ETV Bharat / state

நீர்த் தேக்கத்தில் குளிக்கச் சென்ற நான்கு மாணவர்கள் உயிரிழப்பு! - Erode latest news

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை சித்தன்குட்டை பகுதியில் குளிக்கச் சென்ற ஐந்து மாணவர்களில் நான்கு பேர் உயிரிழந்தது, சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீரில் முழுகிய நண்பர்கள்
நீரில் முழுகிய நண்பர்கள்
author img

By

Published : Jun 20, 2020, 9:21 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்தவுள்ள சித்தன்குட்டை பகுதியில் விவசாயிகள் மோட்டார் மூலம் நீர் இறைத்து விவசாயம் செய்து வருகின்றனர். இதற்காக நீர்த்தேக்கப் பகுதியில் சிறிய அளவிலான குழிவெட்டியில், குழாய் அமைத்து தண்ணீர் எடுத்து வருகின்றனர். அந்நீர்த் தேக்கத்தில் வெளியூர் இளைஞர்கள் குளித்துச் செல்வது வழக்கம்.

இந்நிலையில், கோவை மாவட்டம் அன்னூர் கணேசபுரத்தைச் சேர்ந்த என்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் பிரனேஷ், ரகுராம், யஸ்வந்த், கதிரேசன், சுரேஷ்ராஜ் ஆகியோர் இருசக்கர வாகனங்களில் பவானிசாகர் அணை நீர்த்தேக்கப் பகுதியான சித்தன்குட்டைக்கு சென்று, குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது குழி இருப்பது தெரியாமல் முதலில் பிரனேஷ் கிணற்றில் சிக்கி நீரில் மூழ்கினார். உடனே அவரை காப்பாற்ற ரகுராம், யஸ்வந்த், கதிரேசன் ஆகியோர் சென்றார். ஆனால் நான்கு பேரும் நீரில் மூழ்கி மாயமானார்கள். இது குறித்து காவல் துறையினருக்கு சுரேஷ்ராஜ் தகவல் கொடுத்தார்.

அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், தீயணைப்பு வீரர்களின் உதவியோடு, நீரில் மூழ்கிய 4 பேரின் உடலை மீட்டனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்தவுள்ள சித்தன்குட்டை பகுதியில் விவசாயிகள் மோட்டார் மூலம் நீர் இறைத்து விவசாயம் செய்து வருகின்றனர். இதற்காக நீர்த்தேக்கப் பகுதியில் சிறிய அளவிலான குழிவெட்டியில், குழாய் அமைத்து தண்ணீர் எடுத்து வருகின்றனர். அந்நீர்த் தேக்கத்தில் வெளியூர் இளைஞர்கள் குளித்துச் செல்வது வழக்கம்.

இந்நிலையில், கோவை மாவட்டம் அன்னூர் கணேசபுரத்தைச் சேர்ந்த என்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் பிரனேஷ், ரகுராம், யஸ்வந்த், கதிரேசன், சுரேஷ்ராஜ் ஆகியோர் இருசக்கர வாகனங்களில் பவானிசாகர் அணை நீர்த்தேக்கப் பகுதியான சித்தன்குட்டைக்கு சென்று, குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது குழி இருப்பது தெரியாமல் முதலில் பிரனேஷ் கிணற்றில் சிக்கி நீரில் மூழ்கினார். உடனே அவரை காப்பாற்ற ரகுராம், யஸ்வந்த், கதிரேசன் ஆகியோர் சென்றார். ஆனால் நான்கு பேரும் நீரில் மூழ்கி மாயமானார்கள். இது குறித்து காவல் துறையினருக்கு சுரேஷ்ராஜ் தகவல் கொடுத்தார்.

அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், தீயணைப்பு வீரர்களின் உதவியோடு, நீரில் மூழ்கிய 4 பேரின் உடலை மீட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.