ETV Bharat / state

விவசாய தோட்டத்தில் புகுந்த 2 யானைகள் மின்வேலியில் சிக்கி உயிரிழப்பு

author img

By

Published : Feb 29, 2020, 10:19 AM IST

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே விவசாய தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி இரு யானைகள் உயிரிழந்தன.

மின்வேலியில் சிக்கி உயிரிழந்த யானைகள்
மின்வேலியில் சிக்கி உயிரிழந்த யானைகள்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. வனத்துக்குள் இருந்து வரும் யானைகள் விவசாய நிலங்களை அடிக்கடி சேதப்படுத்துவதால் அங்குள்ள விவசாயிகள் பாதுகாப்புக்காக மின்வேலி அமைத்து பாதுகாத்துவருகின்றனர்.

இந்நிலையில் கரளவாடியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் தோட்டத்தில் கரும்பு பயிரைச் சாப்பிடுவதற்காக வந்த ஆண், பெண் யானைகள் அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்தன.

மின்வேலியில் சிக்கி உயிரிழந்த யானைகள்

இது குறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் யானைகளின் உடலை ஆய்வு செய்தனர். பின்னர், சட்டவிரோதமாக மின்சாரம் திருடி, மின் வேலி அமைத்த கருப்பசாமியைக் கைதுசெய்தனர்.

இதையும் படிங்க: மின்கம்பங்கள் வழியாக தரையில் பாய்ந்த மின்சாரம் - வனவிலங்குகள் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. வனத்துக்குள் இருந்து வரும் யானைகள் விவசாய நிலங்களை அடிக்கடி சேதப்படுத்துவதால் அங்குள்ள விவசாயிகள் பாதுகாப்புக்காக மின்வேலி அமைத்து பாதுகாத்துவருகின்றனர்.

இந்நிலையில் கரளவாடியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் தோட்டத்தில் கரும்பு பயிரைச் சாப்பிடுவதற்காக வந்த ஆண், பெண் யானைகள் அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்தன.

மின்வேலியில் சிக்கி உயிரிழந்த யானைகள்

இது குறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் யானைகளின் உடலை ஆய்வு செய்தனர். பின்னர், சட்டவிரோதமாக மின்சாரம் திருடி, மின் வேலி அமைத்த கருப்பசாமியைக் கைதுசெய்தனர்.

இதையும் படிங்க: மின்கம்பங்கள் வழியாக தரையில் பாய்ந்த மின்சாரம் - வனவிலங்குகள் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.