தரவிட்டனர். இதனால் இரு தினங்களாக தெங்குமரஹாடாவுக்குள் செல்வதும் அங்கிருந்து வெளியே போவதும் தடைபட்டது. பவானிசாகரில் இருந்து பேருந்தில் வந்த மக்கள் இரு தினங்களாக வனத்துறை காட்சி கோபுரம் வளாகத்தில் தங்க வைக்கப்பட்டு உணவு பரிமாறப்ட்டது. தற்போது மாயாற்றில் வெள்ளம் வடிந்து இயல்பு நிலை திரும்பியதால் மக்கள் தற்போது பரிசலில் மீண்டும் மாயாற்றை கடந்து ஊருக்குள் சென்றனர். இருப்பினும் மாயாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவது கணிக்கமுடியாத சூழல் என்பதால் பரிசலை கவனமாக இயக்குமாறு வனத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.


Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.