ETV Bharat / state

கோபி அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி

author img

By

Published : Oct 19, 2019, 6:34 AM IST

ஈரோடு: கோபி அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி மாணவர்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள லக்கம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட ஈஸ்வரமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் செந்தில். இவர் அதேப் பகுதியில் புதியதாக வீடு கட்டிவருகிறார். இதற்கு மின் இணைப்பு அமைக்கும் பணியை சின்னமொடச்சூர் பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரிசன் பாபுவிடம் கொடுத்துள்ளார். அவரும் மின் இணைப்பு பணியை மேற்கொண்டு வந்தார்.

விபத்துக்கு காரணமான மின்பெட்டி
விபத்துக்கு காரணமான மின்இணைப்புபெட்டி

இந்நிலையில் நேற்று பணி உதவிக்காக கோபி நாயக்கன்காடு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவரான பாஸ்கர் என்பவரை சேர்த்துக் கொண்டு வேலைப்பார்த்துள்ளார். பணியின் போது புதியதாக கொடுக்கப்பட்டுள்ள மின் இணைப்பு பெட்டியில் பியூஸ் போட பாஸ்கர் சென்ற போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

மின்விபத்து நடந்த வீடு

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் புதிய வீட்டின் கட்டப்பணி நடைபெறும் இடத்தின் மேல்பகுதியில் உயரழுத்த மின் வயர் செல்வதால் அதற்கு கீழ் மின் இணைப்பு பெட்டி பொருத்தப்பட்டிருந்தாலும், தற்போது மழை பெய்து நிலம் ஈரத்துடன் இருந்தாலும் மின் கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கி பாஸ்கர் உயிரிழந்திருக்கலாம் என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சார்ஜ் போட்டபடி செல்ஃபோனில் பேசியவருக்கு நேர்ந்த கதி! - நாமக்கல்லில் சோகம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள லக்கம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட ஈஸ்வரமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் செந்தில். இவர் அதேப் பகுதியில் புதியதாக வீடு கட்டிவருகிறார். இதற்கு மின் இணைப்பு அமைக்கும் பணியை சின்னமொடச்சூர் பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரிசன் பாபுவிடம் கொடுத்துள்ளார். அவரும் மின் இணைப்பு பணியை மேற்கொண்டு வந்தார்.

விபத்துக்கு காரணமான மின்பெட்டி
விபத்துக்கு காரணமான மின்இணைப்புபெட்டி

இந்நிலையில் நேற்று பணி உதவிக்காக கோபி நாயக்கன்காடு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவரான பாஸ்கர் என்பவரை சேர்த்துக் கொண்டு வேலைப்பார்த்துள்ளார். பணியின் போது புதியதாக கொடுக்கப்பட்டுள்ள மின் இணைப்பு பெட்டியில் பியூஸ் போட பாஸ்கர் சென்ற போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

மின்விபத்து நடந்த வீடு

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் புதிய வீட்டின் கட்டப்பணி நடைபெறும் இடத்தின் மேல்பகுதியில் உயரழுத்த மின் வயர் செல்வதால் அதற்கு கீழ் மின் இணைப்பு பெட்டி பொருத்தப்பட்டிருந்தாலும், தற்போது மழை பெய்து நிலம் ஈரத்துடன் இருந்தாலும் மின் கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கி பாஸ்கர் உயிரிழந்திருக்கலாம் என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சார்ஜ் போட்டபடி செல்ஃபோனில் பேசியவருக்கு நேர்ந்த கதி! - நாமக்கல்லில் சோகம்

Intro:கோபி அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலிBody:tn_erd_08_sathy_electrocution_death_vis_tn10009

புகைப்படம்: மின்சாரம் தாக்கி உயிரிழநத பாஸ்கரன்

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள லக்கம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட ஈஸ்வரமூர்த்தி நகரில் கட்டப்படும் புதிய வீட்டிற்கு மின் இணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராது விதமாக மின்சாரம் தாக்கியதில் பாஸ்கர் என்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கோபி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள லக்கம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட ஈஸ்வரமூர்த்தி நகரில் மின் நகரைச்சேர்ந்த செந்தில் என்பவர் புதிதாக வீட்டு கட்டிவருகிறார். இந்த வீட்டிற்கு மின் இணைப்பு அமைக்கும் பணியை சின்னமொடச்சூர் பகுதியை சேர்ந்த பாபு என்ற எலக்டிரிசனிடம் ஒப்படைத்திருந்துள்ளார். பாபு தனது உதவிக்காக கோபி நாயக்கன்காடு பகுதியைச்சேர்ந்த தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இஇஇ பயிலும் மாணவர் பாஸ்கர் என்ற மாணவரை சேர்ந்துக்கொண்டு மின் இணைப்பு பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். இந்நிலையில் புதிதான பெறப்பட்ட மின் இணைப்பு பெட்டியில் பியூஸ் போடச்சென்ற மாணவர் பாஸ்கர் மீது எதிர்பாராது விதமாக மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பாஸ்கர் உயிரிழந்துள்ளார். இது குறித்து கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தைக்கைப்பற்றி கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதனை தொடர்ந்து காவல்துறையினர் மின் சாரம் தாக்கியது குறித்து விசாரணை மேற்கொண்டதில் புதிய வீட்டின் கட்டிப்பணி நடைபெறும் இடத்தின் மேல் பகுதியில் உயரழுத்த மின் பாதை செல்வதால் அதற்கு கீழ் மின் இணைப்பு பெட்டி பொருத்தப்பட்டிருந்தாலும் தற்பொது மழை பெய்து நிலம் ஈரத்துடன் இருந்தாலும் மின் கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கி பாஸ்கர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்தனர். மேலும் உயரழுத்த மின் பாதை செல்லும் வழித்தடத்தின் கீழ் புதிய வீடு கட்டுவதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது குறித்து மின் சாரவாரியம் லக்கம்பட்டி பேரூராட்சி அலுவலகம் மற்றும் வீட்டு மனையாக அங்கீகரித்த வட்டார வளர்ச்சித்துறை ஆகியவை தான் பதிலளிக்கவேண்டும் என்றும் உயிரிழந்த பாஸ்கரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். தீவிர விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீதும் வீட்டின் உரிமையாளரின் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என கோரிக்கைவைத்துள்ளனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.