ETV Bharat / state

சத்தியமங்கலத்தில் பயணிகளை மிரட்டிய சிறுத்தை! - cheetah at road near thalavadi road

ஈரோடு: தாளவாடி அருகே சாலையோரம் பயணிகளை மிரட்டும் தொணியிலிருந்த சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டது.

chee
சிறுத்தை
author img

By

Published : Dec 17, 2019, 5:34 AM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி வனச்சரகத்தில் ஏராளமான சிறுத்தைகள் வசித்து வருகின்றன. சமீபத்தில் உணவுகளைத் தேடி சிறுத்தைகள் வனத்திலிருந்து வெளியேறி தோட்டத்துக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதனால், வனத்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

பயணிகளை மிரட்டும் தொணியில் நின்ற சிறுத்தை

இந்நிலையில், தாளவாடியிலிருந்து தலமலை சென்ற கார் ஒன்று சிக்ஹள்ளி வனப்பகுதி வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, சாலையோரம் நின்ற சிறுத்தை, வாகனத்தைக் கண்டு பயப்படாமல் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தது. இதை பயணிகள் தங்களது செல்போனில் படம் பிடித்தனர். சிறுத்தை நடமாட்டம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிக்ஹள்ளி பகுதியில் சிறுத்தைகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக்கிற்காக தயார் செய்யப்பட்ட மைதானம் திறப்பு!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி வனச்சரகத்தில் ஏராளமான சிறுத்தைகள் வசித்து வருகின்றன. சமீபத்தில் உணவுகளைத் தேடி சிறுத்தைகள் வனத்திலிருந்து வெளியேறி தோட்டத்துக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதனால், வனத்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

பயணிகளை மிரட்டும் தொணியில் நின்ற சிறுத்தை

இந்நிலையில், தாளவாடியிலிருந்து தலமலை சென்ற கார் ஒன்று சிக்ஹள்ளி வனப்பகுதி வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, சாலையோரம் நின்ற சிறுத்தை, வாகனத்தைக் கண்டு பயப்படாமல் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தது. இதை பயணிகள் தங்களது செல்போனில் படம் பிடித்தனர். சிறுத்தை நடமாட்டம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிக்ஹள்ளி பகுதியில் சிறுத்தைகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக்கிற்காக தயார் செய்யப்பட்ட மைதானம் திறப்பு!

Intro:Body:tn_erd_04_sathy_leopard_vis_tn10009

தாளவாடி அருகே சாலையோரம் மிரட்டிய சிறுத்தை

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி வனச்சரகத்தில் ஏராளமான சிறுத்தைகள் உள்ளன. அண்மையில் வனத்தில் வெளியேறிய சிறுத்தை தொட்டகாஜனூர், பாரதிபுரம் பகுதியில் உள்ள விவசாயத் தோட்டத்துக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடியது.வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் தாளவாடியில் இருந்து தலமலை சென்ற கார் ஒன்று சிக்ஹள்ளி வனப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையோரம் நின்று கொண்டிருந்த சிறுத்தை வாகனத்தை கண்டு பயப்படாமல் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தது.அப்போது காரில் வந்த பயணிகள் செல்போனில் சிறுத்தையை படம் பிடித்தனர். அவர்களை பார்த்தும் சிறுத்தை காட்டுக்குள் ஓடிவிட்டது. சிறுத்தை நடமாட்டம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளிடம் பாதுகாப்பாக செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தினர். சிக்ஹள்ளி பகுதியில் சிறுத்தைகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.