ETV Bharat / state

குடிநீர் வழங்காத மாநகராட்சியைக் கண்டித்துக் காலி குடங்களுடன் சாலை மறியல்!

author img

By

Published : May 11, 2019, 2:54 PM IST

திண்டுக்கல்: கடந்த 6 மாத காலமாக குடிநீர் வழங்காத மாநகராட்சியைக் கண்டித்து தலைமைத் தபால் நிலையம் முன்பு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள 13, 14ஆவது வார்டுகளில் உள்ள பகுதிகளுக்கு கடந்த ஆறு மாத காலமாக குடிநீர் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. அதேபோல் ஒரு குடம் குடிநீர் ரூ.30க்கும், உப்புத்தண்ணீர் ரூ.15க்கும் விற்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், மாநகராட்சி குடிநீர் வழங்காததைக் கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் தலைமைத் தபால் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மாநகராட்சி அதிகாரிகள், மறியலில் ஈடுபட்டோரிடம் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் குடிநீர் கிடைக்க முறையாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

30 நிமிடங்களுக்கு மேலாக நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தால், சிலுவத்தூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள 13, 14ஆவது வார்டுகளில் உள்ள பகுதிகளுக்கு கடந்த ஆறு மாத காலமாக குடிநீர் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. அதேபோல் ஒரு குடம் குடிநீர் ரூ.30க்கும், உப்புத்தண்ணீர் ரூ.15க்கும் விற்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், மாநகராட்சி குடிநீர் வழங்காததைக் கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் தலைமைத் தபால் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மாநகராட்சி அதிகாரிகள், மறியலில் ஈடுபட்டோரிடம் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் குடிநீர் கிடைக்க முறையாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

30 நிமிடங்களுக்கு மேலாக நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தால், சிலுவத்தூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Intro:திண்டுக்கல் 11.5.19

திண்டுக்கல்லில் 6 மாதகாலமாக குடிநீர் வழங்காத மாநகராட்சியை கண்டித்து 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்.




Body:திண்டுக்கல் மாநகராட்சி 13 மற்றும் 14 ஆவது வார்டுக்கு உட்பட்ட ஆறுமுகம் சேர்வை சந்து, நடுத்தெரு, தாதா கோனார் சந்து, ஆர்த்தி தியேட்டர் ரோடு ஆகிய பகுதிகளில் கடந்த ஆறு மாத காலமாக மாநகராட்சி சார்பில் குடிநீர் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இதனை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தலைமை தபால் நிலையம் முன்பு 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் ஒரு குடம் குடிநீர் 30 ரூபாய்க்கும், உப்புத்தண்ணீர் 15 ரூபாய்க்கும் விலைக்கு வாங்குவதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் திண்டுக்கல் சிலுவத்தூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் இந்த மறியல் சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக நீடித்தது. பின்னர் பொதுமக்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி முறையாக தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் மறியல் கைவிடப்பட்டது.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.