ETV Bharat / state

அரசுப் பள்ளிகளை மூடினால் இலவசக் கல்வியே இருக்காது -ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு - மத்திய அரசால் பறிபோகும் இலவசக் கல்வி

திண்டுக்கல்: அரசுப் பள்ளிகளை மூடிவிட்டால் ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவசக் கல்வியே கிடைக்காது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

g.ramakrishnan
author img

By

Published : Nov 23, 2019, 7:38 PM IST

திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்க மாநாடு இன்று நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்து 400க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளை மூட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அவ்வாறு அரசு பள்ளிகளை மூடுவதால் இனி இலவச கல்விக்கு சாத்தியமில்லை என்ற நிலை உருவாகும்.

மத்திய அரசால் பறிபோகும் இலவசக் கல்வி

அரசுப் பள்ளிகளை மூடுவதால் பட்டியலின, பிற்படுத்தபட்ட, மிகவும் பிற்படுத்தபட்ட மற்றும் பழங்குடியின ஏழை, எளிய மாணவர்களின் கல்வி பாதிக்கும். மத்திய பாஜக அரசு திட்ட கமிஷனை கலைத்து விட்டு நிதி ஆயோக்கை கொண்டு வந்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளை மூட அரசு முயற்சிக்கிறது. அதேபோல் புதிய கல்விக் கொள்கையில் 20 மாணவர்களுக்கு குறைவான பள்ளிகளை மூடலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது மிகவும் தவறானது, அரசுப் பள்ளிகள் இல்லையென்றால் இலவசக் கல்வி என்ற ஒன்றே இருக்காது.

தனியார் பள்ளிகள் இலவசக் கல்வியை வழங்கிடுமா? ஆதலால் அரசு பள்ளிகளை மூடுவதை கைவிட்டு அரசு பள்ளியை மேம்படுத்தி செயலாற்ற செய்திட வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: பாலத்தை உடைத்து பறந்த கார், ஒருவர் மரணம் - வீடியோ

திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்க மாநாடு இன்று நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்து 400க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளை மூட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அவ்வாறு அரசு பள்ளிகளை மூடுவதால் இனி இலவச கல்விக்கு சாத்தியமில்லை என்ற நிலை உருவாகும்.

மத்திய அரசால் பறிபோகும் இலவசக் கல்வி

அரசுப் பள்ளிகளை மூடுவதால் பட்டியலின, பிற்படுத்தபட்ட, மிகவும் பிற்படுத்தபட்ட மற்றும் பழங்குடியின ஏழை, எளிய மாணவர்களின் கல்வி பாதிக்கும். மத்திய பாஜக அரசு திட்ட கமிஷனை கலைத்து விட்டு நிதி ஆயோக்கை கொண்டு வந்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளை மூட அரசு முயற்சிக்கிறது. அதேபோல் புதிய கல்விக் கொள்கையில் 20 மாணவர்களுக்கு குறைவான பள்ளிகளை மூடலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது மிகவும் தவறானது, அரசுப் பள்ளிகள் இல்லையென்றால் இலவசக் கல்வி என்ற ஒன்றே இருக்காது.

தனியார் பள்ளிகள் இலவசக் கல்வியை வழங்கிடுமா? ஆதலால் அரசு பள்ளிகளை மூடுவதை கைவிட்டு அரசு பள்ளியை மேம்படுத்தி செயலாற்ற செய்திட வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: பாலத்தை உடைத்து பறந்த கார், ஒருவர் மரணம் - வீடியோ

Intro:திண்டுக்கல் 23.11.19

அரசு பள்ளிகளை மூட செய்தால் இலவச கல்வியே இருக்காது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் திண்டுக்கல்லில் பேட்டிBody:திண்டுக்கல்லில் பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்க மாநாடு இன்று நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், தமிழகம் முழுவதும் 3400க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளை மூட அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. அவ்வாறு அரசு பள்ளிகளை மூடுவதால் இனி இலவச கல்விக்கு சாத்தியமில்லை என்ற நிலை உருவாகும். அரசு பள்ளிகளை மூடுவதால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தபட்ட, மிகவும் பிற்படுத்தபட்ட மற்றும் பழங்குடியை சேர்ந்த ஏழை, எளிய மாணவர்களின் கல்வி பாதிக்கும்.

மேலும், மத்திய பாஜக அரசு திட்ட கமிஷனை கலைத்து விட்டு நிதி ஆயோக் கொண்டு வந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளை மூட அரசு முயற்சிக்கிறது. அதேபோல் புதிய கல்வி கொள்கையில் 20 மாணவர்களுக்கு குறைவான பள்ளிகளை மூடலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது மிகவும் தவறானது அரசு பள்ளிகள் இல்லையென்றால் இலவச கல்வி என்ற ஓன்றே இருக்காது. தனியார் பள்ளிகள் இலவச கல்வியை வழங்கிடுமா.
ஆதலால் அரசு பள்ளிகளை மூடுவதை கைவிட்டு விட்டு அரசு பள்ளியை மேம்படுத்தி செயலாற்ற செய்திட வேண்டும் என்று கூறினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.