ETV Bharat / state

’ஆந்திராவில் மதுக்கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பை நான் வரவேற்கிறேன்’ - தமிழ்நாடு செய்திகள்

ஈரோடு: ஆந்திராவில் படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் என அறிவித்த அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் அறிவிப்பை தான் வரவேற்பதாக அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Anbumani Ramadoss at Sathyamangalam college
author img

By

Published : Oct 5, 2019, 2:35 AM IST

சத்தியமங்கலம் காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பசுமைத்தாயகமும், கல்லூரி நிர்வாகமும் இணைந்து காலநிலை அவசரப் பிரகடனம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. கல்லூரியின் நிறுவனத் தலைவர் பெருமாள்சாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாநிலங்களவை எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது அவர் புவி வெப்பமயமாதல், நீர்நிலைகளை பாதுகாத்தல், மழைநீர்ச் சேகரிப்பின் அவசியம் ஆகியவை குறித்து மாணவ - மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருகைதரும் அன்புமணி ராமதாஸ்

பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அன்புமணி ராமதாஸ், "மதுக்கடைகளை மூடவேண்டும் என்பது எங்கள் கொள்கை. ஆந்திராவில் தனியார் நடத்திக் கொண்டிருந்த மதுக்கடைகளை அரசே எடுத்து நடத்துவதோடு, அதில் 20 விழுக்காடு கடைகளை மூடவும் அம்மாநிலத்தின் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். மேலும் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படுவதோடு, படிப்படியாக மதுக்கடைகள் மூடப்பட்டு பூரண மதுவிலக்கு கொண்டுவரப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார். இதை நான் வரவேற்கிறேன். உச்ச நீதிமன்றம் சென்று தமிழ்நாட்டில் 3, 321 மதுக்கடைகளையும், நாடு முழுவதும் ஒன்பாதாயிரம் மதுக்கடைகளையும் மூடியுள்ளோம். ஆனால் சிறு பிள்ளைகளும் மது அருந்தும் சூழல் தற்போது நம் ஊரில் உருவாகியுள்ளது” என்று பேசினார்.

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் குறித்து கேள்வியெழுப்பியதற்கு அவர், ”நீட் தேர்வு ஆள்மாறாட்ட முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். ஆள்மாறாட்டம் செய்த நபர்களைக் கண்டறிந்து விசாரணை மேற்கொண்டு கடுமையான தண்டனையும் வழங்க வேண்டும்” என்று பதிலளித்தார்.

இதையும் படிங்க:

'புழுகு மூட்டை ஸ்டாலினை மக்கள் நம்பபோவதில்லை' - அன்புமணி ராமதாஸ் சாடல்

சத்தியமங்கலம் காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பசுமைத்தாயகமும், கல்லூரி நிர்வாகமும் இணைந்து காலநிலை அவசரப் பிரகடனம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. கல்லூரியின் நிறுவனத் தலைவர் பெருமாள்சாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாநிலங்களவை எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது அவர் புவி வெப்பமயமாதல், நீர்நிலைகளை பாதுகாத்தல், மழைநீர்ச் சேகரிப்பின் அவசியம் ஆகியவை குறித்து மாணவ - மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருகைதரும் அன்புமணி ராமதாஸ்

பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அன்புமணி ராமதாஸ், "மதுக்கடைகளை மூடவேண்டும் என்பது எங்கள் கொள்கை. ஆந்திராவில் தனியார் நடத்திக் கொண்டிருந்த மதுக்கடைகளை அரசே எடுத்து நடத்துவதோடு, அதில் 20 விழுக்காடு கடைகளை மூடவும் அம்மாநிலத்தின் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். மேலும் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படுவதோடு, படிப்படியாக மதுக்கடைகள் மூடப்பட்டு பூரண மதுவிலக்கு கொண்டுவரப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார். இதை நான் வரவேற்கிறேன். உச்ச நீதிமன்றம் சென்று தமிழ்நாட்டில் 3, 321 மதுக்கடைகளையும், நாடு முழுவதும் ஒன்பாதாயிரம் மதுக்கடைகளையும் மூடியுள்ளோம். ஆனால் சிறு பிள்ளைகளும் மது அருந்தும் சூழல் தற்போது நம் ஊரில் உருவாகியுள்ளது” என்று பேசினார்.

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் குறித்து கேள்வியெழுப்பியதற்கு அவர், ”நீட் தேர்வு ஆள்மாறாட்ட முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். ஆள்மாறாட்டம் செய்த நபர்களைக் கண்டறிந்து விசாரணை மேற்கொண்டு கடுமையான தண்டனையும் வழங்க வேண்டும்” என்று பதிலளித்தார்.

இதையும் படிங்க:

'புழுகு மூட்டை ஸ்டாலினை மக்கள் நம்பபோவதில்லை' - அன்புமணி ராமதாஸ் சாடல்

Intro:tn_erd_04_sathy_anbumani_vis_tn10009
tn_erd_04_sathy_anbumani_byte_tn10009Body:நீட்தேர்வு ஆள்மாறாட்ட முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். ஆந்திராவில் படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் என அறிவித்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. சத்தியமங்கலத்தில் அன்புமணி ராமதாஸ் பேட்டி

சத்தியமங்கலம், அக்.5. சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லூரியில் பசுமைத்தாயகம் மற்றும் கல்லூரி நிர்வாகம் இணைந்து காலநிலை அவசர பிரகடனம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி நிறுவனத்தலைவர் பெருமாள்சாமி தலைமை தாங்கினார். இணைச்செயலர் மலர்செல்வி முன்னிலை வகித்தார். முதல்வர் செந்தில்குமார் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இன்றைய சூழ்நிலையில் புவி வெப்பமயமாதல், நீர்நிலைகளை பாதுகாத்தல், மழை நீர் சேகரிப்பதன் அவசியம் குறித்து மாணவ மாணவிகளிடையே பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காமதேனு கல்லூரி சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் செங்கோட்டையன், கண்ணன் மற்றும் மாணவ மாணவியர் செய்திருந்தனர். இதைத்தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது. மதுக்கடைகளை மூடவேண்டும் என்பது எங்கள் கொள்கை. ஆந்திராவில் தனியார் நடத்திக்கொண்டிருந்த மதுக்கடைகளை அரசே எடுத்து நடத்துவதோடு அதில் 20 சதவீத கடைகளை மூட ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். மேலும் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படுவதோடு படிப்படியாக மதுக்கடைகள் மூடப்பட்டு பூரண மதுவிலக்கு கொண்டுவரப்படும் என ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளதை நான் வரவேற்கிறேன். சிறுவயது பிள்ளைகள் மது அருந்துகின்ற சூழல் தற்போது உள்ளது. உச்சநீதிமன்றம் சென்று தமிழகத்தில் 3321 மதுக்கடைகளையும் நாடு முழுவதும் 9 ஆயிரம் மதுக்கடைகளையும் மூடியுள்ளோம். நீட் தேர்வு ஆள்மாறாட்ட முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். ஆள்மாறாட்டம் செய்த நபர்களை கண்டறிந்து விசாரணை மேற்கொள்வதோடு இதில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என்றார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.