ETV Bharat / state

பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசிய சமூக விரோதிகள்: போலீஸ் விசாரணை!

author img

By

Published : Oct 27, 2020, 10:24 PM IST

திண்டுக்கல்: பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசிய அடையாளம் தெரியாத சமூக விரோதிகளை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசிய சமூக விரோதிகள்: போலீஸ் விசாரணை!
Dindigul district news

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகேவுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் தந்தை பெரியாரின் சிலையின் மீது சமூக விரோதிகள் சிலர் காவி சாயம் பூசியுள்ளனர்.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இச்சம்பவம் குறித்து ரெட்டியார்சத்திரம் காவல் துறையினர் அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக (இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 153ஏ)-வின் கீழ் ரெட்டியார்சத்திரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்ந்து காவி சாயம் பூசப்பட்ட பெரியார் சிலை அருகே காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகேவுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் தந்தை பெரியாரின் சிலையின் மீது சமூக விரோதிகள் சிலர் காவி சாயம் பூசியுள்ளனர்.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இச்சம்பவம் குறித்து ரெட்டியார்சத்திரம் காவல் துறையினர் அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக (இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 153ஏ)-வின் கீழ் ரெட்டியார்சத்திரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்ந்து காவி சாயம் பூசப்பட்ட பெரியார் சிலை அருகே காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.