ETV Bharat / state

நெல் கொள்முதல் நிலையங்களில் கையூட்டு: வேதனை கோரிக்கைவிடுத்த விவசாயிகள்!

ஈரோடு: நெல் கொள்முதல் நிலையங்களில் கையூட்டு பெறப்படுவதை நடைபெறாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வேதனையுடன் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

author img

By

Published : Jan 10, 2020, 12:20 PM IST

அறுவடைக்காக தயார் நிலையிலுள்ள நெற்பயிர்கள்
அறுவடைக்காக தயார் நிலையிலுள்ள நெற்பயிர்கள்

தமிழர்களின் பாரம்பரிய அறுவடைக்கான மாதமாக தை விளங்குகிறது. தை மாதம் தொடங்கவுள்ள நிலையில் இந்த ஆண்டிற்கான முதல்போக நெல் அறுவடையை ஈரோடு மாவட்ட விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.

இது குறித்து பேசிய கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, "நடப்பாண்டு, முதல்போகத்திற்கு மாவட்டம் முழுவதும் வேளாண் துறையின் சார்பில் 36 லட்சத்து 900 ஹெக்டோர் விவசாய நிலத்தில் நெல் பயிரிடப்படும் என்று திட்டமிட்டிருந்த நிலையில் 28 லட்சத்து 215 ஆயிரம் ஹெக்டேர் அளவுக்கு நெல் நடவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

அறுவடைக்காக தயார் நிலையிலுள்ள நெற்பயிர்கள்

நெல் சாகுபடிக்கான பரப்பளவு குறைந்தாலும் கடந்த ஆண்டைவிட 80 ஆயிரம் கிலோ நெல் அதிகம் உற்பத்தி செய்யப்படும் என்று வேளாண் துறை அலுவலர்கள் தெரிவித்திருந்தார். மேலும், வேளாண் துறை அலுவலர்களின் அறிவுரையின்படி அதிக முட்டுக்கூலி செலவுகள் இல்லாத நெல் ரகங்களான கே-50, கே-51 உள்ளிட்ட பயிர் ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.

இந்தாண்டு பயிரிடப்பட்டுள்ள பயிர் ரகங்கள் நோய் தாக்குதல் இன்றியும், பூச்சி மருந்து, பூஞ்சாலை மருந்து உள்ளிட்ட ரசாயன மருந்துகள் அதிகம் பயன்படுத்தாமல் நெல் பயிர் ரகங்கள் தரமானதாக விளைந்துள்ளன.

செய்தியாளர்களிடம் பேசிய நல்லசாமி

அரசு கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையத்தில் 40-கிலோ எடையுள்ள நெல் மூட்டை ஒன்றுக்கு கொள்முதல் செய்ய 40 ரூபாயை அலுவலர்கள் லஞ்சமாக வாங்குவதால் லஞ்சம் இல்லாத கொள்முதல் நிலையங்களை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

மாவட்ட முழுவதும் உள்ள பாசன பகுதியில் பயிரிடப்பட்டுள்ள அனைத்து பயிர் ரகங்களும் நல்ல முறையில் விளைந்து அறுவடை செய்யப்பட்டுவருவதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: இயற்கை அறுவடையில் அசத்தும் விவசாயி!

தமிழர்களின் பாரம்பரிய அறுவடைக்கான மாதமாக தை விளங்குகிறது. தை மாதம் தொடங்கவுள்ள நிலையில் இந்த ஆண்டிற்கான முதல்போக நெல் அறுவடையை ஈரோடு மாவட்ட விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.

இது குறித்து பேசிய கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, "நடப்பாண்டு, முதல்போகத்திற்கு மாவட்டம் முழுவதும் வேளாண் துறையின் சார்பில் 36 லட்சத்து 900 ஹெக்டோர் விவசாய நிலத்தில் நெல் பயிரிடப்படும் என்று திட்டமிட்டிருந்த நிலையில் 28 லட்சத்து 215 ஆயிரம் ஹெக்டேர் அளவுக்கு நெல் நடவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

அறுவடைக்காக தயார் நிலையிலுள்ள நெற்பயிர்கள்

நெல் சாகுபடிக்கான பரப்பளவு குறைந்தாலும் கடந்த ஆண்டைவிட 80 ஆயிரம் கிலோ நெல் அதிகம் உற்பத்தி செய்யப்படும் என்று வேளாண் துறை அலுவலர்கள் தெரிவித்திருந்தார். மேலும், வேளாண் துறை அலுவலர்களின் அறிவுரையின்படி அதிக முட்டுக்கூலி செலவுகள் இல்லாத நெல் ரகங்களான கே-50, கே-51 உள்ளிட்ட பயிர் ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.

இந்தாண்டு பயிரிடப்பட்டுள்ள பயிர் ரகங்கள் நோய் தாக்குதல் இன்றியும், பூச்சி மருந்து, பூஞ்சாலை மருந்து உள்ளிட்ட ரசாயன மருந்துகள் அதிகம் பயன்படுத்தாமல் நெல் பயிர் ரகங்கள் தரமானதாக விளைந்துள்ளன.

செய்தியாளர்களிடம் பேசிய நல்லசாமி

அரசு கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையத்தில் 40-கிலோ எடையுள்ள நெல் மூட்டை ஒன்றுக்கு கொள்முதல் செய்ய 40 ரூபாயை அலுவலர்கள் லஞ்சமாக வாங்குவதால் லஞ்சம் இல்லாத கொள்முதல் நிலையங்களை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

மாவட்ட முழுவதும் உள்ள பாசன பகுதியில் பயிரிடப்பட்டுள்ள அனைத்து பயிர் ரகங்களும் நல்ல முறையில் விளைந்து அறுவடை செய்யப்பட்டுவருவதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: இயற்கை அறுவடையில் அசத்தும் விவசாயி!

Intro:ஈரோடு ஆனந்த்
ஜன10

நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் - விவசாயிகள் வேதனை!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பாசன பகுதியில் பயிரிடப்பட்டு இருந்த நெல் ரகங்களை அறுவடை செய்யும் பணிகள் தொடங்கிய நிலையில் நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் வாங்கப்படுவதாவும் லஞ்சம் இல்லாமல் நெல் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது பவானி சாகர் அணை. இந்த அணையில் இருந்து ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் முதல் கீழ்பவானி பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் மூலம் சுமார் 2 லட்சத்து 8 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலமும், அணையில் இருந்து ஆண்டுக்கு இரண்டு முறை திறக்கப்படும் தண்ணீரின் மூலம் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன பகுதியில் 26-ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும், ஆண்டு தோறும் ஜூலை ஏப்பரல் மாதம் வரையில் காளிங்கராயன் பாசன பகுதியில் திறக்கபடும் தண்ணீரை கொண்டு சுமார் 17- ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன பொற்று வருகின்றது.

இந்த பாசன பகுதியில் விவசாயிகள் நெல், கரும்பு, வாலை, மஞ்சள், தென்னை உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.

தமிழர்களின் பாரம்பரியமாக தைமாதம் அறுவடைக்கான மாதமாக உள்ள நிலையில் இந்த ஆண்டுக்கான முதல் போக நெல் அறுவடையை ஈரோடு மாவட்ட விவசாயிகள் தொடங்கியுள்ளனர். நடப்பு ஆண்டு முதல் போகத்திற்கு மாவட்டம் முழுவதும் வேளாண் துறையின் சார்பில் 36-லட்சத்து 900 ஆயிரம் ஹெக்டோர் விவசாய நிலத்தில் நெல் பயிரிடப்படும் என்று திட்டமிடப்பட்டு இருந்த நிலையில் 28- லட்சத்து 215 ஆயிரம் ஹெக்டேர் அளவுக்கு நெல் நடவு சாகுபடி செய்யபட்டுள்ளது.

நெல் சாகுபடிக்கான பரப்பளவு குறைந்தாலும் கடந்த ஆண்டை விட 80-ஆயிரம் கிலோ நெல் அதிகம் உற்பத்தி செய்யப்படும் என்றும் வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தள்ளனர். மேலும் வேளாண்துறை அதிகாரிகளின் அறிவுறையின் படி அதிக முட்டுக்கூலி செலவுகள் இல்லாத நெல் ரகங்களான கே-50- கே. 51 உள்ளிட்ட பயிர் ரகங்களை சாகுபடி செய்துள்ளதாகவும் இந்த ஆண்டு பயிரிடப்பட்டுள்ள பயிர் ரகங்களுக்கு நோய் தாக்குதல் இன்றியும், பூச்சி மருந்து, பூஞ்சாலை மருந்து உள்ளிட்ட ரசாயன மருந்துகள் அதிகம் பயன்படுத்தாமல் நெல் பயிர் ரகங்கள் தரமானதாக விளைந்தள்ளதாகவும் கூறுகின்றனர்.

இதேபோல் அரசு பல பண்ணைகளை ஏற்று நடத்தி வருவதாகவும்.இதில் அரசு நேரடி சாகுபடி செய்ய அதிகரிகளுக்கு உரிய ஊதியம் வழங்கி பண்ணையில் சாகுபடி செய்ய வேண்டும். ஒரு குவிண்டால் நெல் சாகுபடி செய்ய எண்ண செலவு ஏற்படுகின்றதோ அதனை துள்ளியமாக கணக்கிட்டு அதில் சரிபாதியை லாபமாக கொண்டு நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும்.இந்த நிர்ணயத்தை கொள்முதல் விலையாக அரசு அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் நெல் அறுவடையை பாரம்பரிய முறையில் ஆட்களை கொண்டு கையில் அறுவடை செய்வதை மாற்றி தற்போது இயந்திரங்களை கொண்டு நெல் அறுவடை செய்து வருவதாகவும் இதிலும் விவசாயிகள் சொந்தமாக நெல் அறுவடை இயந்திரங்களை வாங்கி அறுவடை செய்ய முடியாமல் உள்ளதாகவும் அரசு விவசாயிகளுக்கு நெல் அறுவடை இயந்திரங்களை வழங்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

Body:அதேபோல் அரசு கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்றும் நெல் கொள்முதல் நிலையத்தில் 40-கிலோ எடையுள்ள நெல் மூட்டை ஒன்றுக்கு கொள்முதல் செய்ய 40-ரூபாயை அதிகாரிகள் லஞ்சமாக வாங்குவதாகவும் லஞ்சம் இல்லாத கொள்முதல் நிலையத்தினை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Conclusion:மாவட்ட முழுவதும் உள்ள பாசன பகுதியில் பயிரிடப்பட்டுள்ள அனைத்து பயிர் ரகங்களும் நல்ல முறையில் விளைந்து அறுவடை செய்யப்பட்டு வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பேட்டி : நல்லசாமி - கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் மற்றும் கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கம்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.