ETV Bharat / state

ஒரேநாளில் 10 அடியாக உயர்ந்த பவானிசாகர் அணையின் நீர்மட்டம்!

author img

By

Published : Aug 9, 2019, 2:31 PM IST

Updated : Aug 9, 2019, 3:38 PM IST

ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர்வரத்து தற்போது ஒரு லட்சம் கனஅடியை தாண்டியுள்ளது. மேலும் அணையின் நீர்மட்டமானது 80 அடியாக உள்ளது.

பவானிசாகர் அணை

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள இரண்டு லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த ஜூன் மாதம் பெய்ய வேண்டிய பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் அணையில் நீர் இருப்பு குறைவாகவே இருந்தது.

இந்த நிலையில், கடந்த 5ஆம் தேதி முதல் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி, வட கேரளாவில் பலத்த மழை பெய்துவருகிறது. தொடர்மழை காரணமாக பவானி ஆறு, மாயாற்றில் வௌ்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

பவானிசாகர் அணை

இதையடுத்து, அணையின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து, இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்தானது ஒரு லட்சத்து ஆயிரத்து 38 கனஅடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 80.24 அடியாகவும் நீர் இருப்பு 15.8 டிஎம்சியாகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக பவானி ஆறு, கீழ்பவானி வாய்க்காலில் 205 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை அணையின் நீர்மட்டம் 70 அடியாக இருந்த நிலையில் இன்று 80 அடியை எட்டியுள்ளது. ஒரேநாளில் அணையின் நீர்மட்டம் 10 அடி உயர்ந்துள்ளதோடு ஐந்து டிஎம்சி தண்ணீர் அணைக்கு வந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள இரண்டு லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த ஜூன் மாதம் பெய்ய வேண்டிய பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் அணையில் நீர் இருப்பு குறைவாகவே இருந்தது.

இந்த நிலையில், கடந்த 5ஆம் தேதி முதல் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி, வட கேரளாவில் பலத்த மழை பெய்துவருகிறது. தொடர்மழை காரணமாக பவானி ஆறு, மாயாற்றில் வௌ்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

பவானிசாகர் அணை

இதையடுத்து, அணையின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து, இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்தானது ஒரு லட்சத்து ஆயிரத்து 38 கனஅடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 80.24 அடியாகவும் நீர் இருப்பு 15.8 டிஎம்சியாகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக பவானி ஆறு, கீழ்பவானி வாய்க்காலில் 205 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை அணையின் நீர்மட்டம் 70 அடியாக இருந்த நிலையில் இன்று 80 அடியை எட்டியுள்ளது. ஒரேநாளில் அணையின் நீர்மட்டம் 10 அடி உயர்ந்துள்ளதோடு ஐந்து டிஎம்சி தண்ணீர் அணைக்கு வந்துள்ளது.

Intro:Body:tn_erd_01_sathy_dam_1 lakh_inflow_vis_tn10009

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1 லட்சம் கனஅடியை தாண்டியது

அணையின் நீர்மட்டம் 80 அடியாக உள்ளது
80 அடியை எட்டியது பவானிசாகர் அணை நீர்மட்டம். நீர்வரத்து அதிகரிப்பால் ஒரேநாளில் அணை நீர்மட்டம் 10 அடி உயர்வு

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக அணையின் நீர்மட்டம் 80 அடியை எட்டியது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 இலட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த ஜூன் மாதம் பெய்ய வேண்டிய பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் அணையில் நீர் இருப்பு குறைவாகவே இருந்தது. இந்நிலையில் கடந்த 5 ம் தேதி முதல் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் வடகேரளாவில் பலத்த மழை பெய்யத்தொடங்கி தொடர்மழை பெய்ததால் அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் வௌ;ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன்காரணமாக நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. இந்நிலையில் இன்று காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 1 01038 கனஅடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 80.24 அடியாகவும், நீர் இருப்பு 15.8 டிஎம்சி யாகவும், உள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக பவானி ஆறு மற்றும் கீழ்பவானி வாய்க்காலில் 205 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று காலை அணையின் நீர்மட்டம் 70 அடியாக இருந்த நிலையில் இன்று 80 அடியை எட்டியுள்ளது. ஒரேநாளில் அணையின் நீர்மட்டம் 10 அடி உயர்ந்துள்ளதோடு 5 டிஎம்சி தண்ணீர் அணைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Conclusion:
Last Updated : Aug 9, 2019, 3:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.