ETV Bharat / state

பழனி அருகே காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரம்

author img

By

Published : Aug 12, 2022, 10:45 PM IST

பழனி அருகே தோட்டங்களுக்குள் குட்டி யானையுடன் சுற்றித்திரியும் காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்

குட்டி யானையுடன் சுற்றித் திரியும் காட்டு யானைகள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரம்
குட்டி யானையுடன் சுற்றித் திரியும் காட்டு யானைகள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரம்

திண்டுக்கல்: பழனியை அடுத்துள்ளது, ஆயக்குடி பேரூராட்சி. மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஆயக்குடி பேரூராட்சியில் வனப்பகுதியை ஒட்டி ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு மா, கொய்யா, சப்போட்டா, தென்னை உள்ளிட்டவை அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளன. இதனால் வனப்பகுதியில் உள்ள காட்டுப்பன்றிகள் மற்றும் காட்டு யானைகள் அவ்வப்போது விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன.

இந்நிலையில் ஆயக்குடி சட்டப்பாறை பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களில் 10க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் முகாமிட்டு உள்ளன. இரண்டு குழுவாகப் பிரிந்து சுற்றிவருகினற்ன. இந்நிலையில் ஆயக்குடி - புதுரோடு பகுதியில் உள்ள தோட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக ஒரு யானைக்கூட்டம் புகுந்து, பயிர்களை நாசம் செய்துவருவதாக ஒட்டன்சத்திரம் வனத்துறையினருக்கு விவசாயிகள் தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஒட்டன்சத்திரம் வனத்துறையினர் யானைகளைக் கண்காணித்து விரட்டும் பணியில் ஈடுபட்டபோது, ஒரு குட்டி யானையுடன் நான்கு பெரிய யானைகள்‌ சுற்றி வருவது தெரியவந்தது.

தொடர்ந்து யானைக்கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர். யானைகள் குட்டியுடன் சுற்றி வருவதால் கடும் கோபத்தில் இருப்பதாகவும், எனவே யானைக் கூட்டத்தை விரட்டும் வரை அப்பகுதியில் யாரும் செல்ல வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பழனி அருகே காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரம்

இதையும் படிங்க:யானைகள் காப்பகமாக அகத்தியர் மலை அறிவிக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன் என முதலமைச்சர் ட்வீட்

திண்டுக்கல்: பழனியை அடுத்துள்ளது, ஆயக்குடி பேரூராட்சி. மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஆயக்குடி பேரூராட்சியில் வனப்பகுதியை ஒட்டி ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு மா, கொய்யா, சப்போட்டா, தென்னை உள்ளிட்டவை அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளன. இதனால் வனப்பகுதியில் உள்ள காட்டுப்பன்றிகள் மற்றும் காட்டு யானைகள் அவ்வப்போது விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன.

இந்நிலையில் ஆயக்குடி சட்டப்பாறை பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களில் 10க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் முகாமிட்டு உள்ளன. இரண்டு குழுவாகப் பிரிந்து சுற்றிவருகினற்ன. இந்நிலையில் ஆயக்குடி - புதுரோடு பகுதியில் உள்ள தோட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக ஒரு யானைக்கூட்டம் புகுந்து, பயிர்களை நாசம் செய்துவருவதாக ஒட்டன்சத்திரம் வனத்துறையினருக்கு விவசாயிகள் தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஒட்டன்சத்திரம் வனத்துறையினர் யானைகளைக் கண்காணித்து விரட்டும் பணியில் ஈடுபட்டபோது, ஒரு குட்டி யானையுடன் நான்கு பெரிய யானைகள்‌ சுற்றி வருவது தெரியவந்தது.

தொடர்ந்து யானைக்கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர். யானைகள் குட்டியுடன் சுற்றி வருவதால் கடும் கோபத்தில் இருப்பதாகவும், எனவே யானைக் கூட்டத்தை விரட்டும் வரை அப்பகுதியில் யாரும் செல்ல வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பழனி அருகே காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரம்

இதையும் படிங்க:யானைகள் காப்பகமாக அகத்தியர் மலை அறிவிக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன் என முதலமைச்சர் ட்வீட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.