ETV Bharat / state

ஆதித்யா எல்-1ல் இருந்து சூரியனை பற்றி விவரங்கள் விரைவில்... வானியற்பியல் ஆய்வக இயக்குநர் தகவல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 8, 2023, 4:19 PM IST

ADITHYA L1: இரண்டு வாரங்களில் ஆதித்யா எல் 1 விண்கலத்தில் இருந்து கொரோனா கிராப் தரவுகள் இஸ்ரோவுக்கு கிடைக்கப்பெறும் என, இந்திய வானியற்பியல் ஆய்வக இயக்குநர் அன்னபூரணி சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

Indian Astrophysical Laboratory Director said data from Aditya L1 will be available to ISRO soon
ஆதித்யா எல்-1இல் இருந்து விரைவில் தரவு கிடைக்கும்
ஆதித்யா எல்-1இல் இருந்து விரைவில் தரவு கிடைக்கும்

திண்டுக்கல்: கொடைக்கானல் வான் இயற்பியல் ஆய்வகத்தில் உள்ள, அருங்காட்சியகத்தில், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொது மக்கள் சூரியனைக் காண்பதற்காக, பிரத்தியேக தொலைநோக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை இந்திய வான் இயற்பியல் ஆய்வக இயக்குநர் அன்னபூரணி சுப்ரமணியம் திறந்து வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "இரண்டு வாரங்களில், ஆதித்யா எல் 1 விண்கலத்தில் இருந்து, கொரோனா கிராப் தரவுகள், இஸ்ரோவிற்கு கிடைக்கப்பெறும் எனத் தகவல் அளித்தார். கடந்த 20 ஆண்டுகளில், இந்திய விண்வெளித் துறை, பல சாதனைகள் புரிந்து உள்ளதாகவும், பெருமிதம் கூறினார்.

உதாரணமாகச் சந்திரயான், ஆதித்யா போன்ற விண்கலங்களை, வெற்றிகரமாக இந்திய விண்வெளித்துறை ஏவி, சாதனை புரிந்துள்ளதாகக் கூறினார். தமிழ்நாட்டில், காவலூரில் புதிய வான் இயற்பியல் ஆய்வகம் அமைத்துள்ளதாகவும், லடாக் பகுதியில், புதிய வான் இயற்பியல் ஆய்வகம், அமைக்க உள்ளதாகவும் கூறிய அவர், 60 மீட்டர் அகலமுள்ள கண்ணாடியில், புதிய பிரம்மாண்ட தொலைநோக்கியை, இந்திய வானியற்பியல் ஆய்வக விஞ்ஞானிகள் வடிவமைத்து வருவதாகவும் தகவல் அளித்தார்.

கொடைக்கானல் வான் இயற்பியல் ஆய்வகத்தில் புதிய கோளரங்கம் அமைக்கக் கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளதாகவும், புதிய கோளரங்கம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து நினைவு நாள்: SMRITIKA நினைவு சின்னம் திறப்பு.. சிறப்பு தொகுப்பு!

ஆதித்யா எல்-1இல் இருந்து விரைவில் தரவு கிடைக்கும்

திண்டுக்கல்: கொடைக்கானல் வான் இயற்பியல் ஆய்வகத்தில் உள்ள, அருங்காட்சியகத்தில், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொது மக்கள் சூரியனைக் காண்பதற்காக, பிரத்தியேக தொலைநோக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை இந்திய வான் இயற்பியல் ஆய்வக இயக்குநர் அன்னபூரணி சுப்ரமணியம் திறந்து வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "இரண்டு வாரங்களில், ஆதித்யா எல் 1 விண்கலத்தில் இருந்து, கொரோனா கிராப் தரவுகள், இஸ்ரோவிற்கு கிடைக்கப்பெறும் எனத் தகவல் அளித்தார். கடந்த 20 ஆண்டுகளில், இந்திய விண்வெளித் துறை, பல சாதனைகள் புரிந்து உள்ளதாகவும், பெருமிதம் கூறினார்.

உதாரணமாகச் சந்திரயான், ஆதித்யா போன்ற விண்கலங்களை, வெற்றிகரமாக இந்திய விண்வெளித்துறை ஏவி, சாதனை புரிந்துள்ளதாகக் கூறினார். தமிழ்நாட்டில், காவலூரில் புதிய வான் இயற்பியல் ஆய்வகம் அமைத்துள்ளதாகவும், லடாக் பகுதியில், புதிய வான் இயற்பியல் ஆய்வகம், அமைக்க உள்ளதாகவும் கூறிய அவர், 60 மீட்டர் அகலமுள்ள கண்ணாடியில், புதிய பிரம்மாண்ட தொலைநோக்கியை, இந்திய வானியற்பியல் ஆய்வக விஞ்ஞானிகள் வடிவமைத்து வருவதாகவும் தகவல் அளித்தார்.

கொடைக்கானல் வான் இயற்பியல் ஆய்வகத்தில் புதிய கோளரங்கம் அமைக்கக் கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளதாகவும், புதிய கோளரங்கம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து நினைவு நாள்: SMRITIKA நினைவு சின்னம் திறப்பு.. சிறப்பு தொகுப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.