ETV Bharat / state

சந்தேகத்திற்கிடமான வகையில் சிறுமி மரணம்: திண்டுக்கல் அருகே சோகம்

author img

By

Published : Feb 3, 2020, 2:56 PM IST

திண்டுக்கல்: சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்த ஆறு வயது சிறுமியின் உடற்கூறு ஆய்வின்போது, காணொலி பதிவுசெய்ய வேண்டும் எனக் கூறி சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.

child
child

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் உள்ள ஒரு தம்பதியினர் தனியார் நூற்பாலையில் வேலை செய்துவருகின்றனர். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இதில் சிறுமி ஒன்றாம் வகுப்பு படித்துவந்துள்ளார். இந்நிலையில் நேற்று சிறுமியின் தாய் வேலைக்குச் சென்றதையடுத்து, சிறுமி வெளியில் விளையாடிவந்துள்ளார். இவர்களது வீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால் தோட்டத்தின் அருகே சிறுமி சென்றுள்ளார். அப்போது அவ்விடத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் சிறுமி உயிரிழந்துள்ளார்.

'போக்சோ சட்டத்தில் கைது செய்க’

சிறுமியின் சந்தேகத்திற்கிடமான இறப்புக்கு போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என சிறுமியின் உறவினர்கள் வலியுறுத்தினர்.

மேலும் உடற்கூறாய்வின்போது காணொலி பதிவுசெய்ய வேண்டும் எனவும், அவர்கள் கோரிக்கைவைத்தனர். இதனிடையே திமுக துணைப் பொதுச்செயலாளர் பெரியசாமி பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தார்.

சந்தேகத்திற்கிடமான வகையில் சிறுமி மரணம் - கண்ணீர் விடும் பெற்றோர்

மேலும் சிறுமியின் இறப்பிற்கு நீதி கிடைக்க கண்டிப்பாக திமுக துணை நிற்கும் என்றும் அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இவ்விவகாரம் தொடர்பாக போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனக் காவல் துறையினரிடம் அவர் கூறினார்.

இதையும் படிங்க: சீனாவிலிருந்து வந்த திருவாரூர் நபருக்கு கொரோனா வைரஸ்...?

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் உள்ள ஒரு தம்பதியினர் தனியார் நூற்பாலையில் வேலை செய்துவருகின்றனர். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இதில் சிறுமி ஒன்றாம் வகுப்பு படித்துவந்துள்ளார். இந்நிலையில் நேற்று சிறுமியின் தாய் வேலைக்குச் சென்றதையடுத்து, சிறுமி வெளியில் விளையாடிவந்துள்ளார். இவர்களது வீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால் தோட்டத்தின் அருகே சிறுமி சென்றுள்ளார். அப்போது அவ்விடத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் சிறுமி உயிரிழந்துள்ளார்.

'போக்சோ சட்டத்தில் கைது செய்க’

சிறுமியின் சந்தேகத்திற்கிடமான இறப்புக்கு போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என சிறுமியின் உறவினர்கள் வலியுறுத்தினர்.

மேலும் உடற்கூறாய்வின்போது காணொலி பதிவுசெய்ய வேண்டும் எனவும், அவர்கள் கோரிக்கைவைத்தனர். இதனிடையே திமுக துணைப் பொதுச்செயலாளர் பெரியசாமி பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தார்.

சந்தேகத்திற்கிடமான வகையில் சிறுமி மரணம் - கண்ணீர் விடும் பெற்றோர்

மேலும் சிறுமியின் இறப்பிற்கு நீதி கிடைக்க கண்டிப்பாக திமுக துணை நிற்கும் என்றும் அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இவ்விவகாரம் தொடர்பாக போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனக் காவல் துறையினரிடம் அவர் கூறினார்.

இதையும் படிங்க: சீனாவிலிருந்து வந்த திருவாரூர் நபருக்கு கொரோனா வைரஸ்...?

Intro:திண்டுக்கல் 3.2.20

சிறுமியின் மரணத்தில் மர்மம் இருப்பதால் உடற்கூறு ஆய்வின் போது வீடியோ பதிவு செய்ய வேண்டும் என கோரி சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்


Body:திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் உள்ள தம்பதியினர் தனியார் தம்பதியினர் நூற்பாலையில் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகனும் 6 வயதில் ஒரு மகளும் என இரண்டு குழந்தைகள் உள்ளது. இதில் சிறுமி ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று சிறுமியின் தாய் வேலைக்குச் செல்லும் முன்பு தனது குழந்தைக்கு தலைவாரி விட்டு விளையாட விட்டுச் சென்றுள்ளார். இதன்பின்னர் சிறுமி வீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால் தோட்டத்தின் அருகே சென்றுள்ளார். அப்போது மர்மமான முறையில் இறந்துகிடந்ததாக கூறப்படுகிறது.

மேலும் டிராக்டரில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக கூறுவது தவறு எனவே போஸ்கோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர் மேலும் உடல் கூறாய்வின் போது வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். இதனிடையே திமுக துணைப் பொதுச் செயலாளர் பெரியசாமி அவர்கள் நேரில் வந்து வருத்தம் தெரிவித்தார்.

மேலும் இதற்கு நீதி கிடைக்க கண்டிப்பாக திமுக துணை நிற்கும் என தெரிவித்தார். இதை தொடர்ந்து மருத்துவரை சந்தித்து வெளியூர் மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் மற்றும் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் என கூறினார். தொடர்ந்து காவல் துறையினரிடம் வழக்கு பதிவு செய்யப்பட்ட பிரிவு குறித்து பேசினார். உடனடியாக போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கூறினார்



Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.