ETV Bharat / state

அதிமுக தலைமை முடிவு செய்தால் பெருந்துறையில் போட்டியிடுவேன் - எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் - erode district news

ஈரோடு: அதிமுக தலைமை முடிவு செய்தால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பெருந்துறை தொகுதியில் தாம் போட்டியிடுவேன் என்று முன்னாள் அமைச்சரும் பெருந்துறை சட்டப்பேரவைத் உறுப்பினருமான தோப்பு வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

அதிமுக தலைமை முடிவு செய்தால் பெருந்துறையில் போட்டியிடுவேன் என பேட்டி
அதிமுக தலைமை முடிவு செய்தால் பெருந்துறையில் போட்டியிடுவேன் என பேட்டி
author img

By

Published : Oct 31, 2020, 2:57 PM IST

ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திருவாச்சி ஊராட்சியில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் தனியார் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை முன்னாள் அமைச்சரும் பெருந்துறை சட்டப்பேரவைத் உறுப்பினருமான தோப்பு வெங்கடாசலம், மாவட்ட ஆட்சியர் கதிரவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சட்டப்பேரவைத் உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம், "மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் பெருந்துறை யூனியனுக்கு 12 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வீடுகளுக்கு குடிநீர் இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமை முடிவு செய்தால் பெருந்துறை தொகுதியில் மீண்டும் போட்டியிடுவேன்.

அதிமுக தலைமை முடிவு செய்தால் பெருந்துறையில் போட்டியிடுவேன் என பேட்டி

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளையும் அதிமுக வெல்லும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: அதிமுக கூட்டணியில் பாமக இருக்கிறது: அமைச்சர் ஜெயக்குமார்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திருவாச்சி ஊராட்சியில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் தனியார் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை முன்னாள் அமைச்சரும் பெருந்துறை சட்டப்பேரவைத் உறுப்பினருமான தோப்பு வெங்கடாசலம், மாவட்ட ஆட்சியர் கதிரவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சட்டப்பேரவைத் உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம், "மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் பெருந்துறை யூனியனுக்கு 12 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வீடுகளுக்கு குடிநீர் இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமை முடிவு செய்தால் பெருந்துறை தொகுதியில் மீண்டும் போட்டியிடுவேன்.

அதிமுக தலைமை முடிவு செய்தால் பெருந்துறையில் போட்டியிடுவேன் என பேட்டி

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளையும் அதிமுக வெல்லும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: அதிமுக கூட்டணியில் பாமக இருக்கிறது: அமைச்சர் ஜெயக்குமார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.