ETV Bharat / state

ஈரோட்டில் 200% நோய்த் தடுப்பு பணிகள் நடைபெறவுள்ளது- மாவட்ட ஆட்சியர்

ஈரோடு: ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் வரும் நாள்களில் 200 விழுக்காடு நோய்த்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கதிரவன் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : May 6, 2020, 1:01 PM IST

erode collector about curfew relaxation
erode collector about curfew relaxation

கரோனா வைரஸ் நிவாரண உதவியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தினர் அளித்த அத்தியாவசிய பொருள்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் கதிரவன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ”ஈரோடு மாவட்டத்தில் கடந்த 22 நாள்களாக நோய் பாதிப்பு அறிகுறிகள் அற்ற நிலை நீடித்துவருகிறது. ஈரோட்டினை நோயற்ற மாவட்டமாக மாற்ற வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

நோய் பாதிப்பு வெகுவாக குறைந்ததற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு முக்கியமானதாக இருந்தது. மாவட்டத்தில் இதுவரை 15க்கும் மேற்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கும் விரைவில் தளர்வுகள் அளிக்கப்படும். தற்போது கூட்டம் அதிகம் சேராத தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

குளிர்சாதன வசதி பொருத்தப்பட்டுள்ள நகைக்கடை, ஜவுளிக்கடை ஆகியவற்றிற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அவற்றிற்கு அனுமதி அளித்தால் இதுவரை மேற்கொண்ட நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் பயனற்றதாய் போய்விடும் .

வெளி மாவட்டம், வெளி மாநிலங்களிலிருந்து ஈரோட்டிற்கு வருகை தந்தவர்கள் 600க்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உரிய பரிசோதனைக்குள்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 200 பேர் வீடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நோய் பாதிப்பில்லாத மாவட்டமாக மாற்றுவதற்காக இன்னும் 200 விழுக்காடு சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

ஆன்லைன் மூலம் உணவு பொருள்கள் ஆர்டர் செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதன் மீது ஆய்வு நடைபெற்றுவருகிறது.

தொழில் நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர்களின் நேரடி ஆய்வுக்குப் பிறகு அனுமதி வழங்கப்படும் என்றும், 50 விழுக்காடு தொழிலாளர்கள் மட்டுமே தொழிற்சாலையில் பணிபுரிய அனுமதிக்கப்பட்டுள்ளது” என்றார்.

இதையும் படிங்க: ஈரோட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீடு திரும்பினர்!

கரோனா வைரஸ் நிவாரண உதவியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தினர் அளித்த அத்தியாவசிய பொருள்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் கதிரவன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ”ஈரோடு மாவட்டத்தில் கடந்த 22 நாள்களாக நோய் பாதிப்பு அறிகுறிகள் அற்ற நிலை நீடித்துவருகிறது. ஈரோட்டினை நோயற்ற மாவட்டமாக மாற்ற வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

நோய் பாதிப்பு வெகுவாக குறைந்ததற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு முக்கியமானதாக இருந்தது. மாவட்டத்தில் இதுவரை 15க்கும் மேற்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கும் விரைவில் தளர்வுகள் அளிக்கப்படும். தற்போது கூட்டம் அதிகம் சேராத தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

குளிர்சாதன வசதி பொருத்தப்பட்டுள்ள நகைக்கடை, ஜவுளிக்கடை ஆகியவற்றிற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அவற்றிற்கு அனுமதி அளித்தால் இதுவரை மேற்கொண்ட நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் பயனற்றதாய் போய்விடும் .

வெளி மாவட்டம், வெளி மாநிலங்களிலிருந்து ஈரோட்டிற்கு வருகை தந்தவர்கள் 600க்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உரிய பரிசோதனைக்குள்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 200 பேர் வீடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நோய் பாதிப்பில்லாத மாவட்டமாக மாற்றுவதற்காக இன்னும் 200 விழுக்காடு சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

ஆன்லைன் மூலம் உணவு பொருள்கள் ஆர்டர் செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதன் மீது ஆய்வு நடைபெற்றுவருகிறது.

தொழில் நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர்களின் நேரடி ஆய்வுக்குப் பிறகு அனுமதி வழங்கப்படும் என்றும், 50 விழுக்காடு தொழிலாளர்கள் மட்டுமே தொழிற்சாலையில் பணிபுரிய அனுமதிக்கப்பட்டுள்ளது” என்றார்.

இதையும் படிங்க: ஈரோட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீடு திரும்பினர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.