ETV Bharat / state

'அம்மன் கோயில் கூலும், அல்லா கோயில் நோன்பு கஞ்சியும் அதிமுகவிற்கு ஒன்றுதான்' - திண்டுக்கல் சீனிவாசன்

author img

By

Published : Jan 22, 2020, 8:02 AM IST

திண்டுக்கல்: அதிமுக சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல; அம்மன் கோயில் கூலும், அல்லாஹ் கோயில் நோன்பு கஞ்சியும் அதிமுகவிற்கு ஒன்றுதான் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

dindigul srinivasan
dindigul srinivasan

திண்டுக்கல்லில் எம்ஜிஆரின் 150ஆவது பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு மணிக்கூண்டு அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த அதிமுக பேச்சாளர்கள் பலரும் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், "திமுக என்ற கட்சி இன்று இருப்பதற்கு காரணமே புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தான். திமுக ஆட்சியில் அமர காரணமானவர் எம்ஜிஆர் என்று அறிஞர் அண்ணாவே கூறியுள்ளார். அறிஞர் அண்ணாவின் மறைவிற்குப் பிறகு, நாவலர் நெடுஞ்செழியன் முதலமைச்சர் ஆவார் என்று எதிர்பார்த்த நிலையில், கருணாநிதி தனது குள்ளநரி மூளையைப் பயன்படுத்தி, எம்ஜிஆரின் உதவியோடு முதலமைச்சர் பதவி வகித்தார். இவையனைத்தும் வரலாறு.

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் நியாயமில்லை என்று திமுக தலைவர் கூறுகிறார். உண்மையில் ஸ்டாலினுக்கு ஆண்மை இருந்தால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலைச் சந்திக்கத் தயாரா? உள்ளாட்சித் தேர்தல் தாமதமானதற்கு காரணமே திமுக தான். தற்போது, திமுக, அதிமுகவை சிறுபான்மையினருக்கு எதிரான கட்சியாக சித்தரிக்க முயற்சிக்கிறது.

திமுகவை விமர்சித்துப் பேசும் திண்டுக்கல் சீனிவாசன்

ஊடகவியலாளர்களுடன் மாற்றுப் பாலினத்தவர்கள் கலந்துரையாடல்!

ஆனால், நாங்கள் எப்போதும் சிறுபான்மை மக்களோடு மக்களாக வாழ்பவர்கள். எங்களைப் பொறுத்தவரை அம்மன் கோயில் கூலும், அல்லாஹ் கோவில் நோன்பு கஞ்சியும் ஒன்று தான். எங்களுக்கு எந்த வேறுபாடும் கிடையாது" என்றார்.

திண்டுக்கல்லில் எம்ஜிஆரின் 150ஆவது பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு மணிக்கூண்டு அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த அதிமுக பேச்சாளர்கள் பலரும் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், "திமுக என்ற கட்சி இன்று இருப்பதற்கு காரணமே புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தான். திமுக ஆட்சியில் அமர காரணமானவர் எம்ஜிஆர் என்று அறிஞர் அண்ணாவே கூறியுள்ளார். அறிஞர் அண்ணாவின் மறைவிற்குப் பிறகு, நாவலர் நெடுஞ்செழியன் முதலமைச்சர் ஆவார் என்று எதிர்பார்த்த நிலையில், கருணாநிதி தனது குள்ளநரி மூளையைப் பயன்படுத்தி, எம்ஜிஆரின் உதவியோடு முதலமைச்சர் பதவி வகித்தார். இவையனைத்தும் வரலாறு.

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் நியாயமில்லை என்று திமுக தலைவர் கூறுகிறார். உண்மையில் ஸ்டாலினுக்கு ஆண்மை இருந்தால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலைச் சந்திக்கத் தயாரா? உள்ளாட்சித் தேர்தல் தாமதமானதற்கு காரணமே திமுக தான். தற்போது, திமுக, அதிமுகவை சிறுபான்மையினருக்கு எதிரான கட்சியாக சித்தரிக்க முயற்சிக்கிறது.

திமுகவை விமர்சித்துப் பேசும் திண்டுக்கல் சீனிவாசன்

ஊடகவியலாளர்களுடன் மாற்றுப் பாலினத்தவர்கள் கலந்துரையாடல்!

ஆனால், நாங்கள் எப்போதும் சிறுபான்மை மக்களோடு மக்களாக வாழ்பவர்கள். எங்களைப் பொறுத்தவரை அம்மன் கோயில் கூலும், அல்லாஹ் கோவில் நோன்பு கஞ்சியும் ஒன்று தான். எங்களுக்கு எந்த வேறுபாடும் கிடையாது" என்றார்.

Intro:திண்டுக்கல் 21.1.20

அம்மன் கோவில் கூலும், அல்லா கோயில் நோன்பு கஞ்சியும் அதிமுகவிற்கு ஒன்றுதான் : பஞ்ச் டயலாக் விட்ட திண்டுக்கல் சீனிவாசன்


Body:திண்டுக்கல்லில் எம்ஜிஆரின் 150வது பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு மணிக்கூண்டு அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் தமிழகம் பல்வேறு மாவட்டங்களை சார்ந்த அதிமுக பேச்சாளர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில், திமுக என்ற கட்சி இன்று இருப்பதற்கு காரணமே புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தான். ஏனெனில் திமுக ஆட்சியில் அமர காரணமானவர் எம்ஜிஆர் என்று அறிஞர் அண்ணாவே கூறியுள்ளார். அறிஞர் அண்ணாவின் மறைவிற்கு பிறகு நாவலர் நெடுஞ்செழியன் முதலமைச்சர் ஆவார் என்று எதிர்பார்த்த நிலையில் கருணாநிதி எம்ஜிஆரின் காலில் விழுந்து தனக்கு முதல்வர் பதவியை தரும்படி கேட்டார். அதற்கிணங்க எம்ஜிஆர் நாவலரிடம் பேசி கருணாநிதி முதல்வராக வழிவகுத்தார். இது அனைத்தும் வரலாறு.

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் நியாயமில்லை என்று திமுக தலைவர் கூறுகிறார். உண்மையில் ஸ்டாலினுக்கு ஆண்மை இருந்தால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்திக்க தயாரா? உள்ளாட்சி தேர்தல் தாமதம் ஆனதற்கு காரணமே திமுக தான். அவர்கள்தான் தேர்தலை நிறுத்துவதற்கான எல்லா வேலைகளையும் செய்தனர். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே தேர்தல் நடந்ததே தவிர திமுகவின் உத்தரவில் எதுவும் இங்கு நடைபெறவில்லை.

தற்போது திமுக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை சிறுபான்மை மக்களுக்கு எதிரான கட்சியாக சித்தரிக்கும் முயற்சிக்கிறது. ஆனால் நாங்கள் எப்போதும் சிறுபான்மை மக்களோடு மக்களாக வாழ்பவர்கள். எங்களை பொருத்தவரை அம்மன் கோவில் கூலும், அல்லாஹ் கோவில் நோன்பு கஞ்சியும் ஒன்று தான். எங்களுக்கு எந்த வேறுபாடும் கிடையாது. சிறுபான்மை மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் முதலாவதாக அதிமுக அங்கு நிற்கும் அதே போல நாங்கள் மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டிய தேவை மட்டுமே உள்ளது அடிமையாக இருக்க வேண்டிய அவசியம் அதிமுகவிற்கு இல்லை என்று கூறினார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.