ETV Bharat / state

குடிநீர் வழங்குவது குறித்த ஆய்வுக் கூட்டம்

திண்டுக்கல்: அனைத்து பகுதி மக்களுக்கும் சீரான குடிநீர் வழங்குவது குறித்த ஆய்வுக்கூட்டம் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.

author img

By

Published : Jun 22, 2019, 11:36 PM IST

ஆய்வுக் கூட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தின் பல பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் குழந்தைகள், பெண்கள், வேலைக்குச் செல்வோர் உள்ளிட்ட பலரும் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். பல பகுதிகளில் மக்கள் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர் சந்திப்பு

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீர் வழங்குவது குறித்த ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது.

இதில், திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்வதில் உள்ள குறைபாடுகள், குடிநீர் குழாய்களில் ஏற்பட்டுள்ள பழுது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், நகரின் எந்தெந்த பகுதிகளில் குடிநீர் தேவை உள்ளது என்பதை அறிந்து தொய்வின்றி குடிநீர் வழங்கும் பணியினை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தின் பல பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் குழந்தைகள், பெண்கள், வேலைக்குச் செல்வோர் உள்ளிட்ட பலரும் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். பல பகுதிகளில் மக்கள் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர் சந்திப்பு

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீர் வழங்குவது குறித்த ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது.

இதில், திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்வதில் உள்ள குறைபாடுகள், குடிநீர் குழாய்களில் ஏற்பட்டுள்ள பழுது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், நகரின் எந்தெந்த பகுதிகளில் குடிநீர் தேவை உள்ளது என்பதை அறிந்து தொய்வின்றி குடிநீர் வழங்கும் பணியினை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

Intro:திண்டுக்கல் 22.6.19

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதி மக்களுக்கும் சீரான குடிநீர் வழங்குவது குறித்த ஆய்வு கூட்டம் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.


Body:திண்டுக்கல் மாவட்டத்தின் பல பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் பல பகுதிகளில் மக்கள் விலைக்கு தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீர் வழங்குவது குறித்த ஆய்வுக் கூட்டம் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது.

இதில் திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்வதில் உள்ள குறைபாடுகள் மற்றும் குடிநீர் குழாய்களில் ஏற்பட்டுள்ள பழுது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், நகரின் எந்தெந்த பகுதிகளில் குடிநீர் தேவை உள்ளது என்பதை அறிந்து தொய்வின்றி குடிநீர் வழங்கும் பணியினை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இதனிடையே, இக்கூட்டத்தின்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் தவறுதலாக அவிழ்ந்து விழுந்தது. இதனைக் கண்ட அதிகாரிகள் ஜெயலலிதாவின் புகைப்படத்தை மிகுந்த சிரம் எடுத்து சுவற்றில் மாட்டினார். ஆனால் அவர் தனது ஆட்சியில் சிரத்தை எடுத்து செய்த மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை முன்னெடுப்பதை விடுத்து தமிழக அமைச்சர்கள் புரோகிதர்கள் போல யாகம் வளர்த்து வருகின்றனர். இதனால் மறைந்த முதல்வரின் புகைப்படத்தை வைத்தால் மட்டும் அவரது தலைமையிலான ஆட்சி ஆகிவிடுமா என்ற கேள்வி எழுகிறது.




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.