தேனியைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவரது மகன் பிரதீப் (25). இவர் ஃபேஸ்புக் வழியாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அடுத்துள்ள ஏரிச்சாலைப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
திருமணமாகி ஓராண்டான நிலையில், நேற்று (மார்ச் 7) ஏரிச்சாலை அருகே உள்ள தனியாருக்குச் சொந்தமான இடத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிகிறது.
இன்று (மார்ச் 8) இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு இது குறித்து தகவல் அளித்தனர். இந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் பிரதீப்பின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.