ETV Bharat / state

நிதியாளர் கடத்தி தாக்கப்பட்ட வழக்கில் 5 பேர் கைது

ஈரோடு: நிதியாளரைக் (ஃபைனான்சியர்) கடத்தி தாக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்த ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

பைனான்சியர் கடத்தி தாக்கிய வழக்கில் ஐந்து பேர் கைது
author img

By

Published : Jun 17, 2019, 9:05 AM IST

ஈரோடு மாவட்டம் ரகுபதிநாயக்கன்பாளையம், ரெயின்போ காலனியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்துகொண்டே நிதி நிறுவனமும் நடத்திவருகிறார். ஈரோடு ரயில் நிலையம் பகுதியில் சாய் நிதி நிறுவனம் நடத்திவரும் வீரமணி என்பவர் 25 லட்ச ரூபாய் தமிழ்ச்செல்வனிடம் கடனாக வாங்கியுள்ளார். கடன் வாங்கியது தொடர்பாக இருவருக்கும் சில நாட்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் ஜூன் 6ஆம் தேதி வீரமணி தனது அலுவலகத்திற்கு வந்து பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு தமிழ்ச்செல்வனை அழைத்துள்ளார். பணத்தை வாங்க தமிழ்ச்செல்வன் சென்றுள்ளார். அப்போது வீரமணி, அவரது நண்பர்கள் சேர்ந்து தமிழ்ச்செல்வனை சரமாரியாக தாக்கி கத்தியால் குத்தியுள்ளனர். மேலும், தமிழ்ச்செல்வனை காரில் கடத்திச்சென்று சரமாரியாக தாக்கியுள்ளனார்.

அவர்களிடமிருந்து, தப்பித்து ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு தமிழ்ச்செல்வன் சேர்ந்தார். இது குறித்து ஈரோடு சூரம்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணைமேற்கொண்டனர். இந்நிலையில் ஈரோட்டைச் சேர்ந்த விவேக், கார்த்தி, சிவபிரசாத் ஆகிய மூன்று பேரையும் 8ஆம் தேதி கைது செய்தனர். இவ்வழக்கில், தலைமறைவாக இருந்த பிரேம்குமார், நாகராஜ், சரவணன், கிரண், ஸ்ரீதர் ஆகிய ஐந்து பேரையும் நேற்று சூரம்பட்டி காவல் துறையினர் கைது செய்தனர். முக்கியக் குற்றவாளியான வீரமணி, செந்தில் ஆகியோரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் ரகுபதிநாயக்கன்பாளையம், ரெயின்போ காலனியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்துகொண்டே நிதி நிறுவனமும் நடத்திவருகிறார். ஈரோடு ரயில் நிலையம் பகுதியில் சாய் நிதி நிறுவனம் நடத்திவரும் வீரமணி என்பவர் 25 லட்ச ரூபாய் தமிழ்ச்செல்வனிடம் கடனாக வாங்கியுள்ளார். கடன் வாங்கியது தொடர்பாக இருவருக்கும் சில நாட்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் ஜூன் 6ஆம் தேதி வீரமணி தனது அலுவலகத்திற்கு வந்து பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு தமிழ்ச்செல்வனை அழைத்துள்ளார். பணத்தை வாங்க தமிழ்ச்செல்வன் சென்றுள்ளார். அப்போது வீரமணி, அவரது நண்பர்கள் சேர்ந்து தமிழ்ச்செல்வனை சரமாரியாக தாக்கி கத்தியால் குத்தியுள்ளனர். மேலும், தமிழ்ச்செல்வனை காரில் கடத்திச்சென்று சரமாரியாக தாக்கியுள்ளனார்.

அவர்களிடமிருந்து, தப்பித்து ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு தமிழ்ச்செல்வன் சேர்ந்தார். இது குறித்து ஈரோடு சூரம்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணைமேற்கொண்டனர். இந்நிலையில் ஈரோட்டைச் சேர்ந்த விவேக், கார்த்தி, சிவபிரசாத் ஆகிய மூன்று பேரையும் 8ஆம் தேதி கைது செய்தனர். இவ்வழக்கில், தலைமறைவாக இருந்த பிரேம்குமார், நாகராஜ், சரவணன், கிரண், ஸ்ரீதர் ஆகிய ஐந்து பேரையும் நேற்று சூரம்பட்டி காவல் துறையினர் கைது செய்தனர். முக்கியக் குற்றவாளியான வீரமணி, செந்தில் ஆகியோரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

ஈரோடு 16.06.2019
சதாசிவம்

ஈரோட்டில் நிதி நிறுவன அதிபரை கடத்தி தாக்கிய வழக்கி ஈரோட்டில் பைனான்ஸ் அதிபரை கடத்தி தாக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்த 5பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு அருகே ரகுபதிநாயக்கன்பாளையம் ரெயின்போ காலனி பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன்.இவர் ஈரோடு வாய்க்கால்மேடு பகுதியில் பைனான்ஸ் அலுவலகம் நடத்தி வருகிறார். மேலும் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இந்நிலையில் இவரிடம் ஈரோடு ரயில்நிலையம் பகுதியில் சாய் பைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வரும் ஈரோடு டி.மேட்டுப்பாளையத்தை சேர்ந்த வீரமணி என்பவர் 25 லட்ச ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். கடன் வாங்கியது தொடர்பாக இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 6ம்தேதி மாலை வீரமணி, தமிழ்ச்செல்வனை அழைத்துள்ளார். அப்போது ரயில்நிலையம் அருகில் உள்ள தனது அலுவலகத்திற்கு வந்தால் பணத்தை திருப்பி தருவதாக அழைத்துள்ளார். இதை நம்பிய தமிழ்ச்செல்வன் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த வீரமணி மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து தமிழ்ச்செல்வனை சராமரியாக தாக்கியுள்ளனர். மேலும் கத்தியால் குத்தியுள்ளனர். மேலும், தமிழ்ச்செல்வனை காரில் கடத்தி சென்று, காரில் வைத்தும் சரமாரியாக தாக்கினர். இதில் அந்த கும்பலிடம் தப்பி ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டனர்.

இவ்வழக்கில் தமிழ்ச்செல்வனை தாக்கியதாக கடந்த 8ம் தேதி, ஈரோடு சூரம்பட்டிவலசு பாரிவள்ளல் வீதியைச் சேர்ந்த  விவேக் ஈரோடு தீயணைப்பு நிலையம் பின்புறம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் கார்த்தி(29), ஈரோடு சூரம்பட்டி கண்ணகி வீதியைச் சேர்ந்த மகன் சிவபிரசாத்  ஆகிய 3பேரையும் கைது செய்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த ஈரோடு சூரம்பட்டி திருவள்ளுவர் வீதியை சேர்ந்த  பிரேம்குமார், சூரம்பட்டி நேதாஜி வீதியை சேர்ந்த  நாகராஜ், சூரம்பட்டி அணைக்கட்டு இந்திரா காந்தி வீதியை சேர்ந்த  சரவணன் என்ற புறா சரவணன், சூரம்பட்டி வஉசி வீதியை சேர்ந்த  கிரண், பாரிவள்ளல் வீதியை சேர்ந்த  ஸ்ரீதர்ஆகிய 5பேரை நேற்று சூரம்பட்டி போலீசார் கைது செய்தனர். மேலும் முக்கிய குற்றவாளியான வீரமணி, செந்தில் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.