கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களான காய்கறிகளை வாங்குவது என்று அடிக்கடி இருசக்கர வாகனங்களில் வெளியில் வருகின்றனர். இதனைத் தடுக்கும் வகையில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியான பாத்திமா நகரில் வேடசந்தூர் பேரூராட்சி சார்பாக மலிவு விலையில் நடமாடும் காய்கறி வாகனத்தினை வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி பி பி.பரமசிவம் தொடங்கி வைத்தார்
அதோடு பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மை பணியில் ஈடுபட்டுவரும் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், முகக்கவசங்கள், கையுறைகள், தலைக்கவசம் போன்றவைகளையும் வழங்கினார், மேலும் வேடசந்தூர் சுற்றுப் பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணியினை வேடசந்தூர் தீயணைப்புத்துறை வாகனம் மூலமாக வீதி வீதியாக தெளித்தனர்.