ETV Bharat / state

'உயிர் காக்கும் மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கக் கூடாது'

திண்டுக்கல்: உயிர் காக்கும் மருந்துப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கக் கூடாது என தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் தலைவர் சத்திய நாராயணன் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Oct 6, 2019, 1:48 AM IST

medical Representative association meeting

தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் சத்திய நாராயணன் தலைமை தாங்கினார்.

கூட்டம் முடிந்தபின் செய்தியாளர்களிடம் பேசிய சத்திய நாராயணன், "மருத்துவ விற்பனை பிரதிநிதிகள் நீண்ட நாட்களாக அரசிடம் ஒரு கோரிக்கை வைத்துவருகின்றனர். ஊழியர்களின் அடிப்படை உரிமையான எட்டு மணி நேரம் வேலையை உறுதிசெய்ய வேண்டும் என்பதே அது. ஆனால் அரசு அந்தக் கோரிக்கையை ஏற்காமல் தட்டிக் கழித்துவருகிறது.

மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்க தலைவர் சத்திய நாராயணன்

தமிழ்நாடு அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தை எதிர்த்து அனைத்து மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களும் கூட்டாக வழக்குத் தொடர்ந்துள்ளன. நிலுவையில் உள்ள இவ்வழக்கை ஏற்று நடத்த வேண்டிய தமிழ்நாடு அரசோ மெத்தனமாக உள்ளது. மருந்துகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி 2016ஆம் ஆண்டுக்குப்பிறகு பல மடங்கு உயர்ந்துள்ளது.

உயிர் காக்கும் மருந்துப் பொருட்களுக்கு அதிகப்படியான ஜிஎஸ்டி வரி விதித்திருப்பது, நம் நாட்டிற்குச் செய்த துக்ககரமான செயலாகும். மருந்துப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கக் கூடாது என்பதே எங்கள் கருத்து. மேலும், மோடி அரசு பன்னாட்டு நிறுவனங்களுக்குத் துணை போவதிலேயே குறியாக உள்ளது. இதனால் வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து மருந்துகள் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. அதனைத் தடுத்து நிறுத்தக்கோரி போராட்டம் நடத்தவுள்ளோம்" என்றார்.

இதையும் படிங்க: கோவை குண்டுவெடிப்பு: குற்றவாளி குறித்து தகவல் அளித்தால் தக்க சன்மானம்!

தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் சத்திய நாராயணன் தலைமை தாங்கினார்.

கூட்டம் முடிந்தபின் செய்தியாளர்களிடம் பேசிய சத்திய நாராயணன், "மருத்துவ விற்பனை பிரதிநிதிகள் நீண்ட நாட்களாக அரசிடம் ஒரு கோரிக்கை வைத்துவருகின்றனர். ஊழியர்களின் அடிப்படை உரிமையான எட்டு மணி நேரம் வேலையை உறுதிசெய்ய வேண்டும் என்பதே அது. ஆனால் அரசு அந்தக் கோரிக்கையை ஏற்காமல் தட்டிக் கழித்துவருகிறது.

மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்க தலைவர் சத்திய நாராயணன்

தமிழ்நாடு அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தை எதிர்த்து அனைத்து மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களும் கூட்டாக வழக்குத் தொடர்ந்துள்ளன. நிலுவையில் உள்ள இவ்வழக்கை ஏற்று நடத்த வேண்டிய தமிழ்நாடு அரசோ மெத்தனமாக உள்ளது. மருந்துகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி 2016ஆம் ஆண்டுக்குப்பிறகு பல மடங்கு உயர்ந்துள்ளது.

உயிர் காக்கும் மருந்துப் பொருட்களுக்கு அதிகப்படியான ஜிஎஸ்டி வரி விதித்திருப்பது, நம் நாட்டிற்குச் செய்த துக்ககரமான செயலாகும். மருந்துப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கக் கூடாது என்பதே எங்கள் கருத்து. மேலும், மோடி அரசு பன்னாட்டு நிறுவனங்களுக்குத் துணை போவதிலேயே குறியாக உள்ளது. இதனால் வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து மருந்துகள் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. அதனைத் தடுத்து நிறுத்தக்கோரி போராட்டம் நடத்தவுள்ளோம்" என்றார்.

இதையும் படிங்க: கோவை குண்டுவெடிப்பு: குற்றவாளி குறித்து தகவல் அளித்தால் தக்க சன்மானம்!

Intro:திண்டுக்கல் 05.10.2019

உயிர் காக்கும் மருந்து பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு விதித்திருப்பது தேசத்திற்கு துக்ககரமான செயலாகும்.

Body:திண்டுக்கல்லில் நடைபெற்ற தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்க மாநில பொதுக்குழுக்கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்ம் மாநில தலைவர் சத்தியநாராயணன் தலைமையில் நடைபெற்றது.

மாநில தலைவர் சத்தியநாராயணன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, 52 வருட அனுபவம் உள்ள எங்கள் சங்க உறுப்பினர்களுக்கு அரசு அடிப்படை உரிமைகளான 8 மணி நேர வேலை, குறைந்தபட்ச ஊதியம் ஆகியவைகளை வழங்க மறுத்து வருகின்றது. இது குறித்து அனைத்து மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் கூட்டாக வழக்கு தொடர்ந்துள்ளது. இதை ஏற்று நடத்த வேண்டிய தமிழக அரசு மெத்தனமாக உள்ளது.

ஜிஎஸ்டி வரி என்பது 2016க்கு பிறகு பல மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக உயிர் காக்கும் மருந்து பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதித்திருப்பது நாட்டிற்கே துக்கரமான ஒரு செயலாகும். மேலும் மோடி அரசு பன்னாட்டு நிறுவனங்களுக்கு துணை போவதிலேயே குறியாக உள்ளனர். இதனால் வெளி நாட்டு நிறுவனங்கலிளிருந்து மருந்துகளை இறக்குமதி செய்வதை தடுத்து நிறுத்த கோரி போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்.

இக்கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி,அகில இந்திய தலைவர் ரமேஷ்சுந்தர்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.