ETV Bharat / state

'மகன் படிப்பிற்கான பணத்தை திருட முயற்சித்தால் தாக்கினேன்..!' - கொலையாளி பகீர் வாக்குமூலம் - arrest

ஈரோடு: "மகன் படிப்பிற்காக கடன் வாங்கி வைத்திருந்த பணத்தை பறித்ததால், திருடரை பலமாக தாக்கினேன்" என்று, சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் நடந்த கொலை வழக்கில் கைதான கோபால் வாக்குமூலம் அளித்துள்ளார்.

க்ரைம் ஸ்டோரி
author img

By

Published : Jun 5, 2019, 7:12 PM IST

சத்திய மங்கலம் அருகே புதுபீர்கடவு கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை(45). இவர், கடந்த மே.25 ஆம் தேதி காலை சத்தியமங்கலம் பேருந்து நிலைய வணிக வளாக பகுதியில் பலத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார். இவரை காவல்துறையினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, மறுநாள் சின்னதுரை இறந்தார்.

உடற்கூறாய்வில் உடலில் பலத்த காயம் இருந்ததாகவும், பலமாக தாக்கப்பட்டு உயிரிழந்ததாக தெரியவந்தது. இதையடுத்து சத்தியமங்கலம் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்த வழக்கு தொடர்பாக, சந்தேகத்தின்பேரில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள சாவக்கட்டுபாளையத்தை சேர்ந்த கோபால் (42) என்பவரை பிடித்து விசாரித்தனர். சின்னதுரையை தாக்கி கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

இதுகுறித்து கோபால் அளித்த வாக்குமூலத்தில், "எனது மகனின் படிப்பு செலவிற்காக உறவினரிடம் ரு.50 ஆயிரம் கடனாக பெற்றுக்கொண்டு, மே.25ஆம் தேதி இரவு சத்தியமங்கலம் பேருந்து நிலையம் வந்தேன். ஊருக்கு செல்ல பேருந்து இல்லாததால், அங்கேயே படுத்து உறங்கினேன். இரவு ஒரு மணியளவில் நான் வைத்திருந்த பணப்பையை 3 நபர்கள் பறித்துக்கொண்டு ஓடினர்.

அவர்களை துரத்தும்போது சின்னதுரை மட்டும் சிக்கினார். அவரை பலமாக தாக்கிவிட்டு பணப்பையை பறித்துக்கொண்டு, அதிகாலையில் பஸ் பிடித்து ஊருக்கு சென்றுவிட்டேன். காலையில் பேப்பரை பார்க்கும்போது, நான் அடித்த நபர் இறந்தது தெரியவந்தது. பணத்தை பறிப்பதற்காகவே தாக்கினேன். கொலை செய்யும் எண்ணத்தில் தாக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கோபால் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

சத்திய மங்கலம் அருகே புதுபீர்கடவு கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை(45). இவர், கடந்த மே.25 ஆம் தேதி காலை சத்தியமங்கலம் பேருந்து நிலைய வணிக வளாக பகுதியில் பலத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார். இவரை காவல்துறையினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, மறுநாள் சின்னதுரை இறந்தார்.

உடற்கூறாய்வில் உடலில் பலத்த காயம் இருந்ததாகவும், பலமாக தாக்கப்பட்டு உயிரிழந்ததாக தெரியவந்தது. இதையடுத்து சத்தியமங்கலம் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்த வழக்கு தொடர்பாக, சந்தேகத்தின்பேரில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள சாவக்கட்டுபாளையத்தை சேர்ந்த கோபால் (42) என்பவரை பிடித்து விசாரித்தனர். சின்னதுரையை தாக்கி கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

இதுகுறித்து கோபால் அளித்த வாக்குமூலத்தில், "எனது மகனின் படிப்பு செலவிற்காக உறவினரிடம் ரு.50 ஆயிரம் கடனாக பெற்றுக்கொண்டு, மே.25ஆம் தேதி இரவு சத்தியமங்கலம் பேருந்து நிலையம் வந்தேன். ஊருக்கு செல்ல பேருந்து இல்லாததால், அங்கேயே படுத்து உறங்கினேன். இரவு ஒரு மணியளவில் நான் வைத்திருந்த பணப்பையை 3 நபர்கள் பறித்துக்கொண்டு ஓடினர்.

அவர்களை துரத்தும்போது சின்னதுரை மட்டும் சிக்கினார். அவரை பலமாக தாக்கிவிட்டு பணப்பையை பறித்துக்கொண்டு, அதிகாலையில் பஸ் பிடித்து ஊருக்கு சென்றுவிட்டேன். காலையில் பேப்பரை பார்க்கும்போது, நான் அடித்த நபர் இறந்தது தெரியவந்தது. பணத்தை பறிப்பதற்காகவே தாக்கினேன். கொலை செய்யும் எண்ணத்தில் தாக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கோபால் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.


சத்தியமங்கலம் பஸ்நிலைய வளாகத்தில் பணத்தை பறிக்க முயன்றபோது ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை.  
--
;டி.சாம்ராஜ்,
செய்தியாளர்
சத்தியமங்கலம்
94438 96939, 88257 02216
 

TN_ERD_02_05_SATHY_POLICE_STATION_VIS_TN10009


சத்தியமங்கலம் பஸ்நிலைய வளாகத்தில் பணத்தை பறிக்க முயன்றபோது ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை.


சத்தியமங்கலம் பஸ்நிலைய வளாகத்தில் பணத்தை திருட முயற்சித்த நபர்களிடம் சண்டையிட்டபோது திருட முயன்ற நபர் பலத்த காயம்பட்டு சிகிச்சையில் இருந்தபோது இற்நததால் கொலை வாக்கு பதிவு செய்யப்பட்டு கொலையாளியை போலீசார் கைது செய்தனர். 


கடந்த மாதம் 25 ம் தேதி காலை சத்தியமங்கலம் பஸ்நிலைய வணிக வளாக பகுதியில் பலத்த காயங்களுடன் மயங்கி கிடந்த புதுபீர்கடவு கிராமத்தை சேர்ந்த சின்னதுரை(45) என்பவரை போலீசார் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தபோது கடந்த மாதம் 26 ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில் ஒரு நபர் தாக்கியதில் உயிரிழந்ததாக அறிக்கை வந்ததால் சத்தியமங்கலம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் இதுதொடர்பாக நேற்று காலை சத்தியமங்கலம் & கோபி சாலையில் நின்றிருந்த  திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள சாவக்கட்டுபாளையத்தை சேர்ந்த கோபால் (42) என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது கோபால் சின்னதுரையை தாக்கியது தெரிய வந்தது. இதுகுறித்து கோபால் அளித்த வாக்குமுலம். எனது மகனின் படிப்பு செலவிற்காக கடந்த மாதம் 24 ம் தேதி தாளவாடி சென்று எனது உறவினரிடமிருந்து பணம் ரு.50 ஆயிரம் கடனாக பெற்றுக்கொண்டு அன்றிரவு சத்தியமங்கலம் பஸ்நிலையம் வந்தேன். அப்போது ஊருக்கு செல்ல பஸ் இல்லாததால் பஸ்நிலைய வளாகத்தில் படுத்து உறங்கினேன். இரவு 1 மணியளவில் நான் வைத்திருந்த பணப்பையை 3 நபர்கள் பறித்துக்கொண்டு தப்பியோடினர். இதையடுத்து நான் அவர்களை துரத்தினேன். இதில் ஒரு நபர் மட்டும் கையில் சிக்கினான். அந்நபரை பலமாக தாக்கிவிட்டு அவனிடமிருந்த பணப்பையை பறித்துக்கொண்டு அதிகாலையில் பஸ் பிடித்து ஊரக்கு சென்றுவிட்டேன். இந்நிலையில் போலீசார் என்னை  கைது செய்தனர் என தெரிவித்துள்ளான். இதையடுத்து போலீசார் கோபாலை சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையிலடைத்தனர்.    
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.