ETV Bharat / state

சிறிய அளவிலான செயற்கைக்கோளை உருவாக்கி ஈரோடு மாணவர்கள் சாதனை! - erode latest news

ஈரோடு: தட்ப வெப்பநிலையினை கண்காணித்து அதைக் குறுஞ்செய்தியாக அனுப்பும் வகையில் சிறிய செயற்கைக்கோளை உருவாக்கி ஈரோடு பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

erode
author img

By

Published : Sep 23, 2019, 3:42 PM IST

Updated : Sep 23, 2019, 3:58 PM IST

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகேயுள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஸ்ரீநிதி, நவநீதகிருஷ்ணன், ஆனந்தகிருஷ்ணன், சந்திரகுமார் ஆகியோர் மிகச்சிறிய செயற்கைகோளை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

ரூ.40 ஆயிரம் செலவில் ஒரு ஆண்டு முயற்சியில் இச்சாதனையை அவர்கள் நிகழ்த்தியுள்ளனர். கையடக்க அளவிலிருக்கும் இந்த செயற்கைக்கோள் கடல் மட்டம், வெப்பம், காற்றழுத்தம் உள்ளிட்ட தகவல்களை ஆராய்ந்து கைப்பேசிக்கு குறுந்தகவலாக அனுப்பும் வைகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட அளவில் நடைபெற்ற கண்காட்சிகளில் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்ட இந்த செயற்கைக்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது மாணவர்களின் விருப்பமாக உள்ளது.

உலக அளவில் சிறிய செயற்கைகோள் உருவாக்கி ஈரோடு மாணவர்கள் சாதனை

இதுகுறித்து மாணவர்கள், "நாங்கள் அப்துல்கலாமை முன்மாதிரியாகக் கொண்டு இதனை உருவாக்கியுள்ளதாக தெரிவித்தனர்". இதனிடையே ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவனை நேரில் சந்தித்து தாங்கள் உருவாக்கிய செயற்கைக்கோளை காண்பித்து மாணவர்கள் வாழ்த்து பெற்றனர்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகேயுள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஸ்ரீநிதி, நவநீதகிருஷ்ணன், ஆனந்தகிருஷ்ணன், சந்திரகுமார் ஆகியோர் மிகச்சிறிய செயற்கைகோளை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

ரூ.40 ஆயிரம் செலவில் ஒரு ஆண்டு முயற்சியில் இச்சாதனையை அவர்கள் நிகழ்த்தியுள்ளனர். கையடக்க அளவிலிருக்கும் இந்த செயற்கைக்கோள் கடல் மட்டம், வெப்பம், காற்றழுத்தம் உள்ளிட்ட தகவல்களை ஆராய்ந்து கைப்பேசிக்கு குறுந்தகவலாக அனுப்பும் வைகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட அளவில் நடைபெற்ற கண்காட்சிகளில் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்ட இந்த செயற்கைக்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது மாணவர்களின் விருப்பமாக உள்ளது.

உலக அளவில் சிறிய செயற்கைகோள் உருவாக்கி ஈரோடு மாணவர்கள் சாதனை

இதுகுறித்து மாணவர்கள், "நாங்கள் அப்துல்கலாமை முன்மாதிரியாகக் கொண்டு இதனை உருவாக்கியுள்ளதாக தெரிவித்தனர்". இதனிடையே ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவனை நேரில் சந்தித்து தாங்கள் உருவாக்கிய செயற்கைக்கோளை காண்பித்து மாணவர்கள் வாழ்த்து பெற்றனர்.

Intro:ஈரோடு ஆனந்த்
செப்.23

உலக அளவில் சிறிய செயற்கைகோள் கண்டுபிடித்து ஈரோடு மாணவர்கள் சாதனை!

ஈரோடு: தட்ப வெப்பநிலையினை கண்காணித்து குறுஞ்செய்தி அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்ட உலக அளவில் சிறிய செயற்கைகோள் கண்டுபிடித்து ஈரோடு மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

Body:ஈரோடு மாவட்டம் சென்னிமலை தனியார் பள்ளியில் 12 ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஸ்ரீநிதி, நவநீதகிருஷ்ணன், ஆனந்தகிருஷ்ணன் மற்றும் சந்திரகுமார் ஆகியோர் உலகிலேயே மிகச்சிறிய செயற்கைகோளை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.

40 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு ஆண்டு காலத்தில் இந்த சாதனையினை நிகழ்த்தியுள்ளனர். கையடக்க அளவில் உள்ள இந்த செயற்கைகோள் கடல் மட்டம், வெப்பம், காற்றழுத்தம் போன்றவை குறித்த தகவல்களை செல்போனுக்கு குறுந்தகவலாக அனுப்பும் வைகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட அளவில் நடைபெற்ற கண்காட்சிகளில் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்ட இந்த சிறிய வகை செயற்கைகோளை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது மாணவர்களின் விருப்பமாக உள்ளது.

கிராமபுற மாணவர்களான தாங்கள் அப்துல்கலாமை முன்மாதிரியாக கொண்டு இதனை உருவாக்கியுள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
Conclusion:இதனிடையே ஈரோடு ஆட்சியர் கதிரவனை நேரில் சந்தித்து தங்களது கண்டுபிடிப்பை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
Last Updated : Sep 23, 2019, 3:58 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.