ETV Bharat / state

ஊருக்குள் புகுந்த சிறுத்தை -  மக்கள் அச்சம்

author img

By

Published : Jan 23, 2020, 7:15 PM IST

ஈரோடு: தாளவாடி அருகே சிறுத்தை ஊருக்குள் புகுந்து மாட்டை கடித்து கொன்றதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஊருக்குள் புகுந்த சிறுத்தை
ஊருக்குள் புகுந்த சிறுத்தை

ஈரோடு மாவட்டம் ஆசனூர் வனக்கோட்டம் தாளவாடி வனச்சரகத்தில் ஏராளமான புலிகள், சிறுத்தைகள் உள்ளன. வனத்திலிருந்து வெளியேறும் அவைகள் அவ்வப்போது கிராமத்துக்குள் புகுந்து ஆடு மாடுகளை வேட்டையாடுகின்றன.

இந்த சூழலில், தாளவாடி அடுத்த நெய்தாளபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி வீரபத்ரா (39). இவர் நான்கு மாடுகள், இரண்டு எருமைகள் வளர்த்துவருகிறார். இவரது வீடும், தோட்டமும் ஊரை ஒட்டியுள்ளது. இந்நிலையில் அவரது மாடு, எருமைகளை வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகையில் கட்டி வைத்துவிட்டு நேற்றிரவு தூங்க சென்றார்.

இன்று காலை எழுந்த அவர் கொட்டகைக்கு சென்று பார்த்தபோது மாடு ஒன்று விலங்கு தாக்கி உயிரிழந்திருந்தது. இதுபற்றி அவர் தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் அளித்தார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மாட்டையும், அங்கு பதிவாகி இருந்த விலங்கின் கால் தடங்களையும் ஆய்வு செய்தனர்.

ஊருக்குள் புகுந்த சிறுத்தை

பின்னர் அது சிறுத்தையின் கால்தடம் என்பது வனத்துறையினருக்கு தெரியவந்தது. தாளவாடி, ஜீர்கள்ளி, வனச்சரகத்தில் மட்டும் கடந்த சில மாதங்களாக சிறுத்தையின் நடமாட்டத்தால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: வீட்டின் படுக்கை அறையில் ஹாயாக படுத்திருந்த சிறுத்தை!

ஈரோடு மாவட்டம் ஆசனூர் வனக்கோட்டம் தாளவாடி வனச்சரகத்தில் ஏராளமான புலிகள், சிறுத்தைகள் உள்ளன. வனத்திலிருந்து வெளியேறும் அவைகள் அவ்வப்போது கிராமத்துக்குள் புகுந்து ஆடு மாடுகளை வேட்டையாடுகின்றன.

இந்த சூழலில், தாளவாடி அடுத்த நெய்தாளபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி வீரபத்ரா (39). இவர் நான்கு மாடுகள், இரண்டு எருமைகள் வளர்த்துவருகிறார். இவரது வீடும், தோட்டமும் ஊரை ஒட்டியுள்ளது. இந்நிலையில் அவரது மாடு, எருமைகளை வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகையில் கட்டி வைத்துவிட்டு நேற்றிரவு தூங்க சென்றார்.

இன்று காலை எழுந்த அவர் கொட்டகைக்கு சென்று பார்த்தபோது மாடு ஒன்று விலங்கு தாக்கி உயிரிழந்திருந்தது. இதுபற்றி அவர் தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் அளித்தார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மாட்டையும், அங்கு பதிவாகி இருந்த விலங்கின் கால் தடங்களையும் ஆய்வு செய்தனர்.

ஊருக்குள் புகுந்த சிறுத்தை

பின்னர் அது சிறுத்தையின் கால்தடம் என்பது வனத்துறையினருக்கு தெரியவந்தது. தாளவாடி, ஜீர்கள்ளி, வனச்சரகத்தில் மட்டும் கடந்த சில மாதங்களாக சிறுத்தையின் நடமாட்டத்தால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: வீட்டின் படுக்கை அறையில் ஹாயாக படுத்திருந்த சிறுத்தை!

Intro:Body:tn_erd_03_sathy_leopard_attack_vis_tn10009

தாளவாடி அருகே ஊருக்குள் புகுந்து மாட்டை கடித்து கொன்ற சிறுத்தை
மலைப்பகுதியில் தொடரும் சிறுதையின் அட்டகாசம் ...


ஈரோடு மாவட்டம் ஆசனூர் வனக்கோட்டம் தாளவாடி வனச்சரகத்தில் ஏராளமான புலி சிறுத்தை உள்ளன. வனத்தில் இருந்து வெளியேறும் சிறுத்தை அவ்வப்போது கிராமத்துக்குள் புகுந்து ஆடு மாடுகளை வேட்டையாடி வருகிறது.இந்நிலையில் தாளவாடி அடுத்த நெய்தாளபுரம் கிராமத்தை சேர்ந்தவர்
வீரபத்ரா (39), விவசாயி இவர் 4 மாடுகள் 2 எருமை வளர்த்து வருகிறார் இவரது வீடும் தோட்டமும் ஊரை ஒட்டி உள்ளது இவர் வீட்டின் பின்புறம் உள்ள மாட்டு கொட்டகையில் கட்டி வைத்து விட்டு தூங்க சென்று விட்டார். இன்று காலை தொழுவத்தில் மாடு இல்லாமல் இருப்பதை பார்த்து தேடியபோது சிறுத்தை தாக்கியதில் மாடு இறந்தது தெரியவந்தது. இது பற்றி தாளவாடி வனத்துக்கு தகவல் அளித்தார் சம்பவயிடத்திக்கு சென்ற வனத்துறையினர் மாட்டையும் அங்கு பதிவாகி இருந்த கால் தடங்களையும் ஆய்வு செய்தனார் அது சிறுத்தையின் கால்தடம் என்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர். வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை தாக்கி மாடு இறந்திருப்பது தெரியவந்தது தாளவாடி, ஜீர்கள்ளி, வனச்சரகத்தில் கடந்த சில மாதங்களாக சிறுத்தையின் தொடர் வேட்டையால் மலைகிராம மக்கள் பீதி அடைந்துள்ளனார்
Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.