சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி பகுதியில் 65 வயதுள்ள மனநலம் பாதிக்கப்பட ஒருவர் கிழிந்த உடை, தாடியுடன் கடந்த இரண்டு மாதமாக ஆதரவற்று சுற்றித்திரிந்துள்ளார்.
அந்த நபர் குறித்து யாரும் கண்டுகொள்ளாத நிலையில், இது குறித்து தகவல் அறிந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் குரு, அந்தோணிராஜ், இளையராஜா, நாகராஜ் ஆகியோர் அந்த முதியவரைச் சந்தித்தனர்.
பின்னர், அவரை அழைத்துச் சென்று கிழிந்த உடைகளைக் களைந்து, குளிக்கவைத்து, புதிய உடைகள் அணிவித்து மருத்துவமனையில் சேர்ந்தனர். தற்போது, அவருக்கு போதிய சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.