ETV Bharat / state

வனவர் வீட்டில் தீ விபத்து: ரூ.3 லட்சம் பொருள்கள் நாசம்! - வன அலுவலர் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.3 லட்சம் பொருட்கள் சேதம்

ஈரோடு: வனத் துறை அலுவலர் வீட்டில் மின் கசிவினால் ஏற்பட்ட தீவிபத்தில் சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து நாசமடைந்தன.

fire accident at forest officier home
fire accident at forest officier home
author img

By

Published : Dec 20, 2019, 4:51 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குள்பட்ட ஐய்யப்பாநகரிலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவராகப் பணியாற்றும் அருண்பிரகாஸ் தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்துவருகிறார். இன்று காலை அருண்பிரகாஸ் சத்தியமங்கலத்திற்கு வேலைக்குச் சென்ற நிலையில், அவரது தாயாரும் உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டார். வீட்டில் அருண்பிரகாஸின் தம்பி கோகுல் மட்டும் தூங்கிக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது மற்றொரு படுக்கை அறையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டு அறை பற்றி எரியத் தொடங்கியுள்ளது. புகை வெளியேறுவதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

விரைந்துவந்த தீயணைப்புத் துறையினர் வீட்டின் சமையறையிலிருந்த எரிவாயு உருளையை அப்புறப்படுத்திவிட்டு தீயைக் கட்டுப்படுத்தி பக்கத்து வீடுகளில் பரவாமல் அணைத்தனர்.

தீ விபத்தில் எரிந்து நாசமான பொருள்கள்

இவ்விபத்தில் வீட்டிலிருந்த கட்டில், பீரோ, துணிகள், சொத்து ஆவணங்கள் என சுமார் மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. தீ விபத்து ஏற்பட்டதும் கோகுல் வீட்டைவிட்டு வெளியேறியதால் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். விபத்து குறித்து கோபிசெட்டிபாளையம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் கட்டடத் தொழிலாளி!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குள்பட்ட ஐய்யப்பாநகரிலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவராகப் பணியாற்றும் அருண்பிரகாஸ் தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்துவருகிறார். இன்று காலை அருண்பிரகாஸ் சத்தியமங்கலத்திற்கு வேலைக்குச் சென்ற நிலையில், அவரது தாயாரும் உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டார். வீட்டில் அருண்பிரகாஸின் தம்பி கோகுல் மட்டும் தூங்கிக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது மற்றொரு படுக்கை அறையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டு அறை பற்றி எரியத் தொடங்கியுள்ளது. புகை வெளியேறுவதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

விரைந்துவந்த தீயணைப்புத் துறையினர் வீட்டின் சமையறையிலிருந்த எரிவாயு உருளையை அப்புறப்படுத்திவிட்டு தீயைக் கட்டுப்படுத்தி பக்கத்து வீடுகளில் பரவாமல் அணைத்தனர்.

தீ விபத்தில் எரிந்து நாசமான பொருள்கள்

இவ்விபத்தில் வீட்டிலிருந்த கட்டில், பீரோ, துணிகள், சொத்து ஆவணங்கள் என சுமார் மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. தீ விபத்து ஏற்பட்டதும் கோகுல் வீட்டைவிட்டு வெளியேறியதால் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். விபத்து குறித்து கோபிசெட்டிபாளையம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் கட்டடத் தொழிலாளி!

Intro:Body:tn_erd_05_sathy_fire_accident_vis_tn10009

கோபிசெட்டிபாளையம் ஐயப்பா நகரில் வசிக்கும் அருண்பிரகாஸ் என்ற வனத்துறை அலுவலர் வீட்டில் மின் கசிவினால் ஏற்பட்ட தீவிபத்தில் வீட்டு உபயோகப்பொருட்கள் உட்பட லட்சக்கணக்கான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது.

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட ஐய்யப்பாநகரில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவராக பணியாற்றும் அருண் பிரகாஸ் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இன்று காலை அருண்பிரகாஸ் சத்தியமங்கலத்திற்கு வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் அவரது தாயாரும் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். வீட்டில் அருண்பிரகாசின் தம்பி கோகுல் மட்டும் தூங்கி கொண்டு இருந்துள்ளார். அப்போது மற்றொரு படுக்கை அறையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக திடீரென தீவிபத்து ஏற்பட்டு பற்றி எரியத்தொடங்கியுள்ளது. அக்கம் பக்கம் உள்ளவர்கள் புகை வெளியேறுவதை பார்த்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் வீட்டின் சமையறையில் இருந்த எரிவாயு உருளையை அப்புறப்படுத்திவிட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்து பக்கத்து வீடுகளில் பரவாமல் தடுத்ததுடன் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இத்தீவிபத்தில் வீட்டில் இருந்த கட்டில், பீரோ, துணிகள் மற்றும் சொத்து ஆவணங்கள் என சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது. தீ விபத்து ஏற்பட்டதும் கோகுல் வீட்டை விட்டு வெளியேறியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. வனத்துறை அதிகாரியின் வீட்டில் மின் கசிவினால் ஏற்பட்ட தீவிபத்தினால் அப்பகுதி மக்களிடம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீ விபத்து குறித்து கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.