ETV Bharat / state

ஐடிபிஎல் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் பொங்கல் வைத்து ஆர்ப்பாட்டம்!

author img

By

Published : Jul 14, 2020, 11:42 PM IST

ஈரோடு: அறச்சலூர் அருகே அனுமன்பள்ளியில் விவசாய விளைநிலத்தில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் ஐடிபிஎல் திட்டத்திற்காக, தமிழ்நாட்டின் 7 மாவட்ட விவசாய விளைநிலங்கள் வழியாக குழாய்கள் பதித்து எண்ணெய் கொண்டு செல்வதைக் கைவிட வலியுறுத்தியும், திட்டத்தைக் கண்டித்தும் பொங்கல் வைத்தும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கெயில் திட்டம்
கெயில் திட்டம்

பாரத் பெட்ரோலிய நிறுவனம் 'ஐடிபிஎல்' என்கிற திட்டத்திற்காக தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம் இருகூரிலிருந்து ஈரோடு, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்கள் வழியாக சுமார் 317 கிலோ மீட்டர் தூரம் விவசாய விளைநிலங்கள் வழியாக குழாய்கள் பதித்து எண்ணெய் கொண்டு செல்லும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.

இந்தத் திட்டத்திற்கு 7 மாவட்ட விவசாயிகள் கடந்த பல மாதங்களாக தொடர்ந்து எதிர்த்தும், திட்டத்தை கண்டித்தும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஐடிபிஎல் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில், பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் ஐடிபிஎல் திட்டத்தைக் கண்டித்து, ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே அனுமன்பள்ளியில் உள்ள விவசாய விளைநிலத்தில் விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தியபடியும், பொங்கல் வைத்தும் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, திட்டத்திற்காக விவசாய விளைநிலங்களை வலுக்கட்டாயமாக நில எடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டும். கெயில் குழாய் திட்டத்தின் போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, கெயில் குழாய்களை சாலையோரத்தில் அமைத்ததைப் போல இந்தத் திட்டத்திற்குமான குழாய்களையும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சாலையோரத்தில் பதித்திட வேண்டும்.

விவசாய வேளாண் நிலங்களைப் பாழ்படுத்தாமல் விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாத்திடும் வகையில் திட்டத்தை மாற்றுப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

விவசாய விளைநிலங்கள் வழியாக ஐடிபில் குழாய்கள் கொண்டு செல்வது நிறுத்தப்படும் வரை தங்களது அஹிம்சை வழியிலான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என்று விவசாயக் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

பாரத் பெட்ரோலிய நிறுவனம் 'ஐடிபிஎல்' என்கிற திட்டத்திற்காக தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம் இருகூரிலிருந்து ஈரோடு, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்கள் வழியாக சுமார் 317 கிலோ மீட்டர் தூரம் விவசாய விளைநிலங்கள் வழியாக குழாய்கள் பதித்து எண்ணெய் கொண்டு செல்லும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.

இந்தத் திட்டத்திற்கு 7 மாவட்ட விவசாயிகள் கடந்த பல மாதங்களாக தொடர்ந்து எதிர்த்தும், திட்டத்தை கண்டித்தும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஐடிபிஎல் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில், பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் ஐடிபிஎல் திட்டத்தைக் கண்டித்து, ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே அனுமன்பள்ளியில் உள்ள விவசாய விளைநிலத்தில் விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தியபடியும், பொங்கல் வைத்தும் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, திட்டத்திற்காக விவசாய விளைநிலங்களை வலுக்கட்டாயமாக நில எடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டும். கெயில் குழாய் திட்டத்தின் போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, கெயில் குழாய்களை சாலையோரத்தில் அமைத்ததைப் போல இந்தத் திட்டத்திற்குமான குழாய்களையும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சாலையோரத்தில் பதித்திட வேண்டும்.

விவசாய வேளாண் நிலங்களைப் பாழ்படுத்தாமல் விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாத்திடும் வகையில் திட்டத்தை மாற்றுப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

விவசாய விளைநிலங்கள் வழியாக ஐடிபில் குழாய்கள் கொண்டு செல்வது நிறுத்தப்படும் வரை தங்களது அஹிம்சை வழியிலான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என்று விவசாயக் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.